Friday, November 21, 2008

தாத்தா தடுமாறுகிறார்….

தச்சோ
அச்சோ

தட்ட வேண்டியதை
தக்க தருணத்தில்
தங்கு தடையின்றி
தட்ட வேண்டும் !!
முறுக்கோடு இருக்கும்
முரணான பலதை
முனைந்து கட்ட வேண்டும் !!

வளைந்தன நேராக்கவும்
விளைந்தன சீராக்கவும்

இரவு பகலாக
இழைக்க வேண்டும் !!
உளமாற உழைக்க வேண்டும் !!

உருவாவதில்லை சன்னல்கள்
இரு மரங்கள் கோராது !!
இயங்குவதில்லை அரசு
இயந்திரமும்
இன்னார்க்கு இது வேண்டும்
எனக் கோராது !!

பிரதி தினமும் மக்களின்
பிரதிநிதியாக...
பிரதிப் பிரதியாக...

மக்களோடு சோடியாக..
அவர்தம் நாடியாக...

நல்லன சொல்லி..
நலங்கெட்டன கெல்லி...

சஞ்சிகைகள் இயங்கவில்லையேல்
சனம் உய்வது எவ்வாறு?
உயர்ந்த இக்கருத்தை
உள்ளடக்கி ஒரு பத்திரிகை
உயர்ந்தது ஆதிநாளில் அவ்வாறு !!

அன்றும் இன்றும்
அதன் “ஐகான்”
அழகாய்ச் சிரிக்கும் ஒரு தாத்தா !!
அர்த்தமற்ற வார இதழ்களுக்கு
அனேக வருடங்களாக அதுவே
நல்லதெது கெட்டதெது என
நவிலும் ஆத்தா !!

அந்நாளிலே....
அரும்பெருமை மிக்க பலர்
அதன் பாசறையில்
அழகுற ஒளிர்ந்ததுண்டு !!
அடிக்கொருதரம் வரும்
அருங் கதை கட்டுரைகளினால்
அதிகம் அனேகர் குளிர்ந்ததுண்டு !!

கோபுலுவின் சித்திரங்களில்
கொள்ளை போகா மனமுண்டா?
வாலியின் வரிகளில்
வசமிழக்கா கணமுண்டா?

ராப்பிச்சையும்
ரெங்குடுவும்
சேர்க்காத சுகமுண்டா ?
மடிசார் ஸ்ரீவித்யாவுக்காக
”மடிசார் மாமி”
படிக்கா அகமுண்டா?
விறுவிறுப்பாய் பேசினதும்
விரலில் தான் நகமுண்டா?

சாண் உயரப் பத்திரிகையில்
வானுயர கருத்திருந்தது !!
அச்சேறிய அனைத்தும்
அளவில் நிறுத்திருந்தது !!

அந்தோ !
தடம் மாறிய பாதையில்..
தன்னை விட்டால் மக்கட்கு
தஞ்சமில்லை எனும் போதையில்…

அது இன்று போகின்றது !!
அடியேன் மனம் வேகின்றது !!

படிக்கப் படைத்தவனுக்கும்
படைத்ததைப் படித்தவனுக்கும்

விகடன் விகடன் என
வித விதமான தோரணைகளில்
வியந்து பேசுங்கால்....
ஒளி வீசுங்கால்.....

ஊருள் அந்நாளில்
உண்டு முன்பெல்லாம்
உன்னதமான
ஒரு தரம் !!

உற்று உற்று இந்நாள்
ஊர் முழுக்கப் பார்க்கினும்
ஒருவரும் திரும்புவதில்லை
ஒருதரம் !!

சாவி
இதயம் பேசுகிறது என

தாபித்தார் மறைவுக்குப் பின்னாலோ....
அல்லது தன்னாலோ...

இடம் தெரியாது போன
பத்திரிகைகள் ஏராளம் !!
இருப்பினும் விகடனுக்கு
இருந்தது பேராழம் !!

அது இன்று
எங்கே போயிற்று !!
என்னவாயிற்று ?

மாற்றம் எனும் பெயரில்
மாட்டலாமா பேனாவில்
எழுத்தை விட மற்றதை ?
சனத்தின் பிரச்சினை விடுத்து
சகத்திற்கு கொடுக்கலாமோ
சற்றும் தேவையற்றதை ?

அட்டைப் படம் மட்டும்
அனேக பொலிவு !!
கருத்தினில் கட்டுரையில்
காணவில்லையே வலிவு ?!

தலையங்கம் தொடங்கி
தவிடளவும் தரமில்லை !!
”தூ தூ” என வாங்கியவுடனே
தூக்கி எறியாக் கரமில்லை !!

எழுதிய எழுத்து
எழுந்து தெறிக்கவும்...
எண்ணற்றோர் மனதை
எட்டிப் பறிக்கவும்...

பத்திரிகையானது
முனைய வேண்டும் !
பத்திரிகையாளரும் அதனையே
பயபக்தியோடு நினைய வேண்டும் !

பக்கத்துக்குப் பக்கம் இன்று
பார்க்கின்றேன் திரைச் செய்தி !!
வாசிக்க வாசிக்க
வாடுகிறேன் நான்
விறைப்பெய்தி !!

குடியரசு நாட்டில்
முடியரசு பற்றிய துணுக்கினால்

இந்நாளில் புன்னகை அரும்புமா?
இளவட்டம் தான் அதனை
விரும்புமா?

நாஞ்சில் நாடனும்
காஷ்யபனும் தவிர

ஏகமாய் சோர்வை தருகின்றன
ஏனைய பல பகுதிகள் !!
இம்மியும்
இல்லை அவற்றிற்கு
அச்சேறும் தகுதிகள் !!

பிய்த்துப் பிய்த்து அவற்றை
பிரசுரிக்குமுன் ஆராய்ந்தால்

அவை என்னணம்
அச்சேறும் ?
அவ்வாறு வடிகட்டாக்கால்
அளவொண்ணா துயரில்
ஆழ்த்தாதோ உம்மை
அச் சேறும்?

உமது நோக்கம்
பத்திரிகை பெரிதும் விற்பதிலா ?
எழுத்து என்றும் நிற்பதிலா?

காசு பார்ப்பதிலா ?
கருத்தாழமிக்க படைப்புகளால்
கட்டுண்ட வாசகரோடு
கணமும் கரம் கோர்ப்பதிலா ?!

தம்மை வாசிப்பார் வகையறிதல்
தமது போட்டியாளர் பகையறிதல்

இதுவே பத்திரிகைக்கு அவசியம் !!
இவையிருக்க தேவையில்லை
தங்கம், பணம் எனும் வசியம் !!

அவனுக்கு “மோட்டார்”
அவளுக்கு “அவள்”
அரசியலுக்கு “ஜூனியர்”
அருளுக்கு “சக்தி”
அடியெடுக்கும் மழலைக்கு ”சுட்டி”
உழவுக்கு “பசுமை”
தொழிலுக்கு “நாணயம்”
திரைக்கு “சினிமா” என

ஆலம் விழுதாயிருக்கிறீர் !!
ஆயினும் பழுதாயிருக்கிறீர் !!

அனைத்தையும் கொண்டு வர
அதிகமாக உம்மிடம் அச்சிருக்கலாம் !
அனேகர் அதனில்
அல்லும் பகலும் கிறுக்கலாம் !!

எனினும் அன்பரே !
ஏரார்ந்த என் சொல் கேளும் !!
என்னைப் போற்றுவீர் நாளும் !!

உணர்வீரா எள்ளளவேணும்
உம்மையும்
உமது குழுமத்தையும்
உலகு எடை போட
உதவும் பத்திரிகை
ஆனந்த விகடனே என்று ?!
ஆகவே நடத்தாதீர் அதனை
கடனே என்று !!

வருவோம்
வார இதழிலிருந்து
வருடாந்திர இதழுக்கு !!
அதுவும் தருகிறது இழுக்கு
அளப்பொண்ணா உம் புகழுக்கு !!

போன வருடத்தில்
அட்டையில் போட்டீர் ”விசை”யை !!
திரும்பிய இடமெங்கும்
திரளாக மக்கள்
திட்டுவதற்கு தட்டினார் விசையை !

விஸ்வநாதன் ஆனந்தை
விட்டு விட்டீரே என

அடியேன் நான்
அஞ்சல் ஒன்றை
அனுப்பினேன் அன்றே
வசை மொழிந்து !!
உம்மிடமிருந்து வந்தது
உடனுக்குடன் பதில்
உணர்ந்தோம் தவறை என
என் கருத்தை வழிமொழிந்து !

அட்டை தொடங்கி இம்முறையும்
அதே தவறு !
கழுதை கெட்டால்
குட்டிச் சுவரு !!

இருக்கிறார் அட்டையில்
இம்முறை தமன்னா !!
இருந்திருக்கலாமே
நூற்றாண்டு காணும்
நம் அண்ணா ?!

உள்ளே இருப்பனவும்
இல்லை உயர்வாக !!
இதையே வருடந்தோறும் சொல்லி
இருக்கிறது எனக்கு அயர்வாக !!

தீபாவளி மலர்
படைக்கலாம் பலர் ....
பட்டொளி வீசிப்
பறப்பவர் சிலர் !!

படைத்திருக்கலாம் உம்முடையதை
மற்றவற்றிலிருந்து வேறுபடுத்தி !!
எரியும் நெருப்பில்
எண்ணையை விட்ட கதையாய்
யாது கண்டீர் மக்களை
நீர் வேறு படுத்தி ?

வார இதழ்களில்
வான் புகழுற்று
வாரா வாரம்
வாடிக்கையாளர்களை
வாரி அணைத்தாயே
வழி வழியாக !!
வாசன் வழியாக !!
வெளியேறலாமா உன் புகழ்
வாசல் வழியாக ?!

Labels: , , , , , , ,

Wednesday, November 12, 2008

பகலினில் ஆட்டம். . .

border gavaskar

ஆஹா!
அலர் கதிர் ஞாயிறை
கைக்குடை காத்தது !!
அவனியோர் முகத்தில்
அழகு முறுவல் பூத்தது !!

குமுறலில் கொதிக்கிறது ஓரணி !!
குழம்பியோர் கூட்டுகின்றார் பேரணி !!

மட்டை உலகில் அதற்கிருந்தது
மகத்தான ராஜ்ஜியம் !!
மாற்றியிருக்கிறது அதனை
இரண்டுக்கு – பூஜ்யம் !!

வெற்றிக் களிப்பில்
வெடிகள் எட்டுகிறது வானை !!
கிரிக்கெட் உலகம்
போற்றுகிறது இந்துஸ்தானை !!

மித மிஞ்சிய களிப்பில் அதனை
மிடுக்காக உட்கார்த்தியிருக்கிறது
மொகாலி - நாக்பூர் !!
தோற்றார் குமுறலில்
தெரிகிறது நாக்கூர் !!

உலகெங்கும் செய்தித்தாள்கள்
உன்னதமான இந்திய கெலிப்பை
உவந்து போற்றுகின்றன !!
ஆஸி அணியை
“அதிர்ஷ்டம் அடுத்தமுறை” என
அடிக்கொருதரம் தேற்றுகின்றன !!

இருப்பினும்
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
இன்ன பிற ஏடுகள்
குற்றமொன்றை சாற்றுகின்றன !!
குன்றளவு கோபத்தை ஏற்றுகின்றன !!

குற்றச்சாட்டின் ஆதாரம்
கடைசிப் போட்டியின்
மூன்றாம் நாள் ஆட்டம் !!
அதை நினைத்தே
ஆஸியினர் முகத்திலும்
அளப்பொண்ணா காட்டம் !!

ஆஸியணியினரால் அந்நாள்
கூடி முயன்றும்
கூட்ட முடியவில்லை ஒட்டங்களை !
கூட்டுகின்றார் அதனாலின்று
கூவிக் கூவிக் கூட்டங்களை !!

மாற்றணியின் ஓட்டத்தை தடுக்க
மாளாத் துயரத்தை கொடுக்க

அன்று தோனி
அமைத்தார் களம்
எட்டுக்கு ஒன்றாக !!
சர சரவென ஆஸியணியில்
சரிந்தன விக்கெட்டுகள்
ஒன்றன் பின் ஒன்றாக !!

இதன் நடுவே போட்டியும்
இரண்டு நாட்களுக்குப் பின்
இந்தியாவுக்கு என்றாக..
பண்டிதர் என
பறைசாற்றும் பலருக்கு
படவில்லை அது நன்றாக !!

எதிர்வரும் பிரச்சினையை
எதிர்நோக்கவும்...
எதிராளியை
எளிதாய் நீக்கவும்....

எதையும் செய்வீரோ நீர்
வெற்றி ஏற்றிட ?
எமக்குத் தோன்றவில்லை
உம்மை போற்றிட !!

இருக்கலாம் இப்போட்டி
யுத்தமாக...
இருப்பினும் இருக்க வேண்டும்
ஆட்டம் சுத்தமாக....

எனச் சாற்றுகின்றார் !!
எளிதில் போகா சோகத்தை
எதை எதையோ சொல்லி
ஆற்றுகின்றார் !!

ஆஸி அணியே !! - அவர்தம்
ஆதரவாளர்களே !!

ஏமாற்றத்தில் ஏன் குமைகிறீர் ?
பார்ப்பாருக்கு ஏன்
பரிதாபமாக அமைகிறீர் ?!

Nine_slips

என்ன பிரயோசனம்
எம்மைக் குற்றம் சொல்லி ?
ஈதன்றோ செய்தார் ஆதிநாளில்
உங்களுர் லில்லி ?

Labels: , , , , ,

Monday, November 10, 2008

பாதையெல்லாம் மாறிவிடும். . .

பிற வெறி எதனினும்
நிற வெறி தீது !!
அதனினும் கொடிய
அநீதி யாது ?

அன்று முதல்
இன்று வரை

வாழ்வு
சுதந்திரம்
இன்பம் பேணுதல்
இம்மூன்றும்....

ஆதார உரிமைகளாக
அமெரிக்கருக்கு
அவர்தம் ”சுதந்திரப் பிரகடனம்”
அளிக்கிறது !

ஆயினும் அந்நாட்டின்
ஆரம்ப காலத்தை
ஆராயுங்கால்
அவனி முகம் சுளிக்கிறது !!

slavery

காட்டு வேலை
வீட்டு வேலை என

ஆதி நாளில்
ஆப்பிரிக்காவிலிருந்து
அடிமைகள்
அழைத்து வரப்பட்டனர்
அமெரிக்கர்க்கு
அலுவல் புரிந்திட !!

ஓரவில்லை
ஒருவரும்
ஓரளவாவது சுதந்திரத்தின்
ஒருமையான அர்த்தத்தை
புரிந்திட!!

அடிமைகளை
அங்கங்கே ஏலம் விட்டனர் !!
அவதியுற்ற
அனேகர் ஓலம் இட்டனர் !!

அவ்வேளையில்
அடக்கி ஆளும்
அநாகரீகத்தை
அன்பரொருவர் தட்டிக் கேட்டார் !!
அரசு ஆணையினால்
அடிமைத்தனம் எனும்
அராஜகத்திலிருந்து
அனேகரை மீட்டார் !!

lincoln

இனியும் இருக்கலாகாது
இப் பழக்கம் நம்கண்....
இன்னணம்
இறுதிபடச் சாற்றினார்
ஆபிரகாம் லிங்கன் !!

ஆயினும்...
திறத்தால் அன்றி
நிறத்தால் வேறுபடுத்தும்

நிந்தனை
நெடுநாள் தொடர்ந்தது !!
நிற வெறி
நீக்கமற எங்கும் அடர்ந்தது !!

பல செயல்களில் விழையவும்..
பல இடங்களில் நுழையவும்....

தோல் நிறம் தடுத்தது !!
தோல்வியை போட்டியின்றி
தாமாய் கொடுத்தது !!

பேதமை ஒரு நாள்
பேருந்திலும் புகுந்தது !!
புரட்சி மிகுந்தது !!

இருக்கையை வெள்ளையனுக்கு
இப்பொழுதே விட்டுக் கொடு...
இல்லையேல் இங்கேயே
இறங்கி விடு....

ஓட்டுநன் ஒருவன்
ஓர் அணங்கை கேட்டான்
ஆற்றல் மெனக்கெட...
அவள் முனைந்தாள்
அகத் துயரை கணக்கிட.....

இருள் நிறமாக
இருக்கலாம் யாம்
கரி மை வண்ணம்...
இருப்பினும் எமக்குமுண்டு
உரிமை எண்ணம்...

உயிரை மதிக்கா
உன் போக்கை
உளமாற வெறுக்கிறேன் !!
உனது கோரிக்கைக்கு
ஒத்துழைக்க மறுக்கிறேன் !!

rosa_parks

1955ல்
அபாய மணியாக
அலபாமா மண்ணில்
அநீதிக்கு எதிராக
அம்மணி ரோசா பார்க்ஸின்
அக்குரல் எழுந்தது !!
அன்பர் ஒருவர் காதில்
அப்போதே அது விழுந்தது !!

1963ல்.
அவ் அன்பர்
அமெரிக்க தலைநகரத்தில்
எழுப்பினார் ஒரு வினாவை !!
விவரித்தார்
விலாவாரியாக அவரது
வியத்தகு ”கனாவை” !!

என் இனிய நண்பர்களே!
இத்தேசம் இன்றே எழட்டும் !!
என் கோரிக்கை
எல்லோர் காதிலும் விழட்டும்!!

mlk_2

”எல்லோரும் சமம்” என்று
எங்கும் கத்தி வைக்கின்றீர் !!
இருப்பினும்
இயல்பு வாழ்க்கையில்
இதனை ஏன்
ஒத்தி வைக்கின்றீர் ?!

எங்கெங்கே
எது எது
எவர் எவர்க்கென
எதற்காக இத்தனை கட்டுப்பாடு ?
ஏரார்ந்த உமது சிந்தனையில்
ஏன் இத்தகு தட்டுப்பாடு ?

களி அரங்குகளில்
கழிப்பறைகளில்
ரயில் சந்திக்குமிடத்தில்
தேவனை வந்திக்குமிடத்தில்

segregation

கருப்பர்களுக்கென நீவிர்
கட்டிப்போட்டிருக்கிறீர்
தனித் தனி இடமாக !!
இருக்க முடியவில்லை
இனி என்னால் சடமாக !!

சனநாயகம் தழைக்குமோ
அவ்விடம் ?
அனைத்து மக்களையும்
அழிக்காது போகுமா
அவ் விடம்?

மனிதனை மனிதனாக
மதிக்காது நழுவுகின்றீர் !!
தேசுறு கொள்கையினின்று
வழுவுகின்றீர் !!

எவ்விடத்தும்
எல்லோரிடத்தும்
எந்நாளும் நான்
எதிர்நோக்குகிறேன்
”வண்ணம் சாரா” மதிப்பினை !!

நடந்தால்
நாளைய ஏடுகள்
நாளும் தாங்கும்
நமது சரித்திரத்தின் பதிப்பினை !!

கோட்பாடுகளின் உண்மையைக்
கோதறக் கற்போம் !!
அதற்காகவேணும்
எமது உரிமைக்கு யாம்
எழுந்து நிற்போம் !!

ஒருவன் நேசிக்கப்படுவதும்...
ஒருவனது ஆற்றல்
ஒருமனதாக உத்தேசிக்கப்படுவதும்..

தகவால் அமையட்டும் !!
நமது காலத்திலில்லையேனும்
நாளை அது நம்
மகவால் அமையட்டும் !!

மாசுற்றோர் மனதை
மாற்றியது
மார்ட்டின் லூதர் கிங்கின்
மாசறு பேச்சு !!
அனல் மூச்சு !!

1991ல்
தேசம் மறுபடி எரிந்தது !!
அக்கிரமம் மேலும் விரிந்தது !!

இம்முறையும்
கதை ஒரு ”கிங்கை” சுற்றி !!
உலகம் மறக்கலாகாது
அந்நிகழ்வின் பங்கைப் பற்றி !!

காக்கும் கரங்களாம்
காவல் படையே
வன்முறையில் ஈடுபட்டது !!
நிற வெறியை
நிலத்தினின்று எறிய
உலக உரிமைக் குழுக்கள்
பாடுபட்டது !

2008...
ஆரம்பம் முதலே
அவனியெங்கும் தண்டோரா
அமெரிக்கத் தேர்தல்
அதி விரைவில்
பராக் பராக் என !!
அது நடந்து முடிய...
அனுதினமும்
அகிலம் மொழிகிறது
”பராக் !!” ”பராக் !!” என

barack obama pictures

அன்பரே !!
உதிரத்தால் எழுதப்பட்ட
உமது மூதாதையர் சரித்திரம்
நெடிது !!
அவர்தம் துயரங்கள் கொடிது !!

மறவாதே அவர்கள்
கண்ட துயரங்களை !!
அடிகோலும் அவை
உன் வாழ்வின் உயரங்களை !!

“பிறப்பொக்கும் எல்லா உயிரும்”
அவ்வெழுத்துண்டு
அன்றே எம் ஊரில் !!
நிறத்தின் அடிப்படையில்
நிகழும் தீதை
நாங்களும் பார்த்திருக்கிறோம் பாரில் !!

“வெள்ளை நிறத்தொரு பூனை”
என எங்களவன்
அதனாலன்றோ
அன்றே எழுதினான்
வான் பார்த்த மீசையோடு ?!
வையத்தின் மீதிருந்த
வற்றா ஆசையோடு!

உனை ஒத்த
உனைப் போன்ற
உன் இனமும்....
உனை மதிக்கும்
உலகோர் மனமும்.....

உடன் அடியொற்றும் இனி
உன் பாதையில் !!
உணர் இதனை
உனை விட மேதையில் !!

அந்தியும் உன்னை
அவனி ஆராயும் !!
ஆராயாது
அது நடக்குமா சீராயும்?

அரசியல் சரித்திரத்தில்
அரிதான
அமெரிக்க அதிபர் நாற்காலியை
அவ்வளவு எளிதாக யாரும்
தொட்டதில்லை !!
வெற்றிக் கொடி நட்டதில்லை !!

உனக்கது கிடைத்தது
உனை மக்கள்
உளமாற வாழ்த்தி
வாக்கை விரும்பி இட்டதாலா?

அல்லது..
மாற்றத்தை காணமுடியா
மற்ற கட்சியினின்று
முகம் திரும்பி விட்டதாலா?

ஒசோன் ஓட்டையா ?
ஒரினச் சேர்க்கையா ??

போரா?
பொருளாதாரமா?

பழங்காலப் பிரச்சினையா ?
பழம் ”பாலப்” பிரச்சினையா?

எங்கே உனது கவனம்
என
எப்போதும் கவனிக்கும் புவனம் !!

தீர ஆலோசித்து
தீர்க்கமான முடிவை எடு !!
நாளைய நல்வாழ்விற்கு
நல்விதையை இன்றே நடு !!

அறிவாளரை
அறிவியலாளரை
அடிக்கொருதரம் சூழ்ந்து கொள் !!
அன்றாடப் பிரச்சினையில்
அறவே ஆழ்ந்து கொள் !!

கவலைப்படாதே அவ்வப்போது
களையெடுக்க ...
வசவு வரினும்
வழி செய்
வசந்த வாழ்வு தலையெடுக்க

09/11..
கத்ரீனா சீற்றம்..
எரிபொருள் விலையேற்றம்..
வர்த்தகத்தில் முடக்கம்..
வாகன உற்பத்தியில்
வானளாவும் தேக்கம் தொடக்கம்
என...

வழி தெரியா பாதையினால்..
வழி காண முடியா
வாதையினால்...

அனைவரும் நொந்திருக்கிறார் !!
உளம் வெந்திருக்கிறார் !!

மக்கள் அனைவரும்
மாற்றத்தை முன்வைத்து
அளித்திருக்கிறார் வாக்கை !!
மறக்காதே அவர்க்கு
நீ கொடுத்த வாக்கை !!

Labels: , , , , , ,