Friday, May 16, 2008

ஒரு நாயின் டைரிக் குறிப்பு....

dog praying

நன்றி என்றதும்
நினைவுக்கு வருபவன்
நான்....
ஒப்பாகுமோ என்முன்
வேறு எதுவும் தான்?

வையத்துள் என் தொழில்
வாஞ்சையாய் வாலாட்டுதல் !!
காவலுக்கு நான் இல்லையெனில்
காணக் கூடுமோ மனிதனிடம்
காலாட்டுதல்?

வருவோர் முகம்
திருடனாக இருப்பின்
நான் முறைப்பேன் !!
இரைந்து குரைப்பேன் !!

காவல்துறையில் நான்
பிரதானமான விலங்கு !!
கிடைத்திருக்கிறது என்னால்
குற்றவாளி பலருக்கு
விலங்கு !

டோபர்மேன்
டேல்மேஷியன்
பொமெரேனியன்
லேப்ரடார் என
என்னுள் பல ஜாதி !!
மனிதனுக்கு அன்பு
என் மீது அலாதி !!

மனிதன்..
உடைமைகளை பாதுகாக்க
என்னை நம்பி இருக்கான்
இன்று...
என்னை வைத்து
அடித்துக் கொள்கின்றார்
“இரு கான்”....

என்னை..
ஒருவன் வீட்டில்
மற்றொருவன் பெயரில்
கூப்பிட...
முடிவெடுத்து விட்டேன் நான்
கடவுளை நம்பி கையைக்
கூப்பிட

தேவனே...
வேண்டாம் எனக்கு
அரசியல் வாசம்..
என் வழி
என்றும்
எல்லோருக்கும்
விசுவாசம் !!

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home