Thursday, April 13, 2006

நிலம் - 14

உரம்!
தாவரம் செழிக்க வரும்
வரம் !!

எரு !!
நிலம் தொழும்
குரு !!

நிலமகள் கவிதை !!
உழவன் கவிஞன்!!
இவள் கை பற்றிய
கொழுநன் !!

அவள் சொல்கிறாள்
அவனுக்கு...
விதை அதை
விதை !
தொடங்கும் கவிதையின்
கதை !!

உழவன்
தலை சீவுகிறான் !!
வேலைக்குத் தாவுகிறான் !!
இனத்தைக் கூவுகிறான் !
தானியம் தூவுகிறான் !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home