Monday, April 03, 2006

நிலம் - 08

அவன் தான் முன்பு
நிலத்தை தோண்டி எடுத்தான்
கேழலாய் !!
அந்நிலத்தில் அன்றோ
இன்று நடக்கிறது காரியம்
ஊழலாய் ?!

நிலம் ஆளும் மகள்
ஓட்டுக்கு கரம் குவித்தாள் !
பிறகு சொத்தையன்றோ
குவித்தாள் ?!

பாதங்கள் படியும் நிலம்
பஞ்ச பூதங்களில் ஒன்று !!

அவனே விண்ணரசு !!
அவன் மண்ணில் அரசாக
மண்ணுக்கு வந்தான் -
பிருதிவி லிங்கமாக
கஞ்சியில் !!

திக்கெண் நிற்கும்
முக்கண் கொண்ட
சொக்கனை
முதற்கண் என மதிக்காது
மண் என மதித்த

அவ்வூர் சந்நியாசி
வாழ்கிறார் இன்று
சிறைக்
கஞ்சியில் !!!

அவர் செய்தது விகற்பம் !!
ஆதலின் ஆனார்
மிக அற்பம் !!

-- தொடரும்

0 Comments:

Subscribe to Post Comments [Atom]

<< Home