Tuesday, June 30, 2009

சொப்பன வாழ்வில் மகிழ்ந்து. . .

madoff

கைப்பொருள்
கையாடின பொருளானால்
கைவிலங்கு கிட்டும்
கைக்கும் !!
சிறகொடிந்த வாழ்க்கையாகி
சிறுகச் சிறுக
சிறை வாழ்வு கைக்கும் !!

திரவியம் பெருக்க
திரளாய் தேவை உழைப்பு !!
வெற்றிக்கு அதுவன்றி இல்லை
வேறோர் அழைப்பு !!

Robbing Peter & Paying Paul
என சரித்திரம் படைத்தால்.....
கடைத் தேங்காயை
வழிப் பிள்ளையாருக்கு உடைத்தால்....

காராக்கிருகம் போவீர்
கம்பி எண்ண !
மறவாதீர் அதனை
மனதார எண்ண !!

பெரும் லாபம் எனும்
பெரும் தாபத்தில்
பெரும்பான்மையினர் வாழ்கின்றார் !!
போட்ட பொருள்
போய் விட்டதெனில்
போதும் பெருந்துயரில் ஆழ்கின்றார் !!

பரவலாக பலதரப்பட்ட மக்களை
பலவாறு வாட்டுகின்றது
பணத் தட்டுப்பாடு !!
அடிப்படைக் காரணம்
அவர் மறந்த
மனக் கட்டுப்பாடு !!

மானுடமே !!
கடனின்றி வாழப் பழகு !!
கணமும் அதுவே அழகு !!

If you are better off...
You don’t need Madoff !!

Labels: , , ,

Monday, June 22, 2009

133 * 10 = 1330

thiruvalluvar

அவன் தாடி வைத்தவன் !!
அறத்தை
அறத்துப் பாலாக
அழகுறப் பாடி வைத்தவன் !!

”யாமறிந்த புலவரிலே” என
யாத்தான் அவன் புகழை
எட்டையபுரத்தான் !!
எவர்க்கும் அஞ்சா திறத்தான் !!

அவ் வரியில்
அவன் நடுவானவன் !!

எழு சீர் எழுத்தில்
எண்ணற்ற அறச் சிந்தையை
என்றும் அகத்தே
நடுவா னவன் !!

பொழுதும் அவனுக்கு
பொருள் என்பது
பொருளல்ல !!
அறிந்தார் உரைப்பர்
அவ்வுணர்வினும் சிறந்ததோர்
அருளல்ல !!

அரசியல் முதல்
அன்றாட வாழ்வு வரை
அகற்றினான் அனேகர்க்கு
அறியாமை இருளை !!

பொருட் பால் காதலை
பொருட்படுத்த லாகாதென
பொருட்பாலில் வைத்தான்
பொழுதும் போற்றத்தக்க
பொருளை !!

அவனது வாக்கை..
அர்த்தமுள்ள நோக்கை..

அண்மைக் காலமாய்
அவனியோர்
அனுதினம் நாவில்
அதிகம் வைப்பதில்லை !!
ஆயினும் அவை
ஆதிநாள் முதல் பொய்ப்பதில்லை !!

ஆயிரத்து முந்நூற்று முப்பதாக
ஆங்கண் அவன்
ஆற அமரப் பாடியதுள்

அறம் பொருள் இன்பம்
அடக்கம் !!
அதனில் அவன்
அதிகம் பாடியது
அன்றாட வாழ்வில் நாம்
அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய
அடக்கம் !!

”யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு !! “

”அடக்கமுடைமை”யில் வருகிறது
அப் பா !!
அடக்கத்தின் தேவையை
அறுதியிட...

எப் பா எந்நாள் வரினும்
அப் பா அவற்றுக்கு
அப்பா !!

அர்த்தமுள்ள அம் மொழி
அன்பன் வள்ளுவனது
அருள் வாக்கு !!

இதைப் படிக்கட்டும்
இனியாகிலும்
இறுமாப்புடை
”இளைய தளபதி” யின்
இழிந்த நாக்கு !!



தூர எறிய வேண்டியவரை
தூக்கிக் கொண்டாடுகிறது
தூய தமிழ் நாடு !!
அட்டையிலும் போடுகிறது
அத்தகையோனை
அனேக தமிழ் ஏடு !!

தமிழ் நாட்டிலா இத்தகைய
தரக் கேடு ?
அன்றாட வாழ்வில்
அத்தமித்ததா
அறக் கோட்பாடு ?!

Labels: , ,

Wednesday, June 17, 2009

"அன்பாலே அழகான" அந்நாள். . .

pasanga_picture

சீராக காக்கி-வெள்ளைச்
சீருடை அணிந்து....
அனுதினம் ஆசிரியர் சொல்லுக்கு
அடக்கமாய் கீழ்ப் பணிந்து....

சாதி மத
சமுதாய பாகுபாடுகள் விடுத்து....
சகோதரர் எல்லோரும் என
சமத்துவ உறுதிமொழி எடுத்து...

சாராதாரோடு பிரிந்து....
சார்ந்தாரோடு நண்பராய்
சாரி சாரியாய் திரிந்து....

ஓரளவு சொல்லிக் கொடுத்ததை
ஓராதே புரிந்து....

தேர்வு என்றடவுன்
சோர்வு தாங்கி....
முன்னம் படித்ததை
முழுக்க வாசித்து
மூச்சு வாங்கி.....

விடைத் தாளில் எழுதுமுன்
வினாத் தாளில்
விடைகளைக் குறித்து....
வீராப்பாய் சோம்பல் முறித்து....

தந்த தையல் நூலை
தாலியாய் நினைந்து
தாள் தாளா வண்ணம்
தாளைக் கட்டி.....
வேகமாய் வகுப்பறையினின்று
வேக வேக
வேக நடையைக் கட்டி...

தோழன் விடை முன்
தோற்குமோ தனதெனும்
ஆவல் விரிய...
அவனது முகமும்
அசமஞ்சமாய் வெளியில் தெரிய...

குறித்த விடைகளின்
குறை நிறை அளந்து....
எவர் சரி
எவர் தவறெனும்
சந்தேகம் மண்டையைப் பிளந்து....

இட்ட விடை
கெட்ட விடையாகின்

தோளுக்குத் தோளான
தோழனோடு கடுத்து....

தேர்வோமா என சிலரும்
தேர்வோம் என பலரும்
தமக்குத் தாமே
தட்டிக் கொடுத்து....

மதிப்பெண் வருநாள்
வயிற்றைப் பிசைய....
வாத்தியின் வாய்
வா இங்கே என அசைய....

தேர்ந்தானா?
தீர்ந்தானா ? என

தோழர் முகத்தில்
சோகம் திரள.....
கண் மூடு நேரத்தில்
கற்பனை கரை புரள.....
கண்கள் மிரள......

பலமாய் தாம் கண்ட
பல நாள் கனவு
பகல் கனவாமோ ?
அல்லது வகுப்பின் முதல்
அசலாய் தாமோ ?

வசமிழந்திருக்கிறார் பெற்றோர்
வட்டிக்கு வட்டி கட்டி !!
வைவரோ அவர் எம்மை
வயிற்றெரிச்சலை கொட்டி ?

என...
ஒவ்வொரு மாணவனின்
ஒருமித்த வாழ்க்கையை

எடுத்த முதல் படத்திலேயே
எடுத்துக் காட்டிய
“பசங்க” பாண்டிராஜுக்கு

தரலாம் தங்கப் பதக்கம் !!
தமிழ்த் திரைக்கு இது
தனிப் புது தொடக்கம் !!

இரண்டரை மணித்துளியுள்
இழுத்தது இப்படம் என்னை
இருபத்தோரு ஆண்டுகள் பின்னம் !
இறங்கவில்லை இரண்டொரு நாள்
இம்மியும் எனக்கு அன்னம் !!

அடியேன் நான்
அறைகுறையாய் படித்த பள்ளி
அரசுப் பள்ளி !!
அயலூரிலிருந்ததால்
அது சற்றுத் தள்ளி !!

அடிப்படை வசதிகளும்
அதற்கு சற்றுத் தள்ளி !!

மின்சாரம் அற்ற
மூங்கில் வேய்ந்த
கீற்றுக் கொட்டகை !!
முன்வாசல் முன்பாக
மூக்கை பிடிக்க வைக்கும்
மூன்று குட்டை !!

பலவகை கூற்றுகள் இருக்கும்
வேதியல் பாடத்துள் !!
படித்ததை படித்தவாறு
பரிசோதிக்கும் கருவியிராது
பரிசோதனைக் கூடத்துள் !!

காற்று புக முடியா
கல்வி அறைகளுள்
இருக்கும் புழுக்கம் !!
இருப்பினும் இருந்தது
இறவா ஒழுக்கம் !!

ஆசிரியர் வந்ததும்
எழுந்து நிற்போம் !!
எழுத்து கற்போம் !!

தமிழ் போதித்த இராமலிங்கம்
தனித்து ஒளிர்கிறார் இன்று
தமிழ்ப் பட்டிமன்ற மேடையில் !!
தட்டி இருக்கிறார் பலமுறை
தமியேன் என்னை தாடையில் !!

”வெக்டர் அல்ஜீப்ரா”வுக்கு
விஸ்வேஸ்வர பாபு !!
வேதியலுக்கு சிவகாமி !!
இயற்பியலுக்கு செளந்தர் !!

எனக்கு உயிரியல் இல்லை !!
எனவே இல்லை
எலும்புக் கூடின் தொல்லை !!

என் பெரியப்பாவின் அச்சு
”கலிஃபோர்னியா” விச்சு
மிகப் பெரிய பேச்சாளன் !!
”அட்லாண்டா” சரவணன்
வேகப் பந்து வீச்சாளன் !!

ER எனும் சிவக்குமார்
BC எனும் சந்திரசேகர் என

ஏனைய பலர்
இன்று போனது எங்கே ?!
எங்கு அவரிருப்பினும்
அங்கு ஒலிக்கிறதா
அவரது புகழ்ச் சங்கே ??

பள்ளியினின்று வெளிவந்தது
எண்பத்து எட்டு !!
போய் வருவேன் இம்முறை
ஓர் எட்டு !!

அடித்துச் சொல்வேன்
அக்காலம் பொற்காலம் !!
அணுவளவு ஒப்பாமோ
அதன் முன் தற்காலம் ?

Labels: , , , , , ,

Monday, June 08, 2009

தந்தை மகற்காற்று நன்றி. . .

vijayakanth_wife

வாங்கலாம் பைசாவால்
வாக்காளர் ஓட்டை !!
கேட்கலாம் நீவிர்
கேள்விக் கணைகளால்
கேட்பாரற்றார் கேட்டை !!

அந்தியும் உம் கவனம்
அரசாளுவார் கோட்டை !!
அந்தோ!
அடித்தானே உம் மகன்
+2 வில் கோட்டை !!

எவர்க்குத் தேவை உமது
எகத்தாளமான ஆட்டம் ?!
போதும் குடும்பமாக
போங்கள் இனியாகிலும்
வள்ளுவர் கோட்டம் !!

எழுதியிருக்கிறது அங்கு
எந்தை வள்ளுவனின்
எண்ணற்ற வாக்கு !!
என்றும் உமக்கு நல்குமவை
எழில் நோக்கு !!

உமது குடும்பத்து
உறுப்பினர் அனைவருக்கும்
உரக்கச் சொல்லியிருக்கிறான்
உயர்ந்த கருத்தை எந்தை !!
உமக்கேன் இல்லை
உவந்ததை படிக்கும் சிந்தை ?!

" மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது. "

நீவிர் “கேப்டன்” என்பதால்
நாட்டிற்கென்ன லாபம் ?!
வீட்டில் உம் மகன்
வெறும் “12th man” - அந்தோ பாபம் !!

Labels:

Thursday, June 04, 2009

தூவும் பூவும். . . ”தூ” வும்.....

poo230908_4

தமிழ் திரைக்கு இது
தனிப் புது யுகம் !!
தடுக்கி விழுந்தால் இன்று
தரமான புது முகம் !!

vennilakabadikuzhu120908_1

விளம்பர ஆடம்பரமின்றி
வீண் வசனமின்றி

சாதிச் சண்டையின்றி
ரத்த மண்டையின்றி

ஆங்கிலம் கலக்காது
ஆடைகள் விலக்காது

வட்டாரத் தமிழ் கொஞ்ச
வணக்கத்திற்குரிய இயக்குனரது
வடிவான படைப்பையெல்லாம்
வசமாய் மிஞ்ச

வருகை தந்து
வாகை கொண்ட

”பூ” வும்
”வெண்ணிலா கபடிக் குழுவும்”
“குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்”

kk221008_28

தமிழ்த் திரையை
தலை தூக்க வைக்கின்றன !!
ஏனையோர் படங்கள் எனக்கு
ஏகமாய்க் கைக்கின்றன !!

அனைத்திற்கும் தரலாம் ”பூ” !!
தள தள ” தல“
தவிடளவில் இருக்கும்
தமிழக “ப்ரூஸ் லீ”
தனக்குத் தானே
தவப் பெயரிட்ட
“தளபதி”

அனைவருக்கும் “தூ” !!

Labels: , , ,

Tuesday, June 02, 2009

“அட்சர” சுத்தமாய் . . . . .

kavya shivashankar

அது....
அமெரிக்காவில்
அனேக வருடமாய் நடக்கும்
“அட்சரப்” போட்டி !!
அடிக்கொருதரம்
அனைத்து இந்திய பெற்றோரும்
அவரவரது வாரிசை
அமோகமாய் ஊக்குவிக்கின்றனர்
அதனை போட்டுக் காட்டி !!

அதன் பெயர்
National Spelling Bee !!
பல காலமாய் அது
பதின்மூன்று வயது சிறாருக்கு
புகழ் பரப்பும் தீ !!

கொடுக்கும் வார்த்தைக்கு
கூட்டுக எழுத்தை !!
கடைசி வார்த்தை வரை
கூட்டியது சரியாக இருப்பின்
நீட்டுக மாலைக்கு கழுத்தை !!

இதுவே அதன்
இன்றியமையாத விதி !!
இவ்விதியை பற்றி
இப்போட்டியில் வெற்றி வரின்
இமயமாய்க் குவியும் நிதி !!

அண்மைக் காலமாய்
அமெரிக்க வாழ் இந்தியர்
அதிகமாய் இப்போட்டியில்
அளப்பரிய வெற்றி ஈட்டுகின்றார் !
”நாமார்க்கும் குடியல்லோம்” என
நம் நாட்டின் சிறப்பை
நானிலத்தார்க்கு காட்டுகின்றார் !!

நம்மவர் வெற்றியால்
நமக்கு உண்டாகிறது
நாட்படா தாக்கம் !!
இருப்பினும் இருக்கிறது எனக்கு
இழையோடும் ஒரு ஏக்கம் !!

சொல்லவே முடியா பல
சொற்களில்
பலவாறு காண்கிறேன் நான்
பல மொழிகளின் கலப்பை !!

“குர்தா” எனும் நூலாடை
கேள்விப்படாத ஒரு
ஃபிரெஞ்சு பாலாடை

என...

போட்டி நடத்துபவர் கவனம்
போதும் போதுமென
போதும்
போட்டியாளரை வடி கட்ட !!
போட்டியாளர் முனைகின்றார்
போராட்டத்தின் ஊடே
வெற்றிக் கொடி கிட்ட !!

வார்த்தையின் மூலமென்ன ?
வழக்கத்தில் புகுந்த காலமென்ன ?

உயர்திணையா?
அஃறிணையா ?

எடுத்துக்காட்டாய் வார்த்தையை
ஏதோ வரியொன்றில்
எங்ஙனமேனும் பிரயோகியுங்கள் !!
வேறொரு உச்சரிப்புண்டெனில்
வேகமாய் அதனை
உபயோகியுங்கள் !!

இவ்வாறு பல கேள்வி தொடுத்து
நேர கால நியமங்களுக்கு
செவி மடுத்து

எட்டுகின்றார் விடையை !!
எட்டியை விடை
ஏற்புடையதாகாக்கால்
கட்டுகின்றார் நடையை !!

வருடா வருடம் போட்டிக்கு
வருவாரது திறன் கண்டு
வருகிறது திகைப்பு !!
அடித்துச் சொல்லலாம்
அவர் அடையும் வெற்றி
அன்னாரது அகைப்பு !!

ஆயினும் அவ் வெற்றியால்
ஆய பயனென் ?

ஒரு வார்த்தையால்
ஒருவர் புலமையை
ஓர்தல் முறையோ ?

ஒரு சொல்லை
ஒழுங்காய்ச் சொன்னால்
ஒளிர் என்றோ

ஒழுங்கில்லையேல்
ஒதுங்கு என்றோ
கூறல் நிறையோ ?

தடுமாற்றம் தரும் ஒரு சொல்
தரப்படுவதில்லை மற்றவருக்கு !
அவரும் அதனை
அழகுற சொல்லியிருப்பாரா எனும்
அவ் ஏக்கம் அமையாதோ
அவ்வார்த்தையை உற்றவருக்கு ?

எடுத்தேன் கவிழ்த்தேன் என
எப்புலமையை இப்போட்டி
என்னணம் இறுதி செய்கிறது ?!

எப் பிணக்குமின்றி
எழுத்தைக் கூட்டுவேன்
எங்கதனை பிரயோகிக்கலாம் என
எடுத்துக் காட்டுவேன்

எனும் ஒரு புலமையால்
எத்துணை நாள்
எவ் இலக்கை நோக்கி
எவ் அம்பை எய்கிறது ?

பங்கேற்பாரை
பல ”தனி மனித” குழுவாய்
பகுத்து
பல வார்த்தைகளை
பக்கம் பக்கமாக தொகுத்து

சரி சமமாய்
சம காலத்தில்
ஒவ்வொரு வார்த்தையாய்
ஒவ்வொருவருக்கும்
ஒலி வடிவில் கொடுத்து

அவரவர்
அதனதன்
”அட்சர” அளவினை
காகிதத் தாளில் குறிக்க

பதிவான
பதில்களை நிறையிட்டு
குறைகளை முறையிட்டு

முன்னே வருபவர்
முன்னிறுத்தப் படலாமே
முதல்வன் எனும் பட்டத்தில் !!
முரணிருக்கிறதா என் திட்டத்தில் ?

Labels: , ,