Monday, January 04, 2010

இருபது வருடங்கள். . . – 2

சங்கீதச் செம்மல்
சந்தானத்தின்

அன்றைய கச்சேரி
அந்தி மாலை
அஞ்சரைக்கு !!

அடியொற்றினோம்
அன்னையும் நானும்
அகதமி அரங்கினுள்

மண்டையில் வெயிலேறி
மதியம் இரண்டரைக்கு !!

சந்தானமா ?
சூப்பர் ஸ்டாரா ?

பாடவிருப்பது யாரென
பார்த்தோருக்கு வியப்பு
பாதாதிகேசம் வரும்படி

நுழைவுச் சீட்டு பெற
நுழைவாயில் தாண்டி
நுழைய

முயன்றும் எம்மால்
முடியாமல் ஆயிற்று !!

கண் மூடி
கண் திறப்பதற்குள்
கண் எதிரே

சந்தானத்தின் கச்சேரிக்கு
சரமாரியாய் சீட்டுகள்
சரசரவென விற்றுப் போயிற்று !!

பெருத்த ஏமாற்றத்தில்
பெருத்த
பெருத்த சீற்றத்தில்

வெறுங் கையோடு
வெளி வந்து
வெறுத்துப் போனேன் !!

அனுபவத்தின் ஆரம்பமே
அத்தமனமானது !!
அடித்துச் சொல்வேன்
அந்த ஏமாற்றம்
அதி கனமானது !!

”இரண்டரைக்கு தொடங்கிய
இரண்டு மணி கச்சேரி
இலவசமடா !!
இப்போது போனாலும்
இனிதே கேட்கலாம்
இரண்டொரு துக்கடா !!”

இழுத்தாள் என்னை
இனிய அன்னை !!

கேட்க வந்தாரை
கேட்க முடியவில்லை !!
என் வருத்தம்
என்னின்று வடியவில்லை !!

உள் நடப்பதை விரும்புவதா ?
உடன் ஊர் திரும்புவதா ?

வேண்டா வெறுப்போடு..
வேண்டாமெனும் மறுப்போடு...

உளம் தத்தளிக்க..
உள்ளே கால் வைக்க
உடல் எத்தனிக்க ..

ஏன் இப்படி? எனும்
ஏமாற்றத்தோடு
ஏறினேன் அகதமியில் படி !!

அன்று
அப் படி
அலுப்பை தந்தது
அப்படி !!

அரங்கினுள் வைத்தேன்
அடி !!
ஏக காலத்தில்
ஏகமாய் வியர்த்தேன்
பல நொடி !!

L-Board பாடகருக்கு
எள் போட இடமில்லாது

நின்று கேட்டவாறு
நிரம்பி வழிந்தது கூட்டம் !!
வசீகரிப்பதாய் இருந்தது
பாடகரின் முகவாட்டம் !!

சுற்றம் பார்த்து...
”சுதா”ரித்து...

பாடுவது யாரென
கேட்டேன் பொதுவாக !!

சுரம் வர
சுரம் பாடும்

நேர்த்தியான எம்.எல்.வியின்
நேரிடை மாணவி



சுதா என்றது அவளை
சுற்றி நின்ற கூட்டம்
மெதுவாக !!

-- தொடரும்

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home