Monday, November 26, 2007

சரஸ்வதி சதகம் 05

உயர் கலைகள் எட்டெட்டின் பிறப்பிடம்
துயர் கல்லாமையின் இறப்பிடம் - ஆனிப்
பொன் குணங்களின் ஒளிர்விடம் ஆங்கண்
என்றும் இருப்பாள் வாணி

Monday, November 19, 2007

சரஸ்வதி சதகம் 04

நான்முகனின் இல்லாள் நாரதனை ஈன்றாள்
நானிலம் போற்றும் நல்லாள் - மாசறு
சொல்லினை நாவில் வைத்தாளை தீயத்
தொல்வினை நீங்கத் துதி

Monday, November 12, 2007

சரஸ்வதி சதகம் 03

சொல்லை தருபவளுக்கு சுடர் ஏற்ற
இல்லை யாங்கணும் கோவில் - ஆதலின்
உளமே ஆலயமாய் உவந்தே வாணியை
வளமார வாழ்த்திப் பாடு

Monday, November 05, 2007

சரஸ்வதி சதகம் 02

ஏணியின்றில்லை ஏறுதற்கு உதவி ஏற்ற
தோணியின்றில்லை நதி தாண்டுதல் - பயிர்க்கு
காணியின் றில்லை கழனி உயிர்க்கோ
வாணியின்றி இல்லை உய்வு