Tuesday, January 05, 2010

இருபது வருடங்கள். . . – 3




சுருதி சுத்தமாக
சுதா அன்று பாடிய

கீர்த்தனைகள் கூட்டத்தை
கிறங்கடித்தன !!
செம்மையாய் அவை
செய்வதறியா சுகத்தில்
நகங் கடித்தன !!

சங்கதிகள் எனக்கு
சற்றுமில்லை ஞாபகத்தில் !!

கச்சேரி முடிந்து
கணக்கிலார் வெளியேறினர் !!
கருத்தை கூறினர் !!

ஆஹா என
ஆனந்தித்தார் ஒருவர் !!
என்னமா குரல் உருளுகிறது
என அங்லாய்த்தனர் இருவர் !!

" MLV’s efforts
Are not wasted !!
This is the best
I have ever tasted " !!

ஆங்கிலத்தில்
ஆராதித்தார் ஒருவர்
ஆலாபனை தந்த
ஆனந்தபாஷ்பத்தில் !!

"தந்தனானா தன்ன
தந்தனானா தன்ன என
“ப்ரும்மம் ஒகடே” வில்
பின்னி விட்டாள் !!

தனது குருவை மிஞ்சியவளாய்
தனித்து மின்னி விட்டாள் " !!

" காதில் சுருதி இன்னும்
ஓய்ந்த பாடில்லை !!
இனி சுப்புடு
இவளை எழுதா ஏடில்லை "!!

" எந்த ராகமாயினும்
எடுத்தவுடன் தெரிகின்றதே
இழை !!

கழுத்துக்கு ஏற்ப
கனகச்சிதமாய் ஆடுகின்றது
காதின் குழை !!

இன்று முதல்
இவள் காட்டில் மழை " !!

அடித்துச் சொல்கிறேன்
அடுத்த வருஷம்
அவளுக்கு ”அஞ்சரை” என்றும்...

பிசிறில்லா
பிருகாவில்
பிய்த்து விட்டாள் என்றும்...

வகை வகையாய்..
மிகை மிகையாய்..

ஒவ்வொருவரும்
ஒவ்வொன்று சொல்லி
ஒருவாறு தங்கள்

ஆனந்தத்தை பகர்ந்தனர் !!
அரங்கத்தினின்று நகர்ந்தனர் !!

கடைசியாய் வந்தது
அற்புதமான ஓர் விமர்சனம் !!
சுதாவின் பெருமை
அதனில் நிதர்சனம் !!

-- தொடரும்

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home