Monday, May 12, 2008

ஏற்றமும் சீற்றமும் - 02

எதனால்
உலகு நம்புகிறது
“எதனால்”?

தீர்க்குமா துயரை
தாவரத்தினின்று வரும்
எரி சக்தி ?!
சரியென்று படவில்லை
இந்த யுக்தி !!

பயிரிடுகிறது உலகம்
சோளத் தோப்பாய் !!
எதற்கும் அஞ்சாது
விலையேறுகிறது எந்தன்
பீப்பாய் !!

விளை நிலம் இருப்பது
வயிற்றுக்கா?
வண்டிக்கா?
யார் தான் இன்னணம்
கண்டிக்கா?

உலகே!
இனியுமா
இறங்கும்
என் விலை
எனும் கனவு?
இன்றே அடுத்த
செயல் என்னவென்று
வினவு

வாகனம் மீது
பற்றைக் குறை !
தானே மறையும்
பற்றாக்குறை !!

இருக்கவே இருக்கிறது
பொதுப் பேருந்து !!
அனைவரையும்
அதில் செல்ல
நீ உந்து !!

உபயோகித்து தூக்கி எறியும்
பண்பினை கத்தரி !!
மறுமுறை பயனாக்கும்
முயற்சியை கற்றறி !!

மின்சாரத்தை
மிகக் குறைந்த அளவில்
பாதரச விளக்குகள்
இழுக்கும் !
அதனை அமல்படுத்த
வருமா இழுக்கும்?

தெருவோரத்தில் தெரிகிறது
காய்கறி மண்டி !
வேண்டாம் அங்கு செல்ல
வண்டி !!

விடுவோம் யாரால்
இந்நிலை எனும்
முழக்கம் !!
மாற்றுவோம் நெடுநாளைய
பழக்க வழக்கம்

-- முற்றும்

Labels: , , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home