Thursday, January 07, 2010

இருபது வருடங்கள். . . – 5



மக்கள் மனதில் உட்காருதல் !!
மங்காப் புகழ் உச்சியில்
மட மடவென்று ஏறுதல் !!

மாறும் காலத்துக்கு ஏற்ப
மாறுதல் !!
நாளைய சந்ததியினர்
நம் பெருமை கூறுதல் !!

பாடகர் ஒருவரின்
பாங்கான வளர்ச்சியை

நான்காக இவ்வகையில்
நாம் பிரிக்கலாம் !!
ஏக்கம் தாக்கம்
தேக்கம் விரிக்கலாம் !!

முன்னம் பாடியவர்கள்
முயன்று பெற்ற
முதலாவதை
முதலாவதாய்

எந்த மக்கள் முன்
எண்பத்தொன்பதில்
எதிர் நின்றாரோ

அன்றே சுதா
அழகுற செய்து விட்டார் !!

அடுத்து முயலாமல்
அடுத்தபடி
அடுத்த படி என

அதி விரைவில் யாரும்
அவ்வளவு எளிதாக எட்டார் !!
அதனையும் சுதா
அசாத்தியமாக தொட்டார் !!

எண்பத்தொன்பது தொடங்கி
எட்டு பத்து ஆண்டுகளாய்

எமது வீட்டிலன்றி
எல்லோர் வீடுகளிலும்
எண்ணற்ற நாடுகளிலும்

AVM
Amudham
Koel
OMI
RPG
Sangeetha
Sony Nad
Vani என

கும்பல் கும்பலாய் சுதாவின்
குறுந்தகடுகள் குவிந்தன !!

அகல விரிந்த காதுகளும்
அகிலத்தார் கண்களும்

சகல காலமும்
சதா சுதாவின்
சங்கதி மீது கவிந்தன !!

கல்சுரலில் சுதா என்றதும்
கல்லுரலை மக்கள்
கவலையின்றி உதறினர் !!

சஞ்சாரம் கேட்டார்
சம்சாரம் மறந்து
சற்றே பதறினர் !!

எல்லே இளங்கிளியே
எனப் பாடும் மார்கழியில்
நுங்கம்பாக்கம் கல்சுரலில்
நுழைந்தேன் 12/13/97ல்...

LA எனும்
லாஸ் ஏஞ்சல்ஸில் 1998ல்....

செம்மங்குடியின்
சென்டினரி 2008ல்...



இதனூடே
இடையறாது
இதர பிற
இடங்களில்...

செவி கொடுத்து..
”சீட்டு” கொடுத்து..

ஆனந்தித்து கேட்டாயிற்று !!
ஆயிரம் பார்த்தாயிற்று !!

வந்து விட்டது எனக்கும்
வயதினை ஒத்த நரை !!
இருப்பினும் ருசிக்கிறது
இசையெனும் இரை !!

எங்கு கேட்டாலும்
எப்படி கேட்டாலும்
எவ்வளவு கேட்டாலும்
எவரைக் கேட்டாலும்
“எவரைக்” கேட்டாலும்

இன்னும்
“இன்னும்” எனும் எண்ணம்
இருக்கின்றது பிரதானமாக !!
இருக்க முடியவில்லை என்னால்
இங்கு தான் நிதானமாக !!

-- தொடரும்

Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home