Sunday, April 14, 2013

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...










மறலிக்கு வந்தது
மயக்கமா ? கலக்கமா ?

இசைமிகு இசையே
இயமனின் இன்றைய
இலக்கமா ?

சுப நாளில்
சுரக்கலாமா
சுபபந்துவராளி சத்தம் ?

இசை வானில்
இன்றெதற்கு
இருள் யுத்தம் ?!

ஸ்ரீனிவாசனை இன்று
ஸ்ரீனிவாஸ் நாடிவிட்டார் !!
நாடியதால் இன்று
நாடி விட்டார் !!

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
நெஞ்சம் மறப்பதில்லை !

நிலையில்லா உலகில்
நிதம் புகழ் இறப்பதில்லை !!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home