Thursday, March 30, 2006

நிலம் - 06

ஐவகை நிலத்தில்
உவகை பொங்க
நான்கை
நிலம் கொண்டது !!
மீந்த ஒன்றை
ஜலம் கொண்டது !!

நிலம்....
அதன் ஜன்மப் பகை
உப்பு ஜலம் !!

அவ்விரண்டும் ஒன்றா !!
பிறகு எங்ஙனம் ஆகும்
ஒன்றா ?

இரண்டும் இரண்டற
தழுவாது !!
தன் விதியினின்று
வழுவாது !!
நழுவாது !!

காரணம்
அவ்விரண்டுக்கும் ஒவ்வாது !!
ஒவ்வாததைக் கவ்வாது !!
கவ்வினால் எங்ஙனம்
உருவாகும் ஜவ்வாது ?!

-- தொடரும்

0 Comments:

Subscribe to Post Comments [Atom]

<< Home