மஹா பெரியவர்...

ஜெய வருஷத்தில்
வைகாசி அனுஷத்தில்
சுவாமிநாதனாய்
விழுப்புரத்தில் உதித்தவர்..
சந்திரசேகரனாய்
கச்சியில் தன் பெருமையை
பதித்தவர்
எத்துயரும் தீர்க்கும்
மருந்தவர்....
எளிமையாய் வாழ்ந்த
அருந் தவர்..
அறிந்திருக்கிறேன்
அவர் பெருமையை
காற்று வாக்கில் !!
படித்திருக்கிறேன்
பல முறை
அவர் எழுத்தை
”அருள்வாக்கில்” !!
இன்று நாட்டில்
இருக்கின்றார்
இலட்சம் துறவி !
இல்லை அவருள்
இவரொத்த பிறவி !!
காண முடிகிறது அன்றாடம்
நாட்டினுள் காவி !!
கண் மூடு நேரத்தில்
நடக்கிறது கண்றாவி !!
கட்டுண்டு தவிக்கிறது
இந்து மதம் !!
கரையேற்றுமா அதனை
கச்சி மடம் ?!
தேசாந்தரியாய்...
”எந்நேரமும் உன் சந்நிதியில்”
என தேவகாந்தாரியாய்...
இருக்க உண்டெனக்கு
விருப்பம் !!
வரவேண்டும் அதற்கொரு
திருப்பம் !!
ஐயனே...
உங்களை சந்தித்ததில்லை
உமது இருக்கையில்
நீர் இருக்கையில் !!
ஒரு நாள் வந்து பார்ப்பேன்
ஓரிருக்கையில் !!
Labels: kanchi paramacharya birthday, manimantapam, orirukkai
