Tuesday, March 17, 2009

யாமறிந்த மொழிகளிலே......- 01

உண்ணும் உணவோ
எண்ணும் கனவோ

ஒருநாளும்
ஒரே போல் இருப்பதில்லை !!
அவ்வாறு அமையின்
அனேகர் பொறுப்பதில்லை !!

நாக்கோ
மூக்கோ

வாக்கோ
நோக்கோ

வயதுக்கு வயது மாறுகிறது !!
வரலாறும் அதையே கூறுகிறது !!

புத்தனுக்கு பொலிவு வாழ்க்கை
புதிதாய் ஒருநாள் கசந்தது !!

அதகளத்தில் அடிக்கொருதரம்
அகோர தாண்டவமாடிய
அரசன் அசோகனுக்கு
அமைதி ஒருநாள் உசந்தது !!

கோனுக்கு எப்படியோ
குடிக்கும் அப்படியே !!

சிறிய வயதில்
சிணுங்க வைத்த
சிவக்கச் சுட்ட அப்பளம்..

சிறிது வயதானவுடன்
சிறுகச் சிறுக இனிக்கிறது....
நாட்பட நாட்பட
நார்த்தையும் நாவில்
நாளும் தனிக்கிறது !!

நாத வயப்பட்டு
நான்கு மணிக்கு எழுந்து
சலனமின்றி நாம் கேட்ட
சல நாட்டை...

நாற்பது வயதில்
நமுத்து விடுகிறது !!

இதுவரை கேட்டிராத
இன்ன பிற இசை
இமைக்கும் வேளையில்
இழுத்து விடுகிறது !!

மாறாதிருக்க நாம்
மறியல்ல !!
மாறாதிருப்பதும் நெறியல்ல !!

கடந்த பாதையை நினைந்து
கணமும் மெனக்கெடவா?
கண் முன் விரியும்
கண்டிராப் பாதையை
கணக்கிடவா ?

என மனிதன்
என்றும் அலை பாய்கிறான் !!
எண்ணி எண்ணியே
எண்ணற்ற நாள் தேய்கிறான் !!

நிலம் துறந்து
பலம் மறந்து

என்றென்றோ
எங்கெங்கோ

எப்படி எப்படியோ
எதை எதையோ

ஏகமனதாய் இனி
ஏதுவானது இதுவென
ஏற்கும் மனிதன்..

-- தொடரும்

1 Comments:

At 3/19/2009 8:34 AM , Blogger Narayanan Venkitu said...

Finally something that I could relate too...!! Wonderful..I agree !!

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home