Thursday, March 30, 2006

நிலம் - 05

பாண்டவன் ஐந்து !!
காகுத்தன் ஆனான்
"குகனொடும் ஐந்து" !!

நமசிவாய எனும்
அட்சரம் ஐந்து !!
ஆனைமுகனின் கரம்
ஐந்து !!

அவதாரத்தில்
ஆண்டவன் ஈரைந்து !!

இது போலவே
குறிஞ்சி
முல்லை
மருதம்
நெய்தல்
பாலை என
நிலம் ஐந்து !!

நிலத்துக்கு பெயராக அமைந்த
ஐந்தினை
ஐந்திணைக்கும்
சொல்வர் !!

புணர்தல்
இருத்தல்
ஊடல்
இரங்கல்
பிரிதல் என
அவ் ஐந்திணைக்குரிய
உரிப்பொருள் ஐந்து !!

ஐந்து இத்தனை !!
ஆஹா! தமிழின்
அழகு எத்தனை !!

வைத்திடுவீர் வண்டமிழை
அகத்தினை!
ஆகிடுவீர் தமிழ்ச்
செல்வர் !!
ஆகின்
உமது பேச்சு கேட்க பலர்
செல்வர் !!

-- தொடரும்

0 Comments:

Subscribe to Post Comments [Atom]

<< Home