Thursday, February 28, 2008

சென்று வா....

sirphoto

எமனுக்கும் வந்ததோ
அறிவியல் பாசம்?!
ஒப்பற்ற ஒருவரிடத்து
வீசிவிட்டான் பாசம் !!

சுஜாதா..
எழுத்துலகு "அதிரும்"
அப் பெயர் சொல்ல !!
அதற்கு
அவர் மறைவால்
ஆரம்பித்திருக்கிறது
துயர் மெல்ல !!

தமிழன்..
சாமன்யமாய் அறிவியலில்
அமிழன்...

அஞ்ஞானமான விஞ்ஞானம்
அணுவினின்று தொடங்கி
அணு அணுவாய்
அவரெழுத்தில்
அடங்க..
பெண்ணியம்
மானியம் மகசூல் என
பேசியவர்
பெண்டியம் ரேடியம் தோரியம்
என
தொடங்க...

தமிழனின் சிந்தை
ஏறியது !!
தமிழ் எழுத்துலகு
மாறியது !!

அது மட்டுமா...
சார்பியல்
சாக்ரடீஸ்
ஸ்ரீரங்கம்
சாரங்கம்
பூதம்
பொய்கை என
"கற்றதையும் பெற்றதையும்"
அவர் தர..
பிரசுரிக்க போட்டி போட்டு
பத்திரிகைகள்
முன் வர..

வறட்சி கண்ட
பத்திரிகைகள்
புரட்சி கண்டன
விற்பனையில் !!
பலர் வந்தனர்
இவர் போல் எழுதும்
கற்பனையில் !!

அனைவருக்கும் அளப்பிலடங்கா
வருத்தம்
அவர் இன்று காலமாக !!
ஆயினும் என்ன?
அவர் எழுத்து நிற்கும்
காலம் காலமாக !!

Labels: , , , , ,

Tuesday, February 19, 2008

ஒரு வரி...ஒரு கதை

200px-TaareZameenPar

குத்தாட்டம்
குறைந்த ஆடை

பண இறைப்பு
பளிங்கு மேடைகள்

சாதி
சடங்குகள்

பாம்பு
குரங்கு

காவல் துறை ஏச்சு
அரசியல் பேச்சு

"பஞ்ச்" வசனம்
நஞ்சு நடனம்

பன்முறை "தலை"யெடுக்கும்
வன்முறை

காது கிழியும்
இசை
ஆய் ஊய் எனும்
வசை

இவை
எதுவும் இல்லாமல்..
சொல்ல வேண்டியதை
மிகைப்படுத்திச் சொல்லாமல்

ஒரு படம் வராதா
என இருக்கிறதா
நெருடல்?
கேட்கிறதா உளம்
மயிலிறகின் மெல்லிய
வருடல் ?

"தாரே ஸமீன் பர்"
பாருங்கள் !!
தரமான படம்
தந்த அமீர்கானுக்கு
இரு கை தாருங்கள் !!

படம் முடியும் போது
தொண்டையை அடைக்கும்
இனம் புரியாத சோகம் !!
அதில் தெரியும்
அமீரின் தாகம் !!

தமிழில் இம்மாதிரி
படங்கள் சொற்பம் !!
கேட்டால் சொல்லிடுவார்
நமது ரசிகனின் ரசிப்புத்தன்மை
அற்பம் !!

காட்சிக்கு காட்சி
பார்த்துப் பார்த்து
செதுக்கப்பட்டிருக்கும்
இப்படம்
அமீரின் கையொப்பமேந்திய
அழகுச் சிற்பம் !!
கிடைக்கட்டும் அக்கைக்கு
"ஆஸ்கார்" சிற்பம் !!

Labels: , ,

வெறியும் நெறியும்

கொதிக்கிறது மும்பை !
வசை பாடுகிறது
வையம் வந்திருக்கும்
வம்பை !!

வடக்கில்
நடிப்பின் அச்சன்
அமிதாப் பச்சன்

அவரை..
இங்கு நாடுகிறாய்
காபிக்கு !
விழுமுதலை கொடுக்கிறாய்
உபிக்கு !!

என
தாக்கரே தாக்க
வன்முறையாளர் கத்தியை
தூக்க

குண்டுக்கு கலங்காத
மராட்டிய மண்
துண்டாகி கதறுகிறது !
தேசமே பதறுகிறது !!

தினசரி தினசரியில்
இன வெறி !
மறைந்து விட்டதா
"வேற்றுமையில் ஒற்றுமை"
எனும்
சன நெறி ?!

ஆட்சியாளரின்
பெரிய கடமை
பொறுப்பு !!
அதனினும் பெரிது
அடக்கம் எனும்
"பொறுப்பு" !!

இதுவே
மும்பை உணர்த்தும்
உண்மை !!
உணர்ந்தால் உருவாகும்
நன்மை !!

Labels: , ,