Wednesday, November 04, 2009

சிக்குன் குனியா. . . . -- 4

1)

கழிவு நீரை மக்கள்
கடைத்தெருவில் விடுவதேன் ?
கொசுவால் அவதிப் படுவதேன் ?

வீடு கட்டுவோர்
வீட்டைச் சுற்றி
விட வேண்டிய

சுற்றளவு என்னவாயிற்று ?
சுற்றுப்புறமன்றோ
சுகாதாரமின்றி நாறிப் போயிற்று ?

நிரம்பட்டும் எனது தொப்பை !
நிறையட்டும் ஊரில் குப்பை !!

என வாழ்வதில்
என்ன லாபம் ?
எல்லை மீறுகிறது
எனது கோபம் !!

எண்ணிலடங்கா அவர்கட்கு
எவன் தந்தான் பட்டா ?
நாமன்றோ படுகிறோம்
நாடு கெட்டா ?

”வீட்டிற்கு ஒரு மரம்”
வீணர் பேச்சு.....
தெரு முனை பூங்காவால்
தொல்லை போச்சு .....!

இவ்வாறன்றோ பலர்
இந்தியாவில் வாழ்கின்றார் ?!
அனேகர் அவராலன்றோ
அல்லும் அல்லலில்
ஆழ்கின்றார் ?!

வருடா வருடம்
வாசலுக்கு வந்து
வரி வசூலிக்கும்
வக்கற்ற கிராமப் பஞ்சாயத்துகள்....

கையூட்டு மட்டுமே வாங்கும்
கணக்கில்லா வாரியங்கள்…
உருப்பட வழி மறிக்கும்
ஊராட்சி ஒன்றியங்கள்...

இவர்கள் எதற்கு
இந் நாட்டிற்கு ?
நடக்கிறது நடக்கிறது
தன் பாட்டிற்கு !!

அடித்தள அரசியலே
அலங்கோலமான நாட்டில்

இங்கங்கெனாது மலேரியாவால்
இந்தியர் பலர்க்கு குளிருகிறது !!
இதனூடே வாசகம் மட்டும்
”இந்தியா ஒளிர்கிறது “ ?!

தொண்ணூற்றைந்து வயதில்
தொண்டு கிழமாய் பாட்டி !!
எண்பது வயதெட்டிய எந்தை !!
எழுபதெட்டிய அன்னை !!

இவர்களை விட்டு
இளையோன் என்னை
இந்நோய் படுத்தியது

குளித்த நீரையோ
கழித்த நீரையோ

ஈர் இரண்டு மா
ஈர் நான்கு தென்னை
எண்ணிலடங்கா வாழை

இவற்றை தவிர்த்து
இம்மியும் வெளியே விடாத
இனிய என் இல்லுள்

இல்லை இக்கொசு
என்பதற்கு சாட்சி !!

இருப்பினும் சொல்கிறேன்
நாக்கு தள்ள வைக்கிறது
நான் வாழ்ந்த ஊரான
பெருங்களத்தூர் பேரூராட்சி !!

பெயரளவில் முன்னேற்றம் !!
ஊரெங்கும் துர்நாற்றம் !!

அத்தனையும் பார்க்கலாம்
அப் பஞ்சாயத்துள் !!
அமிழ்ந்து கிடக்கிறது
அவ்வூர்
அரசியல் சாயத்துள் !!

-- தொடரும். . .

Labels: , , , ,