Tuesday, May 13, 2008

யாரென்ன சொன்னாலும்.....

clip_image001

Picture courtesy: The Hindu, dt 2008/05/09

சாஸ்திரீய சங்கீதத்தில்
கிடையாது சாதி
இருப்பின் இருந்திருப்பாரா
மெளலானா நாதசுரம் ஊதி?

அந்த அளவிற்கு
அவர் பிரசித்தம் !
வேண்டாம் வீணாய்
பிற சித்தம் !!

இன்று
இப் பெண்
அவ் வரிசையில் !!
இனி கிறித்தவர்
இருப்பார்
அகதமியின்
முன் வரிசையில் !!
அவள் குரல்
ஒலிக்கும் பல
அலைவரிசையில் !!

கச்சேரியில் இனி
களை கட்டுவார்
ஏசு..
இதனை உணராதாரை
இன்றே நீ
ஏசு..

பருப்புக்கு உதவாத
”செருப்பு” விஷயம் தொட்டு
ஒன்றுக்கும் உதவாத
”ஒன்றுக்கு” வரை

தொந்திரவு தருவார்க்கு
ஒரு சேதி…
உணர்வீர் அதனை
இத் தேதி...

வம்புச் சண்டையை
வீணில் அழைக்காதீர் !
அரசியலை இசையுள்
அவசியமின்றி நுழைக்காதீர் !!

ஒரு சிலர் மட்டும்
பாடத் தந்த வரமா
”சொகசு ஜூட தரமா” ?

எவர்க்கும் பொதுவானது
ராகம் தாளம்...
எதற்கு வீணில்
எகத்தாளம் ?

அகிலத்தில் பற்றற்றவரை
அன்னை என்றழைக்கிறது
அச் சமயம்..
அவர்களையும் வசப்படுத்தியிருக்கிறது
இவ் இசை
இச் சமயம்...

சாஸ்திரியையும் தீட்சதரையும்
உடுமலையையும் ஊத்துக்காடையும்
பிற மதத்தினரும் பாட
அந் நெறியாரும்
அனுதினம் அதனை
நாட....

வளரும் நம் இசை
மண்மிசை !!
ஒலிக்கும் நம் புகழ்
எண்டிசை !!

கேட்டதையே
திரும்பத் திரும்பக்
கொடுத்தாலும்
கேட்காதவற்றை
தோண்டித் தோண்டி
எடுத்தாலும்

கர்னாடக சங்கீதம்
வற்றாத ஒரு கடல் !!
ஒக்குமோ இனியும் அதில்
ஒரு சிலரை ஒதிக்கிடல் ?

அன்னையே..
எதிர் பார்க்கிறேன் ஒன்றை
உன்னிடத்தில் !!
உருவேற்றி விடு இதனை
உன் திடத்தில் !!

மாற்றி விடு
பல நாள் பட்ட
விதிகளை !!
பாடு தமிழில் புதிய
க்ருதிகளை !!

நாவில் நீ
தமிழ்க் க்ருதிகளை
தேம்பாது அணி !!
கேட்க விழைகிறேன்
உன் மூலமாய்
தேம்பாவணி !!

Labels: , , , , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home