Monday, May 26, 2008

பழகிய அசுரன்...அழகிய அசுரன்.. - 2

gatothkach
..
நிடினியும் டோனியும்
நிண்டெண்டோவும் சோனியும்

அசுர கதியில்
அந்திப் பகலாய்
அலறி இருக்கும்
அவசர யுகம் !!
அதனால் இன்று
அசுரனுக்கும் வேண்டும்
அதி புதுமையான
அறிமுகம் !!

பிரதி தினமும்
பிள்ளைகளை அவை
போட்டி போட்டு கட்ட..
பிரயத்தனப் பட்டும்
இதிகாசங்களால் இயலவில்லை
பிஞ்சுகளின் காதினை எட்ட..

போதாததற்கு
தினமும் தொலைக்காட்சியில்
திகட்டுமளவு பேட்டி !!
பாட்டிகளுக்கு ஞாபகம் இருக்குமா
பேரன் பேத்தி ?!

புத்தகம் இல்லை
படுத்துறங்கும் போதும்
பிள்ளைகளின் தலைப்பக்கத்தில் !
அர்த்தம் இல்லா
அர்த்தராத்திரியிலும்
அவர்கள் நினைவெல்லாம்
ஆர்குட் வலைப்பக்கத்தில் !!

சர்வ நேரமும்
சனம் இவ்வாறு
சலனச் சிந்தையில்
சஞ்சரிக்க...

முடிவெடுத்து விட்டான் இவன்
முழுமூச்சாய் அவர்களை
நச்சரிக்க...

சித்திர வடிவத்தில்..
புதிய படிவத்தில்..

திரும்புகின்றான் திரைக்கு
இந்நிலையில் இன்று..
தவறாது பாருங்கள்
”திரையரங்கு” சென்று....

கோடம்பாக்கத்தில் கேட்டால்
கோணாமல் சொல்வர்
சிரிப்புக்கு மறு பெயராக
சிங்கீதத்தை..

இன்று
இயக்கியதோடன்றி
இசைத்தும் இருக்கிறார்
இப்படத்துக்கு அவர்
சங்கீதத்தை..

இந்தியர் சிலரது
நெடுநாளைய வருத்தம்...
அனிமேஷனுக்கும் இந்தியனுக்கும்
ஏழாம் பொருத்தம் !!

அக்குறை இப்படத்தால்
அறவே தீரட்டும் !!
அவனியோர் நம் பெயரை
அனுதினமும் கூறட்டும் !!

இது போன்ற முயற்சிகள்
மேற்கெலாம் ஏராளமாய் !!
இந்தியாவில் எடுத்தமைக்கு
வரவேற்கலாம் தாராளமாய் !!

Labels: , , ,