Friday, May 23, 2008

பழகிய அசுரன்...அழகிய அசுரன்.. -- 1

200px-Mayabazar_rangarao

பீமன் இடும்பிக்கு
பீடின்றி பிறந்தவன்!
பாண்டு புத்திரர்க்கு உதவியே
பாந்தமாய் சிறந்தவன் !!

கர்ணனின் சக்தி ஆயுதத்தால்
கருணையின்றி மாண்டவன் !
அவனின்றி தப்பித்திருப்பானா
அர்ஜுனன் எனும் பாண்டவன் ?

போற்றுவீர் அவனது
பேருதவியை நித்தியம்..
போலியாகியிருக்கும் அவனின்றி
பலராமனது சத்தியம்

ஆம்..
அவனின்றி வத்சலை
எனும் பூவை
கைப்பிடித்திருக்க முடியுமா
அபிமன்யூவை ?

அற்றை நாளில்
அனேக திரைப்படங்கள்
அமைந்தன மெதுவாய்..
அது புராணப் படங்களுக்கும்
அவ்வப்போது பொருந்தும் பொதுவாய்....

அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அவற்றுள் சில
தனித்து நிற்கும் !!
அதன் சீட்டுக்கள்
அதிவிரைவாய் விற்கும் !!

நிறைய இருக்கும் அவையுள்
மாயக் காட்சிகள் !!
நிறைவாக ஓடும்
நிதமும் நான்கு காட்சிகள் !!

இன்னாரென்றில்லாது கவரும் அது
இருபாலரையும் !!
விட்டிடாது அது
அவரது பாலரையும் !!

சுற்றுப்புற சனம் அறிய
சுவரொட்டி ஒட்டுகையில்..
திமு திமுவென
திரளும் ஊர்
கீத்துக் கொட்டகையில்..

கூட்டத்தில் நெரித்து...
சீட்டைப் பறித்து...

கையகல கைக்குட்டையை
தரையில் விரித்து....
தட்டு தட்டாய்
லட்டு லட்டாய்
வாயுள் போவது கண்டு
சிரித்து....

நாக்கை மடித்து
சீட்டி அடித்து..
நமக்கே வெறுக்க
நகம் கடித்து..

காட்சிக்குக் காட்சி
காணத் தெவிட்டாத படம்
மாயா பஜார் !!
தரையிலமர்ந்து பார்த்தே
தேய்ந்திருக்கிறது பலரது நிஜார் !!

கண்டோம் அப் படத்தில்
கடோத்கஜனாய் ரங்கா ராவை!
கட்டிலடங்கா கற்பனையில்
கர்ஜித்தே கழித்திருக்கிறோம்
கணக்கற்ற ராவை !!

முறுக்கு மீசையும்
முறுக்கேறிய உடம்புமாய்...

வந்து நிற்பார் திரையில்
கதையோடு !!
ஒரு வினாடியில்
ஒன்றி விடும்
ஒட்டு மொத்த சனம்
கதையோடு !!

இது..

-- தொடரும்...

Labels: , , , , , , , ,