Friday, January 25, 2008

Nano...

nano

தாழ்த்துகின்றார்
தரணியிலுள்ளோர்
சிரத்தை !!
குலுக்குகின்றார்
குதூகலத்தில்
ஒரு கரத்தை !!

டாட்டா மோட்டர்ஸை
வழிநடத்திச் செல்லும்
அக்கரம்
நன்கு அறியும்
நான்கு சக்கரம் !!

பெயர் ரத்தன் !!
அவனொரு ஜித்தன் !!

ஒரு லட்சத்தில்
சுக்கில பட்சத்தில்

நீயோ நானோ
என போட்டி போட
உருவாக்கி விட்டான்
Nano !!
மாருதிக்கு இனி
தேவைப்படும் Eno !!

சில கேள்விகள்
எழுகின்றன !!
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
காதில் விழுகின்றன !!

கூடும் நெரிசல் !!
தேவைப்படுமோ
பணி செல்ல இனி
பரிசல்?

வாகனப் புகை
கூடும் !!
இருமியே தேயாதோ
கூடும் ?!

விலை ஏறும்
கச்சா !!
எண்ணெய் ஏற்றுமதியாளர்
பிச்சா ?

இது
மாறு தீ !!
இதை சமாளிக்க
விலையைக் குறைக்குமோ
மாருதி ?!

விபத்தில் தாங்காது
நாடி !!
போவாரோ பலர்
இதனை நாடி ?!

போக்குவரத்தில் அதிக
முகம் கட்டுவோர்
இரண்டு மூன்று சக்கர
வாகனம் ஓட்டுவோர் !

டாடாவின் எண்ணம்
அவர்களை வசப்படுத்த !!
Nano வந்திருக்கிறது
அதனை நிசப்படுத்த !!

மொத்தத்தில்..
உறுதியாய் ஒன்று தெரிகிறது
உலகோர் சித்தத்தில்...

நீயோ நானோ
என
போட்டியை ஏற்படுத்தும்
நானோ !!

Labels: , ,

Tuesday, January 15, 2008

ரோபோ

shankar

அவன்
இந்தியனை
இந்தியனாக்க
இந்தியன் எடுத்த
இந்தியன்

ஒழியுமா தேசத்தின்
ஒழுங்கீனம்
ஒருக்கால் ஒருவன்
ஒரு நாள் முதல்வனானால்?

என..
உத்தேசித்தவன்
தேசத்தை அளவின்றி
நேசித்தவன் !!

உன்னதம் மிக்க
உலக திரைப்படங்களை
உரக்க வாசித்தவன் !!
சினிமாவை முழுமூச்சாய்
சுவாசித்தவன் !!

Jeans அணிந்த
Teens
Voice உள்ள
Boys

என..
ஒட்டுமொத்த தமிழகத்தின்
காதலன்

சாதி
சாரைப் பாம்பு
சார்ந்து படமெடுப்பாரை

சாதிக்க அவை
சாத்தியமாகா எனச்
சாற்றி

தனித்து நின்ற
அந்நியன் !
தருக்கு தலைக்கேறா
கண்ணியன் !!

தமிழ் சினிமா
தலையெடுத்ததில்
பெரும் பங்கர்
பெருமைக்குரிய சங்கர் !!

எதிலும் அவர்
பின் தங்கர் !!
எதிலும் அவர்
பின் "தங்கர்" !!

இன்று..
முக்கு மூலையெல்லாம்
"வையகத்தில் ஒரு பிள்ளை
சங்கர் அன்றி கண்டதில்லை"
எனும் தோடி !!
காரணம் 100 கோடி !!

இது
இந்தியாவின்
சனத் தொகையா?
இந்தியன் எடுத்தவரின்
பணத் தொகையா?

என
பலரது விரல்
மூக்கில்!!
பழிச்சொல் பலர்
நாக்கில் !!

கஞ்சிக்கும் கூழுக்கும்
இந்தியன் தொடுவது
மண் பாண்டம் !!
அவனை வசப்படுத்த
அவசியமா பிரம்மாண்டம்?

இது தான்
தலையாயதாய் வைக்கப்படும்
வினா !!
சங்கருக்கோ இது
பல நாள் கனா !!

மண் குடிசை வர்க்கம்
மேல் தட்டு வர்க்கம்
என அனைவரையும்
போ போ
எனச் சொல்லுமா
ரோபோ ?

Labels: , , , ,

Sunday, January 13, 2008

நகை - ஆடம்பரமா? அவசியமா?

இன்றைய உறக்கம்
இல்லறத்தின் இறக்கம் என
இமையும் நினைந்து..

இரவு முழுதும்
இரு விழி திறந்து..

இடுப்பைக் குறுக்கி
இரும்பை உருக்கி

இளைஞன் அவனது
இரு கை வளையும்

அதன் பெருமை
அறியுமா
அவன் பத்தினியின்
இரு கை வளையும்?

அதிகமாக காசை
அதிகமான ஆசையினால்
அதிகமாக இறைத்து
அல்லலுறுகிறாள்! அந்தோ
அவள் எள்ளலுருகிறாள் !!

சீதையின்
சீதனம்
சீர் மிகுந்த சனகனின்
சீரா?
சீதா ராமன் பேரா?

மண்டிணி ஞாலத்தில்
மனதில் என்றும்
மங்காதிருப்பது....

நகையணிந்து
நடனமாடி
நயத்தக பேசிய மாதவியா?

அல்லது..
சிகை கலைந்து
சின்னா பின்னமாய்
சீர் மதுரை எரித்து

மாசாத்துவான் மகனை
மா உத்தமனாக்கிய
மாநாய்கன் மகளா?

நகையால் அன்று
நகரமே எரிந்தது !!
நானிலத்தார்க்கு இது
நாளும் தெரிந்தது !!

பெண்..
அவள் சமுதாயத்தின்
அங்கம் !!
தேவையா அவளுக்கு
தேவைக்கு அதிகமாக
தங்கம்?

சிக்கனம் எனச் சொல்லி
இக்கணம் இறையலாகாது
பணம் !!
இறைத்தால் இனிக்காது
மணம்!!

Labels: , , , ,

Thursday, January 10, 2008

Tamil Editor - I need information

I was having a XP computer till date. In that, I will compose my Tamil work using Murasu Anjal software ( www.murasu.com). I will save my work as a .MRT file ( murasu rich text). Then I will cut and paste it into the "Suratha tamil to unicode converter" web page so that I can then publish it in my site.

All that changed recently, when I got my O/S upgraded to Vista. Murasu Anjal is not installing on that O/S period. So I am stuck.

1) Does anybody have a solution by which I can get Murasu Anjal to work in Vista?
2) What other tamil editors are out there and more importantly, can you save your work after you type them in those editors?

Labels: , , , ,

Monday, January 07, 2008

சரஸ்வதி சதகம் 10

நயத்தகு நாதத்தில் புத்தகத்தில் பதத்தில்
வியத்தகு வேதத்தில் வீற்றவள் - மனச்
சுமை களையும் சுகமருந்தாம் கலைமகளை
இமைப்பொழுதும் நினைவில் இருத்து

Wednesday, January 02, 2008

சரஸ்வதி சதகம் 09

ஞானத்தின் முதல்வி நாமகளின் வாரிசோ
கானத்தின் முதல்வன் காணீர்! - வானே
போற்றும் வாகீசுவரியை பூசிக்க உடன்
தோற்கும் துயர் தாமே