Wednesday, May 21, 2008

சூறையும்...நடுக்கமும் - 1

burma nargis

தேக்குக்கு பெயர் போன
மண்..
தேம்பிச் சிவந்திருக்கிறது
அதன் கண்...

‘எல்லாம் எங்களின்
பிராரத்த கர்மா’
கதறுகிறது பர்மா

நர்கீஸ் எனும்
சூறாவளி
தந்திருக்கிறது அதற்கு
ஆறா வலி...

முறிந்து விழுந்தன
முதிர்ந்த மரங்கள்..
உதவிக்கு ஏங்குகின்றன
ஊரார் கரங்கள்...

எங்கு காணினும்
சொல்லொணாச் சோகம் !!
முன் எச்சரிக்கையால்
உண்டாகவில்லை உபயோகம்!!

இது நடக்கு முன்
புயல் கரையைக்
கடக்கு முன்..

இந்தியா கொடுத்தது
48 மணி நேர
அவகாசம் !
அதற்குள் அரங்கேறி விட்டது
அட்டகாசம்...

பர்மாவின் பெரிய நதி
ஐராவதி !!
அனுதினமும்
அதன் பொருளாதாரம்
அயராது இருக்க
அதுவே கதி !!

இயல்பாகவே அது
சீறிப் பாயும் !!
இப்புயலால் இன்று
அடித்துச் சென்றததில்
அனைவரது பாயும் !!

எங்கு காணினும்
வெள்ளம் !!
வெதும்புகிறது உள்ளம் !!

போதாததற்கு
சீனாவும் நிலநடுக்கத்தின்
சீற்றத்தில் ஆட...
சிதிலங்களுக்கு நடுவே
சிறை வைக்கப்பட்ட
சிறுவரை அனைவரும் தேட...

நெஞ்சம் விம்முகிறது!
குரல் கம்முகிறது !!

Labels: , , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home