Friday, February 20, 2009

இரு கண் இடுக்கண். . . .

2009022058060101
Picture Source: The Hindu

அனைத்து மக்களையும்
அற வழியில்
அரவணைக்க வேண்டும்
அரசின் இரு சட்டைகள் !!
காவல், நீதி என
அவற்றிற்கு உண்டு
அடையாள அட்டைகள் !!

அடித்துக் கொள்கின்றன
அவை இங்கு !!
அறம் செத்ததோ என
அடியேன் அவதரித்த மண்ணில்
அனைத்து திசைகளிலும் சங்கு !!

எடுத்த கையிலிருக்கும்
எடைத் தராசு...

எவர் சரி
எவர் தவறென...

”எப்பொருள் கேட்பினும்
மெய்ப்பொருள் கேளும் வரை “

எப்பக்கமும்...
எள்ளளவும்...

என்றும் தாழலாகாதெனும்
ஏரார்ந்த சிந்தனையில்...

”சட்டத்தின் முன்
சமம் எல்லோருமென”

இருக்கிறாள்
இன்னமும் ஒரு பெண்
இரு கண் கட்டி !!

இத் தருமத்தை
இறுதி செய்ய வேண்டிய
இரு பெரும் குழுவினருள்
இன்று நடந்த
இழி செயலால்

இரத்தமாய் அவளது
இரு கண்ணிலும் கட்டி !!

இலங்கையில் இறக்கலாம்
இனத்தார் ரத்தம் !!
இதற்காக இங்கேன்
இன்னொரு யுத்தம் ?

காப்பாற்றுக கதியற்றோரை என
காவல்துறையை நீதித்துறையை நாட்டினால்.....

வாதிட வேண்டியோர்
வசை பாடி மோதிடுவதை...
கள்வரை பிடிப்பாரை
கண்டபடி சாடிடுவதை..
கருத்தாகப் பணியாற்றும்
கட்டிடத்துக்கே தீயிடுவதை....

கண்டு சகிக்கமுடியவில்லை
கறவைக்கு நீதி வழங்கிய
கண்கவர் நாட்டினால் !!

யாருக்கு தேவை
” நெஞ்சுக்கு நீதி ” ?
ஆட்சியிலிருக்கும் ஓட்டையடைக்க
ஆள்வார்க்கில்லையே நாதி !!

Labels: , , ,

Friday, February 06, 2009

தண்டோரா கேட்ட தருமியாய். . .

தவிக்கிறது தமிழகம்
தரமான ஒரு நடிகர்
தவறியதால் !!
தவிக்கிறேன் நான்
தவர் அவர்க்கு
தன் கடைமையினின்று
தமிழகம் தவறியதால் !!

அவரை இழந்து அரற்றுகிறது
நகைச்சுவை உலகம் !!
அவ்வுலகில் அவரே
அனேகமாய் மற்றுமோர்
நடிகர் திலகம் !!

தமிழ் உலகிற்கு சிரிப்பூட்டவும்
தம் தொழிலுக்கு சிறப்பூட்டவும்

குண்டு ராவின்
குன்றளாவிய பணி பெரிது !!
அவர் ஒத்த நடிகரை
அதிகம் நாம் காணல் அரிது !!

ஆயிரம் பொற்காசுக்கு
ஆயாசமாக அனல் மூச்சிட்டு
ஆகாயம் பார்த்த தருமியாக...
ஓகோ ஓகோ என
”ஓஹோ ப்ரொடக்‌ஷன்ஸ்”
செல்லப்பாவாக....

அபூர்வ ராகங்களில்
அரு மருத்துவராம் சூரியாக....
ஏற்ற நடிப்பால்
ஏற்ற பாத்திரமாகவே அவர் மாறியாக.....
எழுதலாம் அவரைப் பற்றி விலாவாரியாக !!

காண்கிறேன் இன்று
காமெடி நடிகரிடம்
கண்ட மேனிக்கு கூச்சல் !!
கண்டிருப்பாரா அவர் நாகேஷின்
எதிர் நீச்சல் ?

மடிப் பிச்சை ஏந்தி
”மாது வந்திருக்கேன்” என…

காட்சிக்கு காட்சி
காண்பார் மனங்களை
கலக்கியவர் !!
பார்த்தார் நெஞ்சினின்று சிரிப்பை
பற்பல நாள் விலக்கியவர் !!

தர்மத்துக்கு எதிராக
தர்மராஜாக
”போலீஸ்கார நாயே” என
அபூர்வ சகோதரர்களில்
அனேகரை மிரட்டியவர் !!
வில்லன் நடிகர்களையே
வில்லத்தனத்தால் விரட்டியவர் !!

நடிகர் திலகம் தொடங்கி
நடிகர் பலருக்கு
நீள் வசனமெனில்
நா ”கேஷ்” !!
நாலு வார்த்தை சொல்லுவதை
நம் முகம் சொன்னால்? என
நினைத்தவர் நாகேஷ் !!

”ஆன்மா தவிர
அழியக் கூடியவை அனைத்தும் !!
நடப்பன உண்டோ
நடந்ததையே நினைத்தும் ?

இருக்கும் விரல்களால்
இழந்தோரை எண்ணாதே !!
இருப்போரை மறக்கும்
இழி செயலை பண்ணாதே !!”

மனதிற்கு சொல்கிறது கீதை !!
மறந்தால் உருவாகிறது வாதை !!

இருப்பினும் நம்மை
இன்னோர் சிலரது
இழப்பு பாதிக்கின்றது !!
நிதம் அந் நினைவு
நிலையற்ற வாழ்வில்
நிலையற்றோர் நம்மை
சோதிக்கின்றது !!

விசிறி எனக்கே
விசும்பல் இத்தனை......
பாசறையில் பட்டை தீட்டிய
பாலசந்தருக்கு எத்தனை ?

அடித்துச் சொல்கிறேன்
அழுதிருப்பார் கே.பி !
அனேக தினங்கள் கேவி !!

”பாட்டுக்கு நாரதன்
வீணைக்கு வாணி
அழகுக்கு முருகன்
சொல்லுக்கு அகத்தியன்
வில்லுக்கு விஜயன்
ஆசைக்கு நீ
அறிவுக்கு நான் “

இவ் வசனம்
இனி கேட்கும் நாள்
இலங்கும் என்னுள் விசனம் !!

”நடிப்புக்கு சிவாஜி”
”நகைச்சுவைக்கு நாகேஷ்” என

நாமறிந்தென்ன ?
நாடறிந்தென்ன ?

தமிழகத்தின் இரு
தனிப் பெரும் நடிகருக்கு
தரப் படவில்லையே
தாதா சாகேப் பால்கே !!
தரச் சொல்லி அழுத்தும்
திராணி இல்லையோ
தமிழக “தாத்தா” ஆளுக்கே ?

Labels: , , , ,

Monday, February 02, 2009

தனித்துயர்ந்தவன். . . .

nagesh

இழப்பினின்று மீண்டு
இரங்கற்பா எழுத
இல்லை என்னிடம்
இயல்பு நிலையில் மனம் !!
பொறுங்கள் ஓரிரு தினம் !!

Labels: