Monday, March 23, 2009

யாமறிந்த மொழிகளிலே......- 03

”உன்னை எங்கு காணினும்
உடனே திரும்புகிறேன் !!
உன்னுடன் கூட விரும்புகிறேன்” !!

” இன்னமும் இருக்கிறது
இளமையாய் இரவு !!
இங்கு இனி தொடங்கட்டும்
இனிதே நம் உறவு !!”

கடுங் கொச்சையென்று
கண் மூடு நேரத்தில்
காதைப் பொத்தாதீர் !!
காச்சு மூச்சென்று கத்தாதீர் !!

இவ் வசனம்
இருந்தது ஆங்கிலத்தில்
”பச்சைக் கிளி முத்துச் சரத்தில்” !!
இப் படத்துள்
இது தேவையா எனும்
இயல்பான சிந்தனை இல்லை
இயக்குனர் சிரத்தில் !!

தமிழில் அதனைச் சொல்ல
தமிழர் பண்பாடு அவரை
தடுக்கிறது !!
ஆயினும் ஆங்கண் அவருக்கு
ஆங்கிலம் கை கொடுக்கிறது !!

நமது மொழியும்
நமது பண்பாடும்
பின்னிப் பிணைந்தவை !!
இயல்பாக இணைந்தவை !!

இது எம்
இனிய தமிழின் தோல்வியா ?
ஆங்கிலத்தின் வெற்றியா ?

மொத்தத்தில்
வார்த்தைக்கு மட்டும் தமிழராக
வாக்கில் சிறிதும் தமிழற்ற

வக்கற்ற ஈனனோ
வசுதேவ் மேனனோ

தமிழில் சொல்லக்கூடியதை
தங்கு தடையின்றி
தமிழில் சொல்வதில்லை !!
தமிழில் சொல்ல முடியாததை
தமிழில்லா மொழியில்
தயக்கமின்றி சொல்வதால்
தமிழோ தமிழரோ
தவிடளவும் வெல்வதில்லை !

சிறுவரை மட்டுமன்றி
”சிகரங்களையும்” சில சமயம்
சிக்கல்கள் தொடுகின்றன !!

தமிழ் நாட்டில்
தமிழர் ஒருவருக்கு
தமிழ் இசையமைப்பாளர் சங்கம்
தலைமை தாங்கி நடத்திய
தகவான பாரட்டு விழாவில்

ஆங்கிலத்தில் அமைகிறது
கே. பி. யின் உரை !!
தட்டிக்கேட்க முடியுமா
“தங்கமே தமிழுக்கில்லை
தட்டுப்பாடு “ எனச் சொல்லி
தமிழ்ப் படத்திற்கு
“டூயட்” எனப் பெயரிட்டவரை ?

“கரெக்ட்” பண்ணுதல்
“டஃப்” கொடுத்தல்
”பீட்டர்” விடுதல் !

” பிக் அப்”
“பில்ட் அப்”

கல்லூரி மாணவர்தம்
கலைக் கருவூலத்துள் விளைந்த
காலத்தால் அழியாச் சொற்கள் !!
காட்டுவர் அனேகர் பற்கள் !!

வழக்குத் தமிழிலும் இவ்வாறு
வகை வகையாய் காண்கிறேன்
வார்த்தைக் கலப்பை !!
மாற்றுகின்றன அவை
மன்னுபுகழ் தமிழின் வனப்பை !!

- தொடரும். . .

Labels: , , , , , , , , ,

Thursday, March 19, 2009

யாமறிந்த மொழிகளிலே...... - 02

..
..
அல்லும் ஆராய்ந்து
அங்குமிங்கும் அலைந்து..

அயராது அனேகவற்றை
அள்ளிக் குவிக்கிறான் !!

சிறிதவற்றை சுகித்ததும்
சிரத்துள் தங்கிய
சிலாக்கியமான சிலவற்றை

சிரமம் தள்ளுதல் என
சிந்தித்து தினமும்
சிக்கித் தவிக்கிறான் !!

அழியாத அவை
அவனது அடையாளங்கள் !!
அனேக தினம்
அதன் சுகத்தை
அனுபவித்துள்ளன
அவனது ரத்த நாளங்கள் !!

தேன் தமிழ் மொழியும்
தென்னிந்திய இசையும்

என் அளவில்
என்றும் இருந்ததில்லை எட்டியாய் !!
இன்று வரை பிடித்திருக்கிறேன்
இன்னமும் இவற்றைக் கெட்டியாய் !!

தில்ரூபா
தலாஷ்
ஃபன்னா
பாரீஷ்
இஷ்க்
ஜபர்தஸ்த்...

அரபுச் சொற்களை
அங்குமிங்கும் ஏந்தியது
இந்தி மொழி !!
இதுவல்ல நம் வழி !!

ஆந்திர மொழியிலும்
ஆதிக்கமுண்டு சமஸ்கிருதத்திற்கு !

நம் மொழியில்
நம்மிடையே உண்டு
நமது வார்த்தை
நனிசிறந்த பல பதத்திற்கு !!

இன்று நம் மொழி
இலக்கு தவறி இருக்கிறது !!
“இங்கிலீஷ்” பேசுவதென்பது
இன்றியமையாதது என்றெண்ணி

நம் மண்ணே
நம் மொழி பேச மறுக்கிறது !!

எடுத்துச் சொல்கிறேன் சிலதை
எடுத்துக் காட்டாக !!
எப்படிப் பேசலாம்
என என்னை
ஏசாதீர் கூட்டாக !!

”வாரணம் ஆயிரம்” என
வரி விலக்குக்கு ஒப்பி
வசையினின்றி தப்பி....

படத்தின் தலைப்பு மட்டும்
பாவை ஆண்டாளது
பாட்டின் முதலடி !!

ஆயினும் திரைப்படம் முழுதும்
ஆங்கில மொழியின்
ஆதிக்க நெடி !!

-- தொடரும்

Labels: , , , ,