Friday, March 27, 2009

யாமறிந்த மொழிகளிலே...... - 05

“ஆயிரம் கரங்கள் நீட்டி
அணைக்கின்ற தாயே போற்றி
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி
இருள் நீக்கம் தந்தாய் போற்றி “

அத்தகு “இறைச் செய்யுளுள்”
அமைதி உங்கட்கு
அதிகம் வாய்ப்பதில்லையா ?
அதையறியாது நீவிர் பேசுதல்
அறிவாளரை ஏய்ப்பதில்லையா ?

தெவிட்டாது தமிழ்
தெளியச் சொல்லிடின் என்றேன் !!
தனித்து விடப்பட்ட
தமிழின் பக்கம் நின்றேன் !!

இது ஒரு புறம் !!
இதற்குண்டு மறுபுறம் !!

தமிழ் தமிழ் என்றவுடன்
“தி.மு.க” வா எனப்படுகிறேன் !!
அந்த அளவுக்கு மொழிப்பற்று
அரசியலானது கண்டு
அவதியின் உச்சம் தொடுகிறேன் !!

மொழிப் பற்றும்
மொழி வெறியும்

வேறு வேறு !!
உலகோரை வேண்டுகிறேன்
உடனிதை உணருமாறு !!

அலுவல் முன்னிட்டு
அண்டை மாநிலத்து பிரபலங்கள்
அவ்வப்போது தமிழகத்துக்கு
அழகு மிளிர வருகையில்...

மாத்திரை இலக்கணம் இறந்து
மெல்லினம் வல்லினம் மறந்து

”ஷெண்ணை என்கு
ரிம்பப் பிதிக்கும் “ என..

நாக்கை நாலு முழம் நீட்டி
ஓரிரு எழுத்தைக் கூட்டி

ஒய்யாரமாய் தமிழில்
ஒசிய இருவார்த்தை பேசுவர் !!

அவர் அயலார் !!
அழகுத் தமிழை
அழகோடு பேச இயலார் !!

தமிழரே தமிழை
தாறுமாறாய் பேசினால்
தரக்குறைவென்று கூசினால்

யாரே புன்னகை வீசுவர் ?!
நாட்டார் நம்மையன்றோ ஏசுவர் ?

இவற்றுக்கு அப்பாற்பட்டு
இலக்கண சுத்தமாய்
இரண்டொருவர் பேசிடின்

”கலைஞானி”யா
”கவிப்பேரரசா” என்பர் !!

வாய்க்கு வந்தபடி பேசும்
வக்கில்லா வம்பர் !!

”மோர்” எனப் பெயரிட்ட
மோரில்லா நவீன அங்காடிகளில்
சிற்றுண்டி உணவகங்களில்
சீலைக் கடைகளில்

தமிழில் பேச விரும்பி
தமிழ் பேசுவீர்களா? என
தமியேன் நான் கேட்டால்

-- தொடரும். . .

Labels: , ,