இருபது வருடங்கள். . . – இறுதியாக

எம். எல். வி.
எஸ்.ராமனாதன்
சந்தானம்
டி. கே. ஜே
கே. வி. என்
எம். எஸ்
செம்மங்குடி
ராஜம் ஐயர்
டி. கே. பி
எண்பத்தொன்பதில் இருந்தனர்
எண்ணிலா ஜாம்பவான்கள் !!
அவர் பாடலுக்கு ஒப்பாகாது
அரும் பழந் தேன்கள் !!
ஒவ்வொருவருக்கும் இருந்தது
ஒவ்வொரு பாணி !!
இன்று அவர்களை
இறுகப் பிடித்திருக்கிறது
இரும்பு ஆணி !!
காலம் வந்தோ...
காலம் வராமல்
காலன் வந்தோ...
நித்ய சூரியாய் அவர்கள்
நிற்கின்றார் வானில் !!
வருடா வருடம்
வந்து வந்து போகிறது
வசந்தமெனும் வேனில் !!
அவர் முன்
அவையில் புகுந்து...
ஆற்றல் மிகுந்து...
அன்று நீவிர் செய்த
அசுர சாதனை
அருந்தமிழர் கண்ணில் !!
அத்தகு மண்ணில் ....
அந்நாளில்
அப் பாடகர்கள் எடுத்த
அருபெரும் பொறுப்பினை
சங்கீத உலகு
சந்தேகமின்றி
சாற்றியிருக்கிறது
சாரதி நீ ! என
உந்தன் தோளில் !!
அடுத்த சந்ததியினர்க்கு
அச் சிறப்பை செய்ய
அகிலத்தில் உம்மை விட்டால்
ஆளில் !!
முன்னோர் வகுத்த
முறையான சங்கீதம்
முழுமை உற்று
முதன்மை பெற்று
முதன்மையாய் அடையட்டும்
முன்பறியா இடம் !!
உங்கள் கையில் அத்தேரின்
உன்னதமான வடம் !!
- முற்றும்
Labels: future of carnatic music, Her added responsibilities, The magic voice of Sudha Ragunathan
