Monday, April 10, 2006

நிலம் - 11

மூன்றாவது நிலம் -
அது விளைகளம் !!

கழனி
கேதாரம் என
பல பெயர் அதற்கு !!
அறிமுகம் தேவையில்லை
இதற்கு !!

கழனி !
பார்த்திருந்தால்
போயிருக்க மாட்டான் முருகன்
பழனி !!

வாய்க்கால்...
வயல்...
விளைச்சல்...
உண்டு பண்ணும்
இன்பமான உளைச்சல் !

நிலமகள்
தருமம் கருதி
கருமம் ஆற்றும்
இடம் !

அது மருதம்..
மரகதம் அதன்
சருமம் !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home