Friday, May 02, 2008

12 - 22 - 30.....

விடுவீர் வாலிதாசனுமா
எனும் நினைப்பை !
மாற்றுங்கள் உங்கள்
கனைப்பை !!

மங்கையரின்
அங்க அளவை
எங்களவனும் எழுத

வந்தது எமக்கு பீடு
போனது போக்கறியாது
நமது நாடு

என...
நீளப் பாடேல்
பிலாக்கணத்தை !!
நீக்குவீர் நற்சிந்தை
இலாக் கணத்தை !!

மூன்று எண்கள்
கண்ட உம் கண்கள்...

ஞாபகப்படுத்தியதோ நிணத்தை ?!
நான் சொல்ல வந்தது
பணத்தை !!

பெருக்குவீர்
அவை ஒவ்வொன்றோடும்
ஆயிரம் கோடிகள் !!
நாள் தோறும்
நாட்டில் அவற்றை
நாக்கில் கொண்டுள்ளார்
பாயிரம் பாடிகள் !!

ஆம்..
தீர்ந்தது இன்று பலரின்
தாளாக் கோபம்....
காரணம்
ஒரு துறை
கடந்த மூன்றாண்டுகளில்
கண்ட
கணக்கறியா லாபம் !!

225px-Laluprasadyadav

அத் துறையின் பெயர்
ரயில்வே எனும்
இருப்புப் பாதை !!
அதனை ஆதாயமாக்கியவன்
லாலு எனும்
இணையற்ற மேதை !!

இன்று இலங்குகிறது
இத் துறை
இந்திய பொருளாதாரத்தின் வேராய் !
இதன் நிலை
சில காலம் முன்பு
நேருக்கு மாறாய் !!

லாபமாய் ஓட்டு
இல்லையேல்
லாவண்யமாய் பூட்டு
என...

அரசு அறிக்கையை
விதி நீட்ட...
அமைச்சர் பலர்
அமைதியாய் முயன்றும்
முடியவில்லை
நிதி ஈட்ட...

அரசு கொடுத்திருக்கும்
ஆதி நாளில்..
இத்துறையை தனியாருக்கு !!
இச் சந்தேகம்
இன்று
இனி யாருக்கு ?

அரசு என்றால்
அலங்கோலம் என
அரற்றுவார் சிலரால்
அவமானப்பட்டது
அன்று
அத் துறை !!
அத்துணை
அழுக்கு நிரம்பிய
அதனை
அலம்பி விட்டான் இன்று
இத் துரை !!

தமக்கு முன்
பணியில் இருந்தாரை
தூற்றாது...
பயணச் சீட்டின் விலை
ஏற்றாது...
பணியினின்று பலரை
மாற்றாது...

லாலுவின் இச்சாதனை
பெரிது !!
அறியுங்கள் அதனைச்
சிறிது !!

மொத்தத்தில்...
மத்திய அரசு
போற்றுகின்றது லாலுவை !!
என்ன செய்யுமோ
நம்மூர்
பாலுவை ?

Labels: , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home