Monday, April 17, 2006

நிலம் - 15

வெல்லும் தன்
நெல்லும்
என
உழவன் நிலத்தைக் காப்பான்
அல்லும்....
இப்படி சில நாள்
செல்லும்..

விதை-
நிலமகளின் சதை
கீறும் !!
அன்றோடு அதன்
கதை தீரும் !!

மீண்டும்
விதையாவது எப்போது
என எண்ணி
விதை போகும் !!
மண்ணோடு மண்ணாய்
ஆகும் !!

உருவாகிறது நாற்று !!
மெல்ல உரசுகிறது காற்று !!
உருண்டோடுகிறது பிற அழகு
இதன் முன் தோற்று !!

எங்கும் பச்சை !!
பசை தரும் பச்சை !!
அப் பச்சைக்குத் தான்
அவனியில் அனு தினமும்
சர்ச்சை !!

எச்சையோடு அப்
பச்சை சேர்ந்தால் தான்
இழுக்க முடியும்
மூச்சை !!

அது இல்லையேல் எவரும்
பிய்த்துக்கொள்வார் பிச்சை !!
எடுப்பார் பிச்சை !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home