நோபல். . . .

அது
அகில உலக அளவில்
அளப்பரிய மேதமையை
அளக்கும் விதமாக
அமைந்த பரிசு !!
அதனோடு ஒப்பிடின்
அனேக பரிசு தரிசு !!
அதன் பெயர் நோபல் !!
அவ்விருதுக்கு ஒருவர்
அனேக காலம் தாழ்த்தி
அழைக்கப்பட்டால்
அந்தோ!
அவருக்கு “நோ” பல் !!
இளமையில் ஒருவர்க்கு அது
இனிதே கிடைக்குமேயாயின்
அவரிடம்
அனுதினம் காணலாம்
வாயெல்லாம் பல் !!
CV RAMAN
SubRAMANiam Chandrasekhar
இவ்வரிசையில் அறிவியலுக்காக
இந்தியர் ஒருவர்
இறவாப் பெரும் புகழை
வேதியியலுக்காக வென்று
ஏற்றிருக்கின்றார் இன்று !!
அவர் பெயர்
VenkatRAMAN Ramakrishnan !!
முதல் ராமனுக்கும்
மூன்றாம் ராமனுக்கும்
தமிழகத்தில் பிறப்பு !!
அன்றே சொன்னாள்
அவ்வைப் பாட்டி
“கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு “ !!
கரத்தில் வில்லேந்தி
காடு மேடிறங்கி...
கைப்பிடித்தாளை தேடி
கணமும் வாடி....
அணிலைத் தடவி...
அடவி அடர்ந்த
வழியைத் தடவி...
கல்லால் பாலமிட்டு...
துறவுக் கோலமிட்டு...
அலைந்தான்
அந்நாளைய ராமன்
பல மைல் கல் !!
திரை கடல் ஓடி
திரவியம் தேடி
நீலக் கடல்
நட்சத்திரத் திடல்
நம் உடல் என
ஆண்டாண்டு காலம்
ஆராய்ச்சியின் மூலம்
தன் “home” விட்டு
StockHolm தொட்டு
நோபல் வாங்கும்
இன்றைய ராமன்களால்
இந்தியா அடைகிறது
முன்னேற்றப் பாதையில்
மற்றுமொரு மைல்கல் !!
Labels: 2009 chemistry nobel goes to VenkatRaman Ramakrishnan, british textbooks and indian history, Chandrasekhar's limit, chemistry, CV Raman, nobel prize
