Friday, February 12, 2010

ஏழு சுரங்களுக்குள். . .




நிமிர்ந்து நிற்கிறது
எந்தன் தலை !!
நிலை கொள்ளக் காரணம்
இரட்டை இலை !!

செவிக்கு உணவு கேட்டார்
செறிவோடு பெருமையுற....
செய்யாதார் சிறுமையுற....

செயற்கரிய செயலை
செம்மையாக
செய்து முடித்திருக்கிறது
“செயா” தொலைக்காட்சி !!
வசந்தம் வருமுன்னே
வந்தது நமக்கு மீட்சி !!

“Carnatic Music Idol” என்ற
அஷரங்களின்
அரசன் யார்? எனும்
அர்த்தம் உள்ள
அந்த போட்டி

நம் சமூகத்திற்கு
நல் வழிகாட்டி !!

”தைவதத்தில் துவங்கு !
நிஷாதத்தில் நிறுத்து !! “

”விளம்ப காலத்தில்
கிளம்பு !!

துரித காலத்தில்
துவளாது சுரங்களை விவரி !!
காணாமல் போகாதே
வழி தவறி !! “

”கணக்கோடு தாளத்தை
கச்சிதமாய் போடு !!
கணீரென பாடு !! “

”நற்றுணை” நமச்சிவாயமே எனும்
நம்பிக்கையை நாம்
நாளும் மறவாதிருக்க
நற் பொருளோடு
நற்றவற்றவர் இயற்றிய
நலமிகு பாடலை

நயமாக பாடாத
நினது சாமர்த்தியம் என்ன ?

திரும்பச் சொல்
திருத்துகிறேன் நான்
சாகித்தியம் என்ன ?

”ஆறில் ஒருவனே !!
போட்டியாளரில் சிறுவனே !!



மக்களின் எச்சரிப்பென்ன ?
நீ பாடிய ஷண்முகப்ரியாவில்
நிஷாதத்தின் உச்சரிப்பென்ன ?”

”சுட்டிப் பெண்ணே !
குட்டிப் பெண்ணே !!

முதலிடம் உனது தேடல் !!
முகவரி மறக்கலாமா
உந்தன் பாடல் ?!

சுரம் அதன்
தரம் விடுக்க

போனாள் ”நாயகி” ”தர்பாருக்கு” !!
போதோடு நீ
போகலாம் இனி ஊருக்கு !!

ஜதியினின்று வழுவாதே !!
நாங்கள் உன் மீது வைத்த
நம்பிக்கையினின்று நழுவாதே !!

என...
வகைக்கேற்ப
வளரும் கலைஞரை

வளர்ந்த கலைஞர்
வறுத்து எடுத்தார் !!

கேட்ட கேள்விகளுக்கெல்லாம்
கேட்டார் களிப்புற
போட்டியாளர் பாடலால்
பதில் கொடுத்தார் !!

திரும்பிய பக்கமெல்லாம்
திரளாக வந்த சுரத்தில்

அடைந்தேன் நான்
அளவிலா திளைப்பு !!
அகன்றது என்
”அந்த நாளும் வந்திடாதோ” எனும்
அங்கலாய்ப்பில் வந்த களைப்பு !!

ஆழ் மனதில்
ஆழங்கால் பதிக்குமாறு
எண்ணங்கள் சில
எங்கிருந்தோ உதிக்கின்றன !!

நம் பலத்தை
நாம் ஆராய வேண்டும் எனும்
நற் சிந்தையை அவை
நம்முள் பதிக்கின்றன !!

-- தொடரும்

Labels: , , , , , , ,