Thursday, November 10, 2011

ஆதமிண்டே மகன் அபு..



வேதமாய்
நாதமாய்
பூதமாய்

வெளியாய்
ஒளியாய்

தன் மதம் பெரிதெனும்
தப்பட்டை விடுத்து..

முன் வினை களை
முக்கண்ணனே என
முப்பட்டை கொடுத்து..

இறைவனாய் சிவனை
இந்து மதம் வழிபடுகிறது
நடு நாயகமாய் !!

அல்லா அல்லா என
அல்லா அல்லாரை
அழகுற ஒதுக்கி

அல்லா! அல்லா! என
அனுதினம்
அஞ்சு முறை
அல்லாவை

தினமும் இசுலாம்
திசை பார்த்து தொழுகிறது
நபிகள் நாயகமாய் !!

மெக்காவினின்று
மெதீனா வரை

நடையாய் நடந்து
நபிகள் பட்ட துயரத்தை..
அதன் மூலம்
அவர் தொட்ட உயரத்தை..

அடைய வேண்டும் என
அத்தர் விற்கும் ஒருவர்
அனுதினம் விழைகிறார் !!

தள்ளா வயதிலும்
தல யாத்திரையே தனது
தலையாய கடமை என

பிரயாண அலுவலில்
நுழைகிறார் !!




அவர் விழையும்
அப் பயணம்

அண்டம் காப்பவனுக்கு
அவரவர் செய்யும்
அர்ப்பணிப்பு என

அவனியார் விவரிப்பர்
ஹஜ்ஜை !!

அவருக்கு
அதன் மீது
அதீத லஜ்ஜை !!

இசுலாம் மதத்தின்
இரட்சணியம் சார்ந்த
இறையுணர்வின் புனிதத்தை..

இந்தியர்க்கே உள்ள
இன்றியமையா மனிதத்தை..

தல யாத்திரையின்
தனிச் சிறப்பை..
அதற்குத் தேவையான
அனேக துறப்பை..

இயல்பு வாழ்க்கையில்
இழையோடும்
இயலாமையை..

வர்த்தக தாகமின்றி..
வகுப்புவாத மோகமின்றி..

மாசின்றி மாண்புடன்
மனதை வருட படைத்து..

நடப்பவை நன்மைக்கே என
நம்பிக்கையோடு
நம் கண்ணீர் துடைத்து..

தேசிய விருது
வாங்குவதற்கில்லை
வழங்குதற்கு என
எச்சரித்து….

எந்தா மோனே ?!
எங்ஙன உண்டே
எண்டே படம்? என
எம்மவரை நச்சரித்து…

வியத்தகு படைப்பாய்
வியப்பில் ஆழ்த்தியது

மலையாள மொழியில்
மனதை கொள்ளை கொண்ட
மகத்தான ஓர் சித்திரம் !!

ஆடுகளம்
அதன் முன்
எத் திறம் ?!

தந்த பாத்திரத்தில்
தனது பங்கை உணர்ந்து..

விழியில்
விசும்பலில்
வலியை கொணர்ந்து..

தகுதியை நிரூபித்திருக்கிறார்
தங்கு தடையின்றி
சலீம் குமார் !!

மன்மதன் அம்பு
“நாயகன்” முதல்
மங்காத்தா நாயகன் வரை

அவர் முன்
அனேகர் சுமார் !!

தரங் கெட்டு
தமிழ்ப் படம் கிடக்கிறது
தரிசாக !!

ஆர்ப்பரித்து சொல்கிறேன்
ஆஸ்கார் கிடைக்கட்டும்
“ஆதமிண்டே மகன் அபு”விற்கு
பரிசாக !!

Labels: , , , , ,

Tuesday, September 06, 2011

iPray



நிலத்தார் தவிக்கிறார்
நிந்தன்
நினைப்புற்று !

நிராதரவாக்கி இருக்கிறது
நினைப் புற்று !!

திரும்பும் இடமெல்லாம்
திரும்புவாரா பதவிக்கு
திரும்பவும் Jobs என

உறங்கத் தவிக்கிறது
இணையம் !
உற்ற தாக்குதலில்
உரக்கத் துடிக்கிறது
உந்தன் கணையம் !!

அன்பரே !
அதி விரைவில் நலமுறுக !
பிராந்தியங்கள் உனக்காக
பிரார்த்திக்கின்றன மனமுருக !!

iTunes
iPod
iPad
iPhone

அவை மறந்து
அவனியார் கிடக்கிறார்

அடுத்து யாது? என
அதி மோனத்தில் !
iPray என தியானத்தில் !!

Labels: , , , , , , ,

Friday, July 15, 2011

மயிலை….. - 02



அவர் ஒரு துறவி !!
பரமஹம்ஸர் என
பறை சாற்றப்பட்ட
பரமோத்தம பிறவி !!

“புவிமிசை பிறந்தவர்
பரம்பொருள் உணர வேண்டும் !!
உணரின் பந்த பாசத்தில்
உழன்று ஏன் திணற வேண்டும் ?”

அது அவரது கூற்று !
அந்தோ!
புற்று நோயால்
புசித்தது அவரை கூற்று !!

கூற்றுவன்
கண்டான் அவரது தொண்டை !!
காணவில்லை அவரது தொண்டை!!

காலப் போக்கில் அவரது
கருத்துக்கினிய சீடரை

சிகாகோவில் சேர்த்தது
சிற்றிளங்காலை காற்று !!

எழுந்தது மன்பதை
”எழுமின்! விழுமின்!” எனும்
ஏரார்ந்த உரை ஏற்று !!

மருத்துவம்
மக்கள் உயர்வு
மத நல்லிணக்கம்

ஆரம்பக் கல்வி
ஆபத்துதவி என

இராம கிருஷ்ணருக்கு பின்
இலட்சோப லட்சம் தொண்டர்கள்

அளப்பரிய தொண்டுகளை
அனேகர்க்கு இயற்ற

இயக்கப்பட்ட இடம்
இராமகிருஷ்ண மடம் !!




அப் பணிகளை அது
அப்பழுக்கற்று
அளவு பிசகாது
அன்றும் இன்றும் செய்து
அறிவிக்கின்றது திடம் !!

Labels: ,

Wednesday, July 06, 2011

மயிலை…..- 01



அவன் சைவத்தின் ஆதி !!
அவள் அவனில் பாதி !!

கண்ணுதற் கடவுளும்
கருத்திற்கினியவளும்
வாழுமிடம் கயிலை !!
கபாலியாய் கற்பகமாய்
சூழுமிடம் மயிலை !!

”என்னைக் காத்தருள்”
என அவளைப் போற்றினால்
எந்நாளும் பாப நாசம் !!

அப் பாடலன்றி
அனேக பாடலில்
அளவின்றி
அதைச் செய்தார்
பாபநாசம் !!

சிவனே என்று
சிவனே! என்று
சிவனே போற்றினார்
சிவத்தை !!

அகற்றினார் அனேகர்
அவத்தை !!

சிவனை ”நம்பிக்
கெட்டவர் எவர்” ?
அதனையும் பாடினார்
அவர் !!

- தொடரும்

Labels: , ,

Monday, June 27, 2011

மயிலை – முகவுரை

அது..
ஒரு போட்டிக்காக
அழைப்பென வந்த
அறைகூவல் !!

அதிகமானது அதனால்
அடியேனது ஆவல் !!

“உயர் கவிதை எழுதுவது
உனது பிழைப்பு !!
உடன் தேவை
உன்னுடைய உழைப்பு !!

மன்னுபுகழ் சென்னையின்
மயிலை பற்றிய

மண்வாசனை சங்கதிகளை
மனங்கவர் சிந்தனைகளை

மன்பதைக்கு புரியுமாறு
மனதார விவரி !!

வந்தவைகளில் உன் தொகுப்பு
வாகை சூடிடின்

நடுவர் வீசுவார்
நயத்தகு கவரி !!

வர வேண்டிய தேதி
தர வேண்டிய சேதி

இவை இவை !!
இருக்க வேண்டும் எழுத்தில்
சுவை சுவை !!”

விதிகள் விழுந்தன !!
வினாக்கள் எழுந்தன !!

”எனக்கு இதில்
என்ன உண்டு ?
என் செய்வாய்
என் எழுத்தைக் கொண்டு ?”

எனக் கேட்டேன்
எதிர் வினா !

இருப்பினும் இருந்தது
இடையறாது

வெல்ல வேண்டும் எனும்
வெறி மிகுந்த
பகல் கனா !!

”எதை எதையோ
எந்நாளும் எழுதி
எல்லோரையும் ஏய்க்கிறாய் !!
போட்டி என வரின்
போதும் தலையைச் சாய்க்கிறாய் !!

வென்றால் தருகிறேன்
50 டாலர் !!
தூக்கி விட்டுக் கொள்
சட்டையின் காலர் !!

உரமிருந்தால் சாதி !!
உரக்கப் பேசட்டும்
உனது கவிதை
உன் கவித்துவத்தின் மீதி !! “

கனிந்து சொன்னான் அண்ணன் !!
கவி பெறப் போகும் மன்னன் !!

”துடிக்கிறது மீசை” என
பொம்மனையும்…
”பொன்னுக்கும் பொருளுக்கும்”
என கீரனையும்..

நினைந்தது மனம் !!
நின்றது மூக்கில் சினம் !!

"அன்பனே !
அரைக்காசு பெறாதவைக்கு
அல்லும் பகலும்
அல்லலுறும் நண்பனே !

புனைதல் உனது
பொழுது போக்கு !!
அங்ஙனம் எண்ணி உன்
அகச் சிந்தையை ஊக்கு !!

எழுதுதல் மானம் !!
எழுதாக்கால் ஈனம் !! "

செப்பினர் ஆர்வலர் !!
”உசுப்பி விட்டு
உடம்பை ரணகளமாக்க”
உள்ளார் ஓர் சிலர் !!

வணங்கினேன் வாணியை !!
எடுத்தேன் எழுத்தாணியை !!


-- தொடரும்

Labels: , , , ,

Friday, February 25, 2011

பூங்காற்று திரும்புமா . . .



வான் ஏறி விட்டது
வானம்பாடி !!
”வான் மேகங்களே” என
கானம் பாடி !!

அன்பர் மலேசியா வாசுதேவன்
அமரர் ஆகிவிட்டார் !!
அவரொத்த பாடகர்
அனேகர்க்கு கிட்டார் !!

தமிழ்ப் பாடகர் வரிசையில்
தமக்கென்று வழி அமைத்து
தனித்து நின்றவர் !!
தடையின்றி வென்றவர் !!

விவரிக்க முடியாது
விலாவாரியாக அவர் பங்கை !!
ஆயிரம் ஆயிரம் பாடல்களில்
ஆதாரத்திற்கு ஒன்றென்றால்
ஆர்ப்பரித்துச் சொல்வேன்
“ஆகாய கங்கை” !!

முதலில் இருந்து
முடிவு வரை
முதல் மரியாதையின் சுவாசம்
வெட்டி வேரு வாசம் !!

கேட்ட நாள் முதலாய்
கேள்வியின்றிக் கிறங்கியது
தமிழர் தேசம் !!

பாட்டு போடும் வண்டியாக
பார்த்து ஏறும் அளவிற்கு

வெகுநாளாய் என் நண்பன்
வெங்கட்டிற்கு உண்டு
வெறித்தனமாய் அதனில் நேசம் !!

கோடம்பாக்கத்தில் இந்நாள்
கோடியாய் வருகின்றார் பலர்

பாடிய வரை போதும்
”பருவாயில்லை” என
வடக்கிலிருந்து ”உதித்து” !!

பழகிக் கொள்கின்றார்
”பருவாயில்லை” என தமிழரும்
பாழும் அவரது
பாட்டைத் துதித்து !!

நம் இசையமைப்பாளர் பலர்
நம்மிடையே இல்லை
நம்மவரை மதித்து !
வாசுதேவனை ஒத்த ஒருவர்
வர வேண்டும் இனி உதித்து !!

”செங்காட்டு மண்ணும்
நம் வீட்டு பொண்ணும்…”

காதில் விழும் சங்கதிகள்
நம்மை ஏதோ பண்ணும் !!
அப்பாடல் கேட்கும் போதெல்லாம்
அமரர் வாசுதேவனை
அடியேனது உள்ளம் இனி
அடிக்கொருதரம் எண்ணும் !!

Labels: , , ,

Friday, September 24, 2010

நான்....கடவுள்



ஆதாம் ஏவாள்
ஆதியில் சுவைத்த கனி !!

”ஒரு நாளைக்கு ஒன்றெனில்
ஓவாப் பிணியும்
ஓடிடும் இனி ” !!

கனி உலகோ
கணினி உலகோ

“ஆப்பிள்” இன்று
ஆங்கே அதிகம் பேசப்படுகின்றது !!
அதிகமானோர் பார்வை
அதன் மீது வீசப்படுகின்றது !!

”ஜன்னல்” எனப் பெயரிட்டும்
மூலச் செயலியின்
மூலத்தை

மூடி வைத்தார்
மூடர் ”கேட்ஸ்” எனும்
Dosன் Dad !!

Windowsன் பிடியை
“Bundled Software”ன் கொடியை

தர்க்கத்திற்கு இடமின்றி
தகர்த்திருக்கிறது
Jobs ன் Ipad !!



மேம்பாட்டுக்காக படிப்பவர்
மேம்போக்காக படிப்பவர் என

வரிசைப் படுத்தலாம்
வலைத் தளம் வாசிப்பாரை !!

அவற்றிற்கு வர
அவர் அனைவருக்கும்

வல்லான் நான் வகுத்த
வழி ஒன்றே என்பது
வழுக்கும் பாசிப் பாறை !!

“Market Segmentation” என்பது
மகோன்னதமான ஒன்று !!
மகானுபாவர் Bill Gates ன்
மதியதனை உணரின் நன்று !!

எல்லாப் பொருளும்
எல்லோருக்கும்
எல்லா வழியிலும்
எப்போதும் பொருந்துவதில்லை !!

வாடிக்கையாளர் தம்
வகை அறிவோர்
வழி மறந்து
வருந்துவதில்லை !!

வகைக்கொன்றாய்
வலைத் தளம்
வளர்ந்து வருகையில்

உலகம் ”விரல் நுனியில்” என
உவந்தார் பலர் !

உணர்ந்தாரா அவ்வார்த்தையின்
உள் அர்த்தத்தை
உலகில் ஒரு சிலர் ?

காலம் காலமாய்
கனத்தன பெருஞ்சுமையாய்
கணினிகள் பெருவாரியாய் !!

அவற்றை தூக்கிட
அரும்பியது வியர்வை
அனேகர்க்கு மாரியாய் !!

Mouse, KeyBoard என
மூட்டை முடிச்சுகள் கூடின !!

வடங்களின் சந்தடியில் வீட்டின்
இடங்கள் நிரம்பிட
மனையாள் பலர் முகம்
மலர்ச்சியின்றி வாடின !!

நார்த்தையை எடுத்து
நாவில் வைக்கும் விரலால்

உண்மையான விரல் நுனியில்
உலகம் Ipadல் விரிகிறது !!
நற நறக்க வைத்து
நம்மைக் கட்டுண்ட விலங்குகள்
நிதம் ஒன்றாய் முறிகிறது !!

Creativity, Intuition, Genius
அதற்கான அர்த்தத்தை
அடுத்து வரும் சந்ததி
அகராதியில் புரட்டினால்

Steve Jobs என படிப்பர் !!
ஏனையோர் அன்றும்
This program performed an illegal operation and will be shut down என
வாசகம் பார்த்தே
வாழ் நாளெல்லாம் துடிப்பர் !!

Labels: , , , , , , ,