Monday, April 17, 2006

நிலம் - 16

நாள் ஆகும் !!
மெய்யில் வெய்யில் ஏற
நிலம் வேகும் !!

வயலின்
களை மாறும் !!
பயிர் ஊடே
களை ஏறும் !!

அதை பிடுங்க
ஊரும் ஊரும் !!
வேலையில் ஊறும் !!
ஊறிய கைகள்
களைப்பாறும் !!

ஒரு நாள்...
உருவாகும் புதிர் !!
கருவாகும் கதிர் !!
நிறையும் குதிர் !!

இப்படித்தான் உருவாகிறது
சந்தடி இல்லாமல் ஒரு
சந்ததி !!

இதைத் தான்
சூடி தந்த கிழவி
"வரப்புயர" என்று
பாடினாள் !!
அதியமானுக்கு அரசின்
இலக்கணம் சூடினாள் !!

படித்தால் நம்
சிறப்புயரும் !!
பிறப்புயரும் !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home