Monday, March 26, 2007

பண்...இசை...பத்மஸ்ரீ - 06


vaalivalayapatti_subramaniam


தமிழனை தலை
தூக்கச் செய்தவை
வாலியின் கவியும்
வலையப்பட்டி தவிலும்

தமிழும்
தமிழ் இசையும்
தரணியில் நிற்கும் வரை
தமிழர் நா இதனை
நாளும் நவிலும்

தமிழ்நாட்டில்
தமிழர்களுக்கு பிறந்து
தொன்மொழியாம் தமிழின்
சிறப்பை மறந்து

"என்கு டமில் வராடு"
என மானமற்று பேசும்
மானுடரே !
கொட்டிக் கொட்டிக்
கொடுத்து
வெட்டி வெட்டி
ஆட வைக்கும்
வக்கில்லா இசையை
கேட்கும் மூடரே !!

வாலியை ஒருமுறை
வாய் விட்டு படி !!
அறவே அற்றுப் போகும்
அந்நிய மொழிகளின்
அவசியமில்லா நெடி !!

கேள் ஒருமுறை
வலையப்பட்டியின் லயம்
இதயம் இழக்கும்
வயம் !!

அவ் இசை
இசைக்க நீ
இசை !!
இயலாக்கால்
இயன்ற வரை செல் அவ்
இசை இருக்கும்
திசை !!

தமிழ் மொழியை
தமிழ் இசையை
தலைக்கு மேல்
தாங்கு !!
கழுத்தில் உள்ளதை
கொடுத்தாவது
எழுத்தில் உள்ளதை
விலை கொடுத்து
வாங்கு !!

விளங்கும் உனக்கு
தமிழறிஞர் தம்
பாங்கு !!
விலகும் உனது
விலை போகாத
பாசாங்கு !!

காண்பாய் ஒரு
கட்டிலடங்கா சுகம்
வலையப்பட்டி வார்
பிடித்தால் !!
வாலியின் சீர்
படித்தால் !!

முடிந்தால் கண்டு பார்
அவரை நேரிலும் !!
அவர்க்கிணை வேறு உண்டோ
பாரிலும்?
காண இயலாது அவர் திறன்
யாரிலும் !!

முத்தாய்ப்பாய் ஒன்று கூறி
முடிக்கிறேன்

தமிழின்
தமிழிசையின்
கடைசி மூச்சு வரை

வாலி இருப்பார்
கீதத்தில் !
வலையப்பட்டி இருப்பார்
நாதத்தில் !!

-- முற்றும்

Monday, March 19, 2007

பண்...இசை...பத்மஸ்ரீ - 05

valayapatti_bw
Picture Courtesy: Hindu Images

அப்போது சிலுப்பினான்
ஒரு தமிழன் முதுகை !
ஆஹா! அவ் இன்பத்தை
எழுத எனக்கேது
எதுகை ?!

தட்டினார் அவர்
தனது தவிலை !!
அது தந்த இன்பமோ
அளவிலை !!

தவில் துணையோடு வரும்
நாதசுரம்
கேட்கத் தொடங்கியது
நகரப் புறம்..

பத்து கையால்
அவர் கொட்டுகையால் !!
கொட்டுகையில் நாதம்
தேனாய் கொட்டுகையால் !!

சுப்பிரமணியம் எனும் அவர்
பிறந்த ஊர்
வலையப்பட்டி !
தவிலில் அவர்
படு கெட்டி !!
திறந்த வாய் மூடாமல்
கேட்டது பட்டி தொட்டி !!

வலையப்பட்டி பிடித்த
வார்
மத்தளத்தை இழுத்தது
மத்தத்திலிருந்து !!

துயிலெழுந்தது தமிழிசை
அதன்
சத்தத்திலிருந்து !!

பிற இசையை
பின்னுக்கு தள்ளினார் மக்கள்
சித்தத்திலிருந்து !!

மீட்டார் அவர்களை
மேற்கத்திய வடக்கத்திய இசையின்
பித்தத்திலிருந்து !!

-- தொடரும்

Monday, March 12, 2007

பண்...இசை...பத்மஸ்ரீ - 04

வாலி - என்
மானசீக குரு !
நான் தினம்
தொழும் உரு !!
தமிழுக்கு கிடைத்த
கற்பகத் தரு !!

என்னளவில் வாலி
பதின்மூன்றாவது ஆழ்வார் !!
என் பேச்சுக்கு
மறுப்பில்லை என்பார்
வாலியில் ஆழ்வார் !!

சொல்கிறேன் இப்போது
இரண்டாவது செய்தி
கேட்ட பின் நிற்பீர்
வியப்பு எய்தி !!

முன் காலத்தில்
தமிழன்றி
தமிழிசைக்கும்
வந்தது ஒரு
கட்டம் !!
அது அத்தகைய
கால கட்டம் !!

தமிழர்
திருமணமோ
திருநாளோ
தொடங்குவது
மங்கள இசையில் !!
மத்தள இசையின்றி அவ்
இசை இல் !!

மேற்கத்திய கலாச்சாரம்
தமிழர் வாழ்வை
மெல்ல அரித்தது !
தமிழ் வாத்தியங்கள்
தமிழர்க்கே கரித்தது !!

இந் நிலையில்
நம் வாத்தியம்
பிழைத்தல் எங்ஙனம்
சாத்தியம்?

உடுக்கை
தமுக்கு
தாரம்
தம்பட்டம்
முரசு
பறை
பம்பை
நகரா
பேரிகை என
நம்மவருடையது
பலவகைப்பட்ட தோற்
கருவிகள் !!
தட்டினாலே வரும்
லய அருவிகள் !!

இவைக்கு வருமோ
இனி கேடு ?!
தபலா, டோலக்கு
என போய்விடுமோ
தமிழ் நாடு?

திராவிடர் வாத்தியம்
ஒவ்வொன்றும் இனியவை !
இருக்குமா இனி யவை?

காணுமோ வசை?
இருக்குமா அவை
இனி மண்மிசை?

என பல வாரியாக
எழுந்தது ஒரு
கவலை !!
ஊர் வாய்
விட்டு வைக்குமா
தானே வந்த
அவலை?

-- தொடரும்

Friday, March 02, 2007

பண்...இசை...பத்மஸ்ரீ - 03

Kavingar Vali
Picture Courtesy: The Hindu Images

நார்த்தை அவரது
வார்த்தை
முதலில் தெரியாது
நலம்
செரித்ததும் தெரியும்
பலம்

சொற்றொடரில் இருக்கும்
சுகம்
ஆராய்ந்தால் அறியலாம்
அதன் பல
முகம்

ஒன்றா? இரண்டா?
திரையுலகில் ஏறத்தாழ
47 ஆண்டுகள்
தாக்குப் பிடிப்பாரோ
இத்தனை நாள்
இற்றை நாள்
வாண்டுகள் ?

10000 பாடல்கள்
பற்பல பட்டங்கள்
என
கோலோச்சியும்

திரை இசை
குறை இசை
இறை இசை
நிறை இசை

என காலப்போக்கில்
நினைந்து
பஞ்சனைய எளிமையோடு
காவியப் பனுவல்களும்
புனைந்து

இன்றளவும் தொடர்கின்றார்
பணி !!
தமிழுக்கு இவர்
தேடித் தந்த புகழுக்கு
தமிழா! இவரை நீ
பணி !!

ஆஹா!
எத்தனை எத்தனை
சிந்தனை?
அவற்றில் இழந்திருக்கிறேன்
எந்தனை !
தந்திருக்கிறேன் கண்ணீரால்
வந்தனை !!

படித்திருக்கிறேன் அத்தனையும் !!
மயக்கும் அவை எச்
சித்தனையும் !!

திரைத் துறையில்
பிதாமகர்
திருப்பராய்த்துறையில் பிறந்த இத்
திருமகர் !
வளர்ந்ததோ ஸ்ரீரங்கம் எனும்
திரு நகர் !!

வெண் தாடி
முகர் !!
யாரே இவர்க்கு
நிகர் ?

ரங்கராஜன் (எ)
கவிஞர் வாலி
இப் பெருமைக்குரிய
பாக்கியசாலி !!

-- தொடரும்