Wednesday, December 31, 2008

சங்கீதம் எனில்.... – 02

ஆதி தாளமும்...ஆதி காலமும்

அன்றிலிருந்து இன்று வரை
அதிரும் சங்கீத உலகம்
அப்பெயர் கேட்டால்...
அவ்வாறு அனுதினம்
அதன் பெருமையை
அறிய வைத்தார் ஒருவர்
அவர் தம் பாட்டால் !!

அவரது திறனை
அளக்கு முன். . .
அவர் பங்கினை
விளக்கு முன். . .

ஆராய வேண்டும்
ஆதி நாள் இசையுலகின்
ஆரம்பக் கால பாதையை !!
அதுவே காட்டும்
அழகுற அம் மேதையை !!

தனித்த சிலரால் பேணப்பட்டு..
தட்டுச் சில்லறையோடும்
தேங்காய் சில்லோடும் காணப்பட்டு..

அந்நாளில்
அனேக பாடகர்கள்
அரும்பெரும் அவதியுற்றார் !!
அளவிலா அசதியுற்றார் !!

ஏகமாய் இசையறிந்த
ஏனைய சிலரோ

ஏக தாளம்
அடதாளம்
சுருதி பேதம் என
விந்தை புரிந்திட..
வியந்தார் பலர்
விரிவாக அதனை புரிந்திட !!

மக்கள் வந்தார் கச்சேரிக்கு
மழைக்கு ஒதுங்குவது போல்..
பாடல் இருந்தது
பார்ப்பார் விழி பிதுங்குவது போல்.

பாடகர் இருப்பார் மேடையில்
பாடிய அடியை
திரும்பத் திரும்ப பாடி !!
பாமரர் இருப்பார்
பாட்டைச் சாடி !!

கோண முகத்தைக் காட்டி...
கையைக் காலை ஆட்டி..

பெரும் வேகத்தில்
அரும் பதங்களை
போதும் மென்று..
பத்தாம்பசலிகளுக்கு அது
போதுமென்று...

பாடிடுவார் பாடகர்
பாடல் பொருள் மாறிட
பல வார்த்தையை உடைத்து !
பாட்டை அர்த்தமின்றிப் படைத்து !

பலரிடம் இருக்கும்
பலத்த சேட்டை....
மக்கள் முழுதும்
மறந்து விடுவார்
மகத்துவமிக்க பாட்டை..

சாமானியனும்
சங்கீதத்தை திரும்பிப் பார்க்க..
சத்தமின்றி அவனிடத்தே
சங்கதியை கொண்டு சேர்க்க..

பாடற் கலையுயர…
பாடுவார் கேட்கும் விலையுயர..
நாடுவார் நிலையுயர...

ஒருவரும் முயலவில்லை !!
முயன்றாரால் இயலவில்லை !!

--தொடரும்

Labels: , , , ,

Wednesday, December 24, 2008

என்னை பாதித்தவர்கள். . . .

சங்கீதம் எனில்.... – 01

தனக்கே உரிய அதிகாரத்தில்
133 அதிகாரத்தில்

வையம் சிறக்க
வைத்தான் வள்ளுவன்
அரும்பெரும் கருத்துக்களை
அழகிய குறளாக !
சிந்தனையை சிறப்பித்து
சீர்செய்யுமவை திரளாக !!

எது எவர்க்கு
எப்போது முக்கியமென
எங்கும் வைத்தான் கேள்வி !!
”கேள்வி” என்றோர் அதிகாரமும்
வைத்ததாய் கேள்வி !!

”செல்வத்துள் செல்வம்
செவிச் செல்வம்”
”செவிக்கு உணவில்லையெனில்
சிறிது வயிற்றுக்கு” என

அதனில் முன்னிறுத்தினான் அறிவதை !!
அவயம் அதன்றி சிறப்பிக்குமோ
அறிவதை ?!

இவ்விரு உறுப்பு
இன்பமுறுதல் தன் பொறுப்பென...
இன்றளவும் ஒரு மண்
இருந்து வருகிறது !!
இசையையும் பசையையும்
இயைந்து தருகிறது !!

அதன் திசையெங்கும் நஞ்சை !!
அதுவே தஞ்சை !!
அள்ளும் நெஞ்சை !!

ஒப்பு இல்லா
தஞ்சை சில்லாவில்

வயலிடை நாற்று
சோபிக்காததாய்..
வாய் புகுந்த காற்று
வியாபிக்காததாய்...

வரலாறு கிடையாது !!
வசையொழிய பாதுகாக்கிறது
வையத்துள் தன் புகழை
வைகலும் உடையாது !!

அதன் ஆளுமையின் கீழ்
அமைந்தவற்றுள்
அழகான ஒன்றே

மஹாராஜபுரம் எனும்
ஊரென்பது...
உச்சரித்த உடனே
ஊகிக்க முடியும்
உன்னதமான இக் கவிதையின்
உட்கரு யாரென்பது !!

-- தொடரும்

Labels:

Thursday, December 18, 2008

மும்பை மேரி ஜான். . . .

mumbai-meri-jaan-wallpaper

ஓடி ஆடி
ஓய்ந்து
ஓய்வினை நெருங்கும்
ஓர் காவல்காரர் ...

தந்தையாகவிருக்கும்
தகவு மிக்க
தனியார் துறை கணினியாளர் ...

தெருவோரம் தேநீர்
தினம் விற்று உழைப்பவர்...

சிறு வேலை செய்து
சிறிது சிறிதாக பிழைப்பவர்..
இதர நேரங்களில்
இந்து-முஸ்லிம் என
வம்புச் சண்டையை அழைப்பவர் ..

எங்கு எது
எப்படி நடக்கிறது
என நவிலும் செய்தியாளர்....

அவ் ஐவரின்றி
அனைவரையும் உலுக்குகிறது
அவரவர் வழியிலேயே
அவரறியாது
அசம்பாவிதம் ஒன்று !!
நம் நாட்டில்
நடந்தது அது
7/11/2006 அன்று !!

அதனை மும்பை
அணுவளவும் மறக்கவில்லை !!
அதன் துயரை
அகஸ்மாத்தாகவும் துறக்கவில்லை !!

நடந்ததை நடந்தவாறு
செய்திச் சுருளாய் காட்டாது..
களேபரமான காட்சிகளை
கதறக் கதற தீட்டாது...

கற்பனை சில அவ்வப்போது
கதையில் சேர்த்து....
கருவினின்று கதை
கணமும் பிறழாது பார்த்து...

உண்மைகள் ஊரறிய...
உள் வலி
உலகுக்கு தெரிய...

குறிப்பாய் எவரையும்
குத்துவதை தடுத்து....
குறுக்கு வழியில்
குற்றத்தை களையும்
குதர்க்க உரை விடுத்து ...

நிறைய வசனமற்று
நிகழ்வின் தாக்கத்தை....
நினைவிழந்து தவிக்கும்
நிலத்தார் ஏக்கத்தை.....

செல்லுலாய்டில்
செவ்வனே
செதுக்கி இருக்கிறார்
”மும்பை மேரி ஜான்” என்று !!

பார்த்தால் சொல்வீர்
பார்த்த மாத்திரத்தில்
தமிழ்ப்படம்
தரத்தில் சாண் என்று !!

கண்ணில் நீர்
கரை புரண்டு ஓடும்
காட்சிக்கு காட்சி !!
நம் தேசத்துக்கு
நல்லதொன்று நடக்காதோ என
நம்மை உலுக்கும் மனசாட்சி !!

இயல்பு வாழ்க்கை
இரத்த வெறியாய் போனால்..
இருக்கும் பொழுதெல்லாம்
இம்சையாக ஆனால்...

இரயிலில்
இறங்குவதற்கு முன் உள்ள
இருபது நிமிடப் பயணமும்..
இடையே நிலவும்
இரண்டு நிமிட மெளனமும்...

இரு யுகமாய் நீளும் !!
இருண்டு போகும் நாளும் !!

”ஆண்டவன் சொல்றான்...அருணாச்சலம் செய்யறான்
எப்படியிருந்த நான்...எப்படி ஆயிட்டேன்
மாப்பு...வைச்சுட்டாண்டா ஆப்பு
நான் போலீஸ் இல்லடா...பொறுக்கி
என் வழி..தனி வழி...
தமிழில் எனக்கு பிடிக்காதது...மன்னிப்பு “

தமிழ்ப் படம் இன்னமும்
Talkie யாகவே இருக்கிறது !!
Movie யாக மறுக்கிறது !!

Labels: , , , , , , , ,

Monday, December 15, 2008

Outsourced. . . .

outsourced_ver2

இன்று முதல்
இங்கில்லை உனக்கு வேலை !!
இன்றே வை
இந்தியாவில் காலை !!

அனுதினம்
அமெரிக்கர் தேவைகளை
அங்கிருந்தவாறே அறிந்து
அலுவல் புரிவர்
அந்நாட்டு மக்கள் இனி !!

அதிகம் அவர்கள்
அல்லலுறாது
அலுவல் கற்பித்து
அவர்கட்கு நீ இனி !!

இப்படிச் சொல்லப்பட்ட
இளைஞன் ஒருவன்
இந்தியா செல்கின்றான்

இப் பணி
இந்தியர்களால் முடியாது
எனும் மறுப்போடு !!
வேண்டா வெறுப்போடு !!

வந்த இடம் அவனுக்கு
வாழக் கைத்ததா ? – தலை
தாழ வைத்ததா ?

இதுவே “Outsourced”
திரைப் படம் !!
கதையின் களம்
இந்திய வரை படம் !!

”ஏழ்மையிலும் நேர்மை
கோபத்திலும் பொறுமை
தோல்வியிலும் விடாமுயற்சி
வறுமையிலும் பரோபகாரம்
துன்பத்திலும் தைரியம்
பதவியிலும் பணிவு ”

என் எழுத்தல்ல இவை !!
எனினும்
என்றும் போற்றத்தக்கது அவை !!

வாழ்க்கைக்கு விழிகளாக..
வாழ்வில் வெற்றிக்கு வழிகளாக...

இக் கோட்பாடுகளை
இந்தோ-பர்மா எழுத்துப் புத்தகத்தின்
பின் அட்டையினின்று

முறையே நான்
முன்னம் படித்ததுண்டு !!
முன்னேற்றத்தை முன்நிறுத்தி
முக்கியமான சில நேரங்களில்
முதற்கண் அவற்றை
முனைந்து கடைப் பிடித்ததுண்டு !!

இன்றளவும்
இவைதான் என்னளவில்
இந்தியரை தனித்து காட்டுகின்றன !
இமாலய வெற்றியை
இமைப்பொழுதும் அவர்க்கு கூட்டுகின்றன !!

அவை அத்துணையும்
இப்படம் கோடிடும் !!
இதற்காகவேணும் இன்றே
இரவல் தருவாரை
இப்படத்திற்கு நீவிர் நாடிடும் !!

ஒவ்வொருவரையும்
ஒவ்வொரு வகையில்
ஒருவாறு இப்படம் கவரும் !!
பிடிக்கவில்லை என
பிதற்ற மாட்டார் எவரும் !!

Labels: , , ,

Tuesday, December 09, 2008

ஒரு புதன் . . . .

a wednesday

நகரின் ஒரு முனையில்
நசிருதீன் ஷா
அதிகாரத்தின் அரியணையில்
அனுபம் கெர்

ஆணையர் பின்னவர் !!
ஆணையொன்று பிறப்பிக்கின்றார்
அவர்க்கு முன்னவர் !!

மும்பையின்
முக்கிய பகுதிகளில்
இருக்கிறது ஐந்து குண்டுகள் !!
இவை வெடிக்கின்
எங்கும் தெறிக்கும்
எலும்புத் துண்டுகள் !!

நம்புவதாயின் நம்பு !
நம்பாக்கால் கெடு !!
இதுவே அக் கெடு !!

அசம்பாவிதம் நிகழாதிருக்க
அனேகர் இகழாதிருக்க

ஒருவர் முகம்
ஒருவர் பாராது...
ஒன்று கூடாது....

ஒருங்கே நடக்கிறது அவர்க்குள்
ஒரு சிறு பேரம் !!
ஓடிப் போய் விடுகிறது
ஒன்றரை மணி நேரம் !!

நிகழ்ந்ததா சேதம்
நிலப்பரப்புக்கு?
வெற்றி எத்தரப்புக்கு ?

பாருங்கள் “ஒரு புதனன்று...” !!
வழக்கம் போல் இது
தமிழ்ப் படமன்று !!

நம்மவருக்கு தெரிந்தது
”நாக்க முக்க“ !!
நல்ல சிந்தனையில்
நம் மூளை என்று சிக்க ?

Labels: , , ,

Thursday, December 04, 2008

மும்மூர்த்திகள். . .

wagonermullalynardelli

நிந்தன் உதவியின்றி
நிறுவனம் ஆகும் திவால் !!
சற்றும் சளைக்காமல்
சட்டம் இயற்றுவார் முன்
வாகன உற்பத்தியாளர்
வைத்திருக்கின்றார் சவால் !!

ஆண்டாண்டுகளாக யாமே
அமெரிக்காவின் வேர் !!
GM , Ford, Chrysler
என்பது எங்கள் பேர் !!

வீழ்ந்த பொருளாதாரத்தால்
விற்காமல் கிடக்கின்றன
வணிகர் கிடங்குகளில்
எமது வாகனங்கள் !!

வாங்க வருவார்க்கும்
வங்கிக் கடன் கிடைக்காமையால்
வழி அறியாது
வந்த வேகத்தில்
வெளியேறுகின்றனர் மாசனங்கள் !!

இந்நிலை நீடிப்பின்
இழுத்து மூடப்படும் எமது கதவு !!
இதற்காகவேணும் இன்றே
இருநூறாயிரம் கோடி
இரவல் தந்து உதவு !!

அவ்வுதவியின்றி
அந்திமக்கிரியைக்கு யாம் போனால்
கைப்பணம் இழந்து
கையேந்தி ஆனால்

எமது தொழிலாளர்
எல்லாரது வயிறும் காயும் !!
வேரொடு அமெரிக்காவே
வீழ்ச்சியில் சாயும் !!

சந்தி சிரிப்பர்
சகத்தார் எங்கள்
சரிவு பார்த்து !!
சளைக்காது எமக்கு அதனால்
சற்றே பரிவு காட்டு !!

வாகன நகரம் டெட்ராய்டினின்று
வாலை வாரிச் சுருட்டி
வாஷிங்டன் சென்று
வாயைக் கெல்லி
வாதாடுகின்றனர்
வாகனர், முல்லாலி, நார்டெல்லி !!

வண்டி வண்டியாய்
வரிப் பணம் கேட்கும் அவரை
வறுத்தெடுக்கின்றனர்
வாக்கு வாங்கியோர்
வகை வகையாய் குற்றஞ்சொல்லி !

பரிதவப்பார் கதை
பலர் காதை எட்டுமா?
பணம் அவர்க்கு கிட்டுமா ?

இதுவே எங்கணும்
இன்றைய பேச்சு !!
இருப்பினும் கேட்கிறது
இங்குமங்குமாய் ஏச்சு !!

கச்சா எண்ணை
கணிசமாக இருந்த காலத்தில்
கணக்கு வழக்கின்றி எரிபொருளை
கப கபவென குடித்து

கருப்புப் புகையை
கணமும் உம் வண்டி கக்கியது !
கண்ட பணத்தை
கணக்காய் எண்ணியே
கண்ணும் உமக்கு சொக்கியது !!

விற்ற வண்டியிலெல்லாம்
ஆயிரம் பிரச்சினை !!
தவிடளவும் இல்லை
தரத்தின் இலச்சினை !!

பழுது பார்ப்பவனையே
பொழுதும் பார்த்து மக்கள்

போக்கறியாது நின்றனர் !!
போதும் போதுமென்றனர் !!

ஒளிரும் வகையின்றி
ஒருவித மிகையின்றி

நாமும் இருக்கிறோம் என
நாளைக் கழித்தாய் !!
தேவையற்ற வேலைகட்கு
தேடிய செல்வத்தை அழித்தாய் !!

ஊரார் ஓர் நாளும்
உபயோகமற்ற
உன் வண்டியை
பார் கார்! என
பார்க்கார் !!
சிலர் அதனை
சிறிதும் அருகே சேர்க்கார் !!

உன்னோடு போட்டியிட்ட
உலக வாகன
உற்பத்தியாளர்கள்

உயர்த்தினார் அன்றே
உடனுக்குடனாக தரத்தை !!
உனக்கு ஏனில்லை
உருப்படியான அச் சிரத்தை?

உலகோர்க்கு
உம் வாகனம் மேல் பரிவில்லை !!
உமக்கு ஏனிந்த
உண்மை உணரும் அறிவில்லை ?

விற்பனை தேக்கம் நிறைந்தாலும்
உற்பத்தி குறைந்தாலும்

உபகாரச் சம்பளம்
சுகாதாரக் காப்பீடு
தொழிற் சங்கச் சலுகைகள்
கொள்ளையடிக்கும் வணிகர்களென

கொழுப்பேறிக் கிடக்கிறாய் !!
இன்றோ நாளையோ என
இழுபறியாய் நாளை கடக்கிறாய் !!

இந்நிலையில்
இழுக்குமா உம் தேரை
இரவலாய் வரும் அப்பணம் ?!
என்றைக்காவது ஒருநாள்
எழுந்து நிற்போமென
எதற்கு வீண் சொப்பனம் !!

தொலையட்டும் சனியனென்று
மக்கள் கையை உதறுகின்றார் !!
தொலையலாகாது தம் வரி என
தெருத் தெருவாய் பதறுகின்றார் !

ஒன்று நிச்சயம் !!
ஒழி என ஓர்
உதவி வராது....
உலகில் அமெரிக்க வண்டி இராது !!

அப்படியொன்று நடந்தால்
அதன் பாதிப்பு
அனைவரையும் தாக்கும் !!
பலரை வேலையினின்று நீக்கும் !!

”கார்” நகரம் ஆகும்
கார் நகரம் !!

Labels: , , , , , ,

Tuesday, December 02, 2008

1947 முதல் AK47 வரை. . .

mumbai 2008 terrorism

அலாதியான பிரியம்
அமெரிக்கர்க்கு
அவரது பிராணிகளின் மேல் !!
அனேகர்க்கு அவை
அவர்தம் மனைவியரினும் மேல் !

பச்சோந்தி
பைங்கிளி

புலி
எலி

முயல்
கயல் என

வயதுக்கு ஒத்தோ
வசதிக்குட்பட்டோ

இல்லந்தோறும் செல்லப் பிராணி
இருக்கும் ஏகமாய் !!
அழகழகு பெயர்களில்
அந்தியும் அளவுச் சாப்பாட்டோடு
அனேகம் இருக்கும் அமோகமாய் !!

பலரது தோட்டத்தில்
மயிலும் அகவும் !!
பார்த்திருக்கிறார் இதனை
எந்தன் மகவும் !!

எது யாருடையதோ..
எப் பேருடையதோ..

மண்டைக் கனமுடையதோ..
சண்டைக் குணமுடையதோ..

பாதை மாறியோ...
போதை ஏறியோ...

வழி மாறி மாற்றான் தோட்டத்துள்
வரும் எப் பிராணியும்...

வரு முன்னே
வரப் போகும் நாளை சொல்வதில்லை !!
வலிய வந்த பின்
எளிதில் திரும்பியும் செல்வதில்லை!!

வீட்டின் பின்பக்கம்
விளையாடும் பிள்ளைகட்கு
வீணில் அவைகளால்
வினை வாராதிருக்க

வேண்டியிருக்கிறது ஒரு வேலி !!
தகப்பன் எனும் முறையில்
தமியேனுக்கு அதுவே
தரப்பட்ட முதல் சோலி !!

அறிவேன் நான்
அவ் அரணால்
அனைத்தையும் தடுக்க இயலாது !!
ஆனால்..
அது இருக்க
அகஸ்மாத்தாக நுழைந்து
அனேக பிராணிகள்
பீதி கொடுக்க முயலாது !!

அத்தகு சுவர்
அனைத்து தேசத்துக்கும்
அவசியம் வேண்டும் !!
அஃதன்றி தீவிரவாதம்
அவ்வப்போது தீண்டும் !!

எக் கரத்தால்
எத் தரத்தால்
எம் மரத்தால்
அதனைக் கட்ட ?
அதனால் ஆகுமா
அமைதி கிட்ட ?!

இருந்திருந்தால்
இருந்திருக்காதோ
இரு கண்ணிலும் நீர்
இளங் கன்றுகளை இன்று
இழந்து தவிக்கும் தாயிலும் ?!
இக் கேள்வி
இன்று எல்லோர் வாயிலும் !!

அன்பர்களே !
அதிகம் தேவையில்லை
அச் சுவர் எழுப்ப !!
அதுவன்றி வேறில்லை
மீளாத் துயிலினின்று
மக்களை எழுப்ப !!

தேவை அதற்கு நன் சொற்கள் !!
தேவையில்லை செங்கற்கள் !!

எந்நாளும் அதற்கு உதவாது
எது எவருடையது
எனும் எல்லைக் கோடுகள் !!
எத்தரப்பினருக்கும்
என்றும் வேண்டும்
செய்யும் தொழிலை
செவ்வனே செய்யும்
செயற் பாடுகள் !!

அச்சுவரின்
ஆதாரம் - மத நல்லிணக்கம் !!
அகலம் - மக்களின் அன்பு !!
உயரம் – நீதியின் நிலை !!
உறுதி – மக்கள் மன உறுதி !!
கட்ட உதவும் தண்ணீர் – கல்வி !!
கட்டுவதற்கான பணம் – வரி !!
கொத்தனார் – அரசியலமைப்பு !!
வாயிற்காப்பாளன் – காவல்துறை !!
சொந்தக்காரன் – வாக்காளன் !!
முக்கிய எதிரி - ஊழல் !
முதன்மை நண்பன் – ஒற்றுமை !!

என்ன பிரயோசனம்
எனதருமை மும்பையை
எப்போதும் நினைத்து அழுது !!
எங்கோ இருக்கிறது பழுது !!

தாஜ் என்றவுடன்
நினைவுக்கு வரப்போவது
ஆக்ராவில் இருக்கும்
அன்பின் சின்னமா ?!
11/26ல் நடந்த
சின்னா பின்னமா !!

எரிகின்றது மற்றொருமுறை
என் தேசம் !!
எங்கு காணினும்
எண்ணவொண்ணா நாசம் !!

தீவிரவாதத்தின் தாக்குதலில்
தவிக்கிறது மும்பை !!
இருப்பினும்....
இந்நேரத்தில் இழக்கலாகாது
இந்தியர்கள் அன்பை !!

மும்பையின் கண்ணீரும் கதறலும்
முட்டுகிறது வானை !!
தேவைப்படுகிறது அமைதிக்கு
தேசிய தானை !!
மார் தட்டுமா இனி
மராட்டம் மராத்தியர்க்கே என
நவ நிர்மாண் சேனை ?

இத்துணை நாள்
பேசியிருந்தீர் பார பட்சமாக !!
இமைப் பொழுதில்
இற்றுப் போனதே அது
இரண்டாம் பட்சமாக ?!

முக்கியமான இத் தருணத்தில்
முன்னேற்றச் சிந்தனைக்கு
முனைய வேண்டும் மக்கள்
முன்னம் நிகழ்ந்த
மும்பை கலவரத்தை
முழுதும் மனதில் கொண்டு !!
அதுவே இந்நேரத்தில்
அரசுக்கு அவர் செய்யும்
அளப்பரிய தொண்டு !!

இது
இந்து முஸ்லிம் பிரச்சினையல்ல !!
இஃதுணர்ந்தால் வினையல்ல !!

அரசுக்கு நன்மை தீமைகளை
”அகலாது அணுகாது”

குறள் மொழி பற்றி
அற வழி ஒற்றி

அரசியல் கட்சிகள்
அறிவுறுத்த வேண்டும்
சுயலாபம் தேடாது !!
அஃதன்றி வெற்றி கூடாது !!

எல்லாம் இருக்கட்டும்..
எழுத்தன்றி எமக்கென
என் செய்தாய் நீ?
என என்னையும்
என்னொத்த ஏனைய
வெளி நாடு வாழ் இந்தியரையும் தூண்டாதீர் !!
தேவையற்ற குப்பைகளை
தோண்டாதீர் !!

எனது நாட்டை விட்டு
எங்கோ இருப்பினும்
எங்கும் கேட்கும் கதறலினால்
என் மனமும் கனக்கும் !!
நாட்டுப் பற்றென்பது
நாளும் உண்டு எனக்கும் !!

Labels: , ,

Monday, December 01, 2008

எழுத்தென்பது யாதெனின். . . .

aravind_1015

நடந்திருக்கிறது
நயத்தகு செயலொன்று
நவீன உலகில் !!
நகர்த்தியிருக்கிறது அது
நம்மவரை முதலாமவராக
”நவீன” உலகில் !!

இலக்கிய உலகில்
இறவாப் புகழில்

இந்தியாவை
இருக்க வைத்திருக்கிறது
இன்னுமொரு விருது !!
இந்தியனே!
இமாலய சாதனையாக
இதனை
இன்றே கருது !!

அவ்விருதின் பெயர் ”புக்கர்” !!
அங்கீகாரம் கிடைக்கா
அவத்தையில்
அதைப் பெற்ற எவரும்
அணுவளவும் சிக்கர் !!

நம்மவரும்
நமது வம்சாவளியினரும்
நாற்பது வருடத்தில்
நான்கு முறை
நற்பரிசதனை பெற்றிருக்கிறார் !!
பெரும் புகழ் உற்றிருக்கிறார் !!

நேய்பால்
சல்மான் ருஷ்டி
அருந்ததி ராய்
கிரண் தேசாய்
அவ்வரிசையில் இன்று
அரவிந்த் அடிகா
அடியொற்றியிருக்கிறார் !!
அரிய பரிசை பற்றியிருக்கிறார் !!

வெறும் பகடைக் காயாக
வெகு சனத்தை
வெறுப்போடு ஆளும்
வெற்று அரசியலாட்சியை
வெளுத்து வாங்குகிறது
“வெள்ளைப் புலி” !!

கடைசிப் பத்தி வரை
கட கடவென படித்து
கண் மூடினால் மனமெங்கும்
கொள்ளை வலி !!

இந்தியா என்றவுடன்
இமை மூடும் நேரத்தில்

யோசனை யானையும்
வாசனை சந்தனமும்

சல்லிக் கட்டும்
சிற்பமும்

நேரிய காந்தியும்
சூரிய காந்தியும்

மெல்லிடை பெண்டிரும்
மென் பொருளும்

மணக்கும் தேயிலையும்
மயக்கும் பட்டும்

கொட்டை பாக்கும்
நெட்டை தேக்கும்

பரந்த பண்பாடும்
பலரது பண் பாடும் !!

அறிவாரா அவனியோர்
அதனூடே நம் நாட்டின்
அனேக முரண்பாடும் ?

பார்க்கவொண்ணா அதனை
பார்க்குமாகின் மானுடம்

பாரதத்தின் பிற பெருமையை
பாராட்டிப் பாரா !!
அதைத் தான் இப்புத்தகம்
அடிக்கொருதரம் சுட்டுகிறது
பாராவுக்கு பாரா !!

Labels: , , ,