ஈழம் - 01
இராவணன் முதலாய்
தொடங்கிய சொந்தம் !
இராஜ இராஜனால்
இறுகிய பந்தம் !!
சீதையின்
சிறை வீடு !!
சினத்தில் இன்று
தமிழகத்திற்கு விடுக்கிறது
முறையீடு !!
பொறுப்பில் இருக்கும்
கருப்புக் கண்ணாடியே !
கத்திக் கத்தி சோர்கிறது
என் நாடியே !!
எது உமக்கு
பெரிது....
இராமர் பாலமா ?
இடைவிடாது கேட்கும்
இனத்தார் ஓலமா ?
எனக்கு
எனதென்று சொல்லிட
தேசம் இல்லை !!
உனக்கு என்னவன்
எனச் சொல்லிட
நேசம் இல்லை !!
மல்லேசுரத்தில்
மலாய்த் தீவில்
தமிழன் மருண்டான்..
தமிழ் நாட்டில்
தமிழன் வெகுண்டான் !!
மட்டக்களப்பிலும்
தமிழன் அரளுகிறான் !
எத் தமிழன்
தமிழ் நாட்டில்
மிரளுகிறான் ?
நீ "அஞ்சுக்கு"
அஞ்சுகிறாய் !!
பிறகு ஏன்
"எம் இனம்"
என என்னை
கொஞ்சுகிறாய்?
ஏன் முழக்குகிறாய்
பாசச் சங்கு ?
எங்கேயும் இல்லை
எமது துயரில் உந்தன்
பங்கு !
எம் நாட்டு
அகதிகளா?
உம் நாட்டு
தொகுதிகளா?
எதன் மீது உனக்கு
பாசம்?
ஏன் இன்னும்
"தமிழ் தமிழ்" எனும்
வெளி வேசம் ?
எமது
போர் ஒன்று !
நமது
வேர் ஒன்று !!
இருக்கலாகாது
இதை மறுக்கும் சிந்தனை
வேறொன்று !!
உடைத்து விடு
எமது கை விலங்கை !!
உருவாகும் புதியதோர்
இலங்கை !!
வைக்கிறது ஈழம்
வழக்கை !!
வலிக்கிறது எனக்கு
வலக்கை !!
கொடுக்க வேண்டும்
கோட்டையில் உள்ளோர்
இதற்கு பதில் !!
இன்றைய தேதியில்
இன்றியமையாத பிரச்சினை
இருக்கலாமா
இதற்கு பதில்? !!
வந்து விழுந்த
வார்த்தை கண்டு
வெறிக்கிறேன்..
எனது கருத்தை
சிறிது விரிக்கிறேன் !!
-- தொடரும்
Labels: karunanidhi, liberation, srilanka, tamil eelam
