Monday, April 03, 2006

நிலம் - 07

நிலம்..
மனிதனின் பலம் !!
இதை அடையத்தான்
வைக்கிறான் அவன்
கிரி வலம் !!

நிலம் புலம்
இருந்தால்
கொழிக்கும் நலம் !
செழிக்கும் குலம் !!

செயலை இறைக்கும்..
செவியை மறைக்கும்...
தந்து
நன்னெறி காட்டியபடி
வாழும் மனிதருக்கும்

மண் வெறி எனும்
நில ஆசை கண்ணை
மறைக்கும் !

மனிதன்
உழுத போதும்
அழுத போதும்
நிலம் தான் தந்தது...

சீதையை !
கீதையை !!

ஹரியின் தாரம் வந்தது
போர் அடிக்கும் களத்திலே !

ஹரியின் ஆதூரம் வந்தது
போர்க்களத்திலே !!

-- தொடரும்

0 Comments:

Subscribe to Post Comments [Atom]

<< Home