Tuesday, April 29, 2008

உலக நாயகன்......

gse_multipart17173

அழுகையும் முத்தமும்
அவனது முத்திரை !
அனேக தினங்களில்
அணுவளவும் இல்லை
அவனுக்கு நித்திரை !!

பணம் எண்ண
படம் பண்ண
படவுலகில்
பலர் உளர்....
வரலாம் அதனால்
தாளாத் தளர்...

அதில் இல்லை
அவனுக்கு உடன்பாடு !
அவற்றால் செரிக்காது
அவனுக்கு சாப்பாடு !!

முயற்சி புதிதாக இருப்பின்
முழுமையாய் இணங்குபவன் !
முற்றிலும் திறமையை
முழுமூச்சாய் வணங்குபவன் !!

குட்டனாய்
திருடும் துட்டனாய்
சப்பாணியாய்
சீனுவாய்
நாயகனாய்
பேசாதவனாய்
தேவனாய்
வசூல் ராஜனாய்
தென் இலங்கை தமிழனாய்
ஆளவந்த நம்மவன் !
திரையில் இத்தனை
திருமுகம் காட்டியவன்
எம் மவன்?!

தசாவதாரத்தில் முதலாவது??....
மச்சம்...
உண்டா கமலுக்கு
மச்சம்?

இது தான்
இன்றைக்கு பலரது அச்சம் !
இருக்கின்றார்
இரு கண் விரிந்து
எதிர்பார்ப்பெனும்
அவதியின் உச்சம் !!

என் விடை?
என்றும் போல்
ஒன்று தான்...
உணர்ந்தால்
நன்று தான்....

நமக்கு முக்கியம்
படமல்ல
பிடிக்கவிருக்கும்
இடமல்ல

விட்டுச் செல்லவிருக்கும்
தடம்
அதன் பாதையில்
தமிழ்த் திரை பிடிக்கும்
நாளைய தேதியில்
வடம்

Labels: , , , , , , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home