Wednesday, April 30, 2008

விலைவாசி.....

விலை வாசி!
சொல்லும்படி இல்லை
விலைவாசி!!

அரிசி, பருப்பு
எரி வாயு, எண்ணை ...
அனைத்தின் விலையும்
கைக்கெட்டா இடத்தில் !!
பொருட்களை
பார்க்க மட்டுமே முடிகிறது
படத்தில் !!

இன்னணம் ஏறலாகாது
அத்தியாவசியப் பொருள்கள் !!
முறையிடுகின்றன
முக்கு மூலையெல்லாம்
செய்திச் சுருள்கள் !!

பதவியில் இருக்கும் அரசுக்குப்
பொறுப்பில்லை என்று ஆக..
பாமர சனத்திற்கோ
பருப்பில்லை இன்று வேக ..

அநியாயத்திற்கு ஏறிய
அகவிலை...
அரசின் காதில்
ஏன் இத்தனை நாள்
புகவிலை ?

நிதியமைச்சருக்குத் தூக்கம்
நிரந்தரமாய் நீக்கம்
காரணம்..
பண வீக்கம்

உழவினின்று
நீங்கும் நிலமா ?
உலகோரின்
வாங்கும் பலமா?

எதனால் ஏற்பட்டது
இந்த ஏற்றம்?
காண முடிகிறது மக்களிடத்து
கட்டிலடங்கா சீற்றம் !

இந்தியன் ஒவ்வொருவரின்
இன்றைய கேள்வி...

நிலையாது நிரந்தரமாய்
நீங்குமா முடையும்?
நீக்குமா துயரை
ஏற்றுமதித் தடையும்?

இல்லையேல்.....
ஆட்சி வலுவிழந்து
உடையும் !!
கிழியும் அதன் முன்
ஆட்சியிலிருப்பார் உடையும் !!

Labels: , , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home