Thursday, March 19, 2009

யாமறிந்த மொழிகளிலே...... - 02

..
..
அல்லும் ஆராய்ந்து
அங்குமிங்கும் அலைந்து..

அயராது அனேகவற்றை
அள்ளிக் குவிக்கிறான் !!

சிறிதவற்றை சுகித்ததும்
சிரத்துள் தங்கிய
சிலாக்கியமான சிலவற்றை

சிரமம் தள்ளுதல் என
சிந்தித்து தினமும்
சிக்கித் தவிக்கிறான் !!

அழியாத அவை
அவனது அடையாளங்கள் !!
அனேக தினம்
அதன் சுகத்தை
அனுபவித்துள்ளன
அவனது ரத்த நாளங்கள் !!

தேன் தமிழ் மொழியும்
தென்னிந்திய இசையும்

என் அளவில்
என்றும் இருந்ததில்லை எட்டியாய் !!
இன்று வரை பிடித்திருக்கிறேன்
இன்னமும் இவற்றைக் கெட்டியாய் !!

தில்ரூபா
தலாஷ்
ஃபன்னா
பாரீஷ்
இஷ்க்
ஜபர்தஸ்த்...

அரபுச் சொற்களை
அங்குமிங்கும் ஏந்தியது
இந்தி மொழி !!
இதுவல்ல நம் வழி !!

ஆந்திர மொழியிலும்
ஆதிக்கமுண்டு சமஸ்கிருதத்திற்கு !

நம் மொழியில்
நம்மிடையே உண்டு
நமது வார்த்தை
நனிசிறந்த பல பதத்திற்கு !!

இன்று நம் மொழி
இலக்கு தவறி இருக்கிறது !!
“இங்கிலீஷ்” பேசுவதென்பது
இன்றியமையாதது என்றெண்ணி

நம் மண்ணே
நம் மொழி பேச மறுக்கிறது !!

எடுத்துச் சொல்கிறேன் சிலதை
எடுத்துக் காட்டாக !!
எப்படிப் பேசலாம்
என என்னை
ஏசாதீர் கூட்டாக !!

”வாரணம் ஆயிரம்” என
வரி விலக்குக்கு ஒப்பி
வசையினின்றி தப்பி....

படத்தின் தலைப்பு மட்டும்
பாவை ஆண்டாளது
பாட்டின் முதலடி !!

ஆயினும் திரைப்படம் முழுதும்
ஆங்கில மொழியின்
ஆதிக்க நெடி !!

-- தொடரும்

Labels: , , , ,