Wednesday, October 07, 2009

நோபல். . . .




அது
அகில உலக அளவில்
அளப்பரிய மேதமையை
அளக்கும் விதமாக
அமைந்த பரிசு !!

அதனோடு ஒப்பிடின்
அனேக பரிசு தரிசு !!

அதன் பெயர் நோபல் !!
அவ்விருதுக்கு ஒருவர்
அனேக காலம் தாழ்த்தி
அழைக்கப்பட்டால்
அந்தோ!
அவருக்கு “நோ” பல் !!

இளமையில் ஒருவர்க்கு அது
இனிதே கிடைக்குமேயாயின்

அவரிடம்
அனுதினம் காணலாம்
வாயெல்லாம் பல் !!

CV RAMAN
SubRAMANiam Chandrasekhar

இவ்வரிசையில் அறிவியலுக்காக
இந்தியர் ஒருவர்
இறவாப் பெரும் புகழை

வேதியியலுக்காக வென்று
ஏற்றிருக்கின்றார் இன்று !!

அவர் பெயர்
VenkatRAMAN Ramakrishnan !!

முதல் ராமனுக்கும்
மூன்றாம் ராமனுக்கும்
தமிழகத்தில் பிறப்பு !!

அன்றே சொன்னாள்
அவ்வைப் பாட்டி

“கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு “ !!

கரத்தில் வில்லேந்தி
காடு மேடிறங்கி...

கைப்பிடித்தாளை தேடி
கணமும் வாடி....

அணிலைத் தடவி...
அடவி அடர்ந்த
வழியைத் தடவி...

கல்லால் பாலமிட்டு...
துறவுக் கோலமிட்டு...

அலைந்தான்
அந்நாளைய ராமன்
பல மைல் கல் !!

திரை கடல் ஓடி
திரவியம் தேடி

நீலக் கடல்
நட்சத்திரத் திடல்
நம் உடல் என

ஆண்டாண்டு காலம்
ஆராய்ச்சியின் மூலம்

தன் “home” விட்டு
StockHolm தொட்டு

நோபல் வாங்கும்
இன்றைய ராமன்களால்
இந்தியா அடைகிறது

முன்னேற்றப் பாதையில்
மற்றுமொரு மைல்கல் !!

Labels: , , , , ,

Friday, June 20, 2008

எங்கிருந்தோ வந்தான்....

spielberg2


அவன்..
அகிலத்தாரை
அருமையான படங்கள் மூலம்
அழகாய்க் கட்டியவன் !!
இயக்குனனாய்
இரு முறை
இமயத்தை எட்டியவன் !!

சுறாவைக் காட்டி
சுயமிழக்கச் செய்து
பயம் உறுத்தியவன் !!
இம்மி பிசகாது
இட்லரின் கொடுமைகளை
இமை முன் நிறுத்தியவன் !!

இவன்...
இளைய தலைமுறை
இமை படபடக்க வைக்கும்
இந்தியன் !!

இன்றைய தேதியில்
இளைஞர் கையில்
இந்தியா எனில்
இதற்கு உதாரணமாக
இருப்பவன் அனில் !!

தனித்து நின்று
தரணியை வெல்லுதல்
தன் பாணி என
தருக்கின்றி சொல்லும்
அம்பானி !!

அல்லும் முன்னோனுக்கு
அலுவலில் அல்லல்
அதிகம் பலரோடு உரசலாய் !!
அடிக்கடி பேசப்பட்டது அது
அரசல் புரசலாய் !!

 Falcon

அன்பன் நம்மவனுக்கோ
அண்ணனிடமே சண்டை !!
இமைப்பொழுது பார்ப்பினும்
இருவரும் காண்பிக்கின்றார்
முதுகுத் தண்டை !!

இந்நிலையில்
இவனது நிறுவனமாம்
இசைமிக்க ரிலையன்ஸ்
இயைந்திருக்கிறது அவனோடு
இன்ப மயமான அலையன்ஸ் !!

அன்பரே !!
அழகான இந்தியாவுக்கு
அதி விரைவாய் வருக !!
உலகத் தரமான படங்களை
உங்கள் கையால் தருக !!

எம்மவரிடம் உண்டு
எவரையும் மிஞ்சும் திறமை !!
கோடிட்டுக் காட்டுவதில் தான்
கொண்டுள்ளோம் பழமை !!

ஆ என்றதும் எடுக்கிறார்
ஆளுயரக் கத்தி !!
ஆயாசம் வந்து விட்டதெனக்கு
அல்லும் இதனைக் கத்தி !!

அனேகப் படமுண்டு
ஆகா ஆகா என !
அருமையாய் ஒன்றில்லை
ஆகா! ஆகா! என !!

நிரம்ப இல்லை
நினைவில் நிற்பவை !!
நின்னிடம் இருக்கிறது
நிறையக் கற்பவை !!

எனது தேசத்துப் படங்கள்
எனக்குப் போயிற்று கைத்து !!
என்றாவது ஒரு நாள்
எழுதாக் கிளவியை
எடுத்துச் சொல்வீரா
எம்மவரை வைத்து ?!

கரத்தில் எடுத்தார்
கற்றோர் சிலர்
கரை காணா கப்பலில்
காதலை !!
கையில் எடுப்பீரா நீர்
கண்ணீரில் காதலை ?!
கொடூரமாய்ச் சாதலை ?

முற்றிலும் புதிய கோணத்தில்
முழு நீளத்தில்...

செல்லுலாய்ட்டில்
செதுக்குவீரா நீராகிலும்
ஜாலியன் வாலா பாக்கை ?!
அதுவன்றோ மாற்றும்
அவமானமாக அதனை
அறிவுக்கு உணர்த்தாத
அந்நிய அரசின்
அலட்சியப் போக்கை ?!

ஸ்பீல்பெர்க் இயக்க
இசைஞானி இசைக்க
கலைஞானி நடிக்க
பி.சி புகைப்படம் பிடிக்க

அமையுமா படம் இனி ?
அள்ளுமா ஆஸ்கர் எனும்
அரிதாய்க் கிட்டும் கனி ?

Labels: , , , , ,