Monday, April 10, 2006

நிலம் - 12

மருதம்..
அதன் அழகு
மதுரம் !!
நிலமகளுக்கு
நிதம் மதம் தரும்
அமிர்தம் !!

உழவன் !!
நிலமகளை தினம்
தொழுவன் !!

ஒரு போதும் அவன்
பிற ஒன்றை
தழுவன் !!
அறம் வழுவன் !!
தன் வேலையினின்று
நழுவன் !!

அதிகாலையில் எழுவன் !!
உழுவன் !!
உழாக்கால் அழுவன் !!
கால் கை கழுவன் !!

தள்ளாமை வந்த போதும்
எள்ளாமை வராது
அவனைக் காப்பது
உழவைத் தள்ளாமை !!
அதில் அவன் காணும்
வெள்ளாமை !!

அவன்
அகராதியில் இல்லை
முயலாமை !!
அற வழியின்றி
பிற வழி
செல்லாமை !!

புவியில் அவன் போக்குவது
இல்லாமை !!
இதை உணராதிருப்பது
கல்லாமை !!
அவ்வாறு இருப்போர்
கல் ஆமை !!

-- தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home