Thursday, May 01, 2008

மே தினம்...

44137219_DSCN0022

உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை !
மீசைக் கவிஞன்
அன்று வைத்த
சிந்தனை !!

தண்ணீர் தட்டுப்பாடு..
தடையான மின்சாரம்..
தரத்திற்கு தகாத விலை..
தற்கொலை..
என..

தடுக்கி விழுந்தால்
தமியன் உழவனுக்கு
தனது நாட்டில்
பரிதாப நிலை !!

ஆயினும்..
அவனியில்
அவன் குறித்து
அணுவளவும் இல்லை
அனுதாப அலை !!.

பாரதியின் வாக்கு
பொய்த்ததா?
நம் இலக்கியமே
நமக்கு கைத்ததா?

காய்ந்து கிடக்கிறது
வயல் !
கால் வயிற்றுக் கஞ்சி
ஆகிவிட்டது அவனுக்கு
அயல் !!

கனிவாக
கனி உண்ட
கூன் கிழவியும்
கூறினாள் அன்று...

”வரப்புயர” நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோன் உயரும்
கோன் உயர அரசு உயரும்
என்று...

மறந்து விட்டதோ
அவள் பெயரை
மண்ணும்?
உழவன்றி என்னணம்
உலகம் உண்ணும் ?

காலத்தே உழுபவன்
காசில்லாமல் அழுபவன்
குடியானவன்...
கண்ணீரன்றி வேறொன்றை
குடியான் அவன்....

அன்றாடம் இதுவே
என்றான

அவன் வாழ்வை...
தலைத் தாழ்வை..

செய்யவில்லை அரசு
சட்டை !
தள்ளப்படலாகாது அந்நிலைக்கு
நீலச் சட்டை !!

உழவன் இருக்கிறான்
கடுஞ் சினத்தில் !!
தொழிலாளனுக்காவது
தோள் கொடுப்போம்
இன்றைய தினத்தில் !!

Labels: , , , , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home