Thursday, May 22, 2008

சூறையும்...நடுக்கமும் - 2

இயற்கையாய் இன்றி
இயற்கையால் இன்று
இயற்கை எய்தி
இருக்கின்றார் பலர் !!
இன்னும் கணக்கில் வரவில்லை
இப்பொழுது வரை சிலர் !!

இது தான் கடவுளின்
ஆசியா??
அழுகையோடு கேட்கிறது
ஆசியா !!

புரட்டிவிட்டன அவர் வாழ்வை
பூகம்பமும் புயலும் …
இயல்பு வாழ்க்கை
இனி என்னணம்
இவர்களால் இயலும் ?

ஆறட்டும் இன்றே
அவரது காயம்!
அதற்குத் தேவை
மனித நேயம் !

திபெத்தை துன்புறுத்தும்
சீனத்தையும்..
நிவாரணப் பணிகளை
நிரந்தரமாய் முடக்கும்
மியான்மர் ராணுவத்து
ஈனத்தையும்....

வைதது போதும்
எள்ளி !!
வைப்போம் அச்சிந்தனையை
தள்ளி !!

“இன்னா செய்தாரை ஒறுத்தல்”
”இடுக்கண் களைவது நட்பு“

நன்று சொல்கிறது
நம் மொழி !!
நல்கும் அதுவே
நல் வழி !!

அதனை என்றும் நினைப்போம் !
ஆதரவற்றோரை அணைப்போம் !!

”பகைவனுக்கு அருள்வாய்”
எனச் சாற்றிடுவோம் !!
ஆறுதலாய் சில செயல்
ஆரவாரமின்றி ஆற்றிடுவோம் !!

Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home