Monday, March 23, 2009

யாமறிந்த மொழிகளிலே......- 03

”உன்னை எங்கு காணினும்
உடனே திரும்புகிறேன் !!
உன்னுடன் கூட விரும்புகிறேன்” !!

” இன்னமும் இருக்கிறது
இளமையாய் இரவு !!
இங்கு இனி தொடங்கட்டும்
இனிதே நம் உறவு !!”

கடுங் கொச்சையென்று
கண் மூடு நேரத்தில்
காதைப் பொத்தாதீர் !!
காச்சு மூச்சென்று கத்தாதீர் !!

இவ் வசனம்
இருந்தது ஆங்கிலத்தில்
”பச்சைக் கிளி முத்துச் சரத்தில்” !!
இப் படத்துள்
இது தேவையா எனும்
இயல்பான சிந்தனை இல்லை
இயக்குனர் சிரத்தில் !!

தமிழில் அதனைச் சொல்ல
தமிழர் பண்பாடு அவரை
தடுக்கிறது !!
ஆயினும் ஆங்கண் அவருக்கு
ஆங்கிலம் கை கொடுக்கிறது !!

நமது மொழியும்
நமது பண்பாடும்
பின்னிப் பிணைந்தவை !!
இயல்பாக இணைந்தவை !!

இது எம்
இனிய தமிழின் தோல்வியா ?
ஆங்கிலத்தின் வெற்றியா ?

மொத்தத்தில்
வார்த்தைக்கு மட்டும் தமிழராக
வாக்கில் சிறிதும் தமிழற்ற

வக்கற்ற ஈனனோ
வசுதேவ் மேனனோ

தமிழில் சொல்லக்கூடியதை
தங்கு தடையின்றி
தமிழில் சொல்வதில்லை !!
தமிழில் சொல்ல முடியாததை
தமிழில்லா மொழியில்
தயக்கமின்றி சொல்வதால்
தமிழோ தமிழரோ
தவிடளவும் வெல்வதில்லை !

சிறுவரை மட்டுமன்றி
”சிகரங்களையும்” சில சமயம்
சிக்கல்கள் தொடுகின்றன !!

தமிழ் நாட்டில்
தமிழர் ஒருவருக்கு
தமிழ் இசையமைப்பாளர் சங்கம்
தலைமை தாங்கி நடத்திய
தகவான பாரட்டு விழாவில்

ஆங்கிலத்தில் அமைகிறது
கே. பி. யின் உரை !!
தட்டிக்கேட்க முடியுமா
“தங்கமே தமிழுக்கில்லை
தட்டுப்பாடு “ எனச் சொல்லி
தமிழ்ப் படத்திற்கு
“டூயட்” எனப் பெயரிட்டவரை ?

“கரெக்ட்” பண்ணுதல்
“டஃப்” கொடுத்தல்
”பீட்டர்” விடுதல் !

” பிக் அப்”
“பில்ட் அப்”

கல்லூரி மாணவர்தம்
கலைக் கருவூலத்துள் விளைந்த
காலத்தால் அழியாச் சொற்கள் !!
காட்டுவர் அனேகர் பற்கள் !!

வழக்குத் தமிழிலும் இவ்வாறு
வகை வகையாய் காண்கிறேன்
வார்த்தைக் கலப்பை !!
மாற்றுகின்றன அவை
மன்னுபுகழ் தமிழின் வனப்பை !!

- தொடரும். . .

Labels: , , , , , , , , ,