Tuesday, February 19, 2008

வெறியும் நெறியும்

கொதிக்கிறது மும்பை !
வசை பாடுகிறது
வையம் வந்திருக்கும்
வம்பை !!

வடக்கில்
நடிப்பின் அச்சன்
அமிதாப் பச்சன்

அவரை..
இங்கு நாடுகிறாய்
காபிக்கு !
விழுமுதலை கொடுக்கிறாய்
உபிக்கு !!

என
தாக்கரே தாக்க
வன்முறையாளர் கத்தியை
தூக்க

குண்டுக்கு கலங்காத
மராட்டிய மண்
துண்டாகி கதறுகிறது !
தேசமே பதறுகிறது !!

தினசரி தினசரியில்
இன வெறி !
மறைந்து விட்டதா
"வேற்றுமையில் ஒற்றுமை"
எனும்
சன நெறி ?!

ஆட்சியாளரின்
பெரிய கடமை
பொறுப்பு !!
அதனினும் பெரிது
அடக்கம் எனும்
"பொறுப்பு" !!

இதுவே
மும்பை உணர்த்தும்
உண்மை !!
உணர்ந்தால் உருவாகும்
நன்மை !!

Labels: , ,

1 Comments:

At 2/19/2008 10:38 AM , Blogger Unknown said...

Good one.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home