Wednesday, January 06, 2010

இருபது வருடங்கள். . . – 4


Pic courtesy: The Hindu, Indias National Newspaper

"அபரிமிதமான பக்தி !!
அது தான் எம். எஸ் சக்தி !!

சிம்ம கதி
சர்ப்ப கதி
கஜ கதி
ரிஷப கதி

ரங்கனுக்கு மட்டுமா ?
ராகத்துக்கும் எட்டுமா ?

நதி கதியில்
நம்மை சூழும்

பிரமாதமான சுருதி
பிரவாகமாய் !!
பிரமிப்பூட்டும் வேகமாய் !!

அதுவே எம். எல். வி யின்
அசாத்தியமான வரம் !!
அசத்தும் தரம் !!

ஏற்ற ராகத்துக்கு
ஏற்ற
ஏற்ற இறக்கம் !!

உச்சரிப்புக்கு ஒரு
உத்தரவாதம் !!
சுரத்தானம் பிரதானம் !!

அது டி.கே. பி யின்
அகமார்க்கம் !!

சப்தமின்றி நம்மை அச்
சங்கீதம் தேட வைக்கும்
சன்மார்க்கம் !!

அவர்களது பாட்டை...
அதைத் தர
அவர்களது பாட்டை..

அதிகம் கேட்கின்...
அண்ணாந்து பார்க்கின்..

அவர் போல் பாடுதல்
அரிதென்று எண்ணி

நம்மால் முடியாது என
நாம் கும்பிடலாம் !!

ஒரு முறை சுதாவை
ஒருங்கே ஒருவர் கேட்டால்

நம்மாலும் முடியும் என
நம்மை நாமே நம்பிடலாம் !!

நவராத்திரியில் பாடும்
நம் அகத்து பெண் போலே..
போகப் போக இனி
போகப் போகிறாள்
புகழ் உச்சிக்கு மேலே !! "

விகடன், கல்கி தரும்
விமர்சனத்தை விட

அவ் வரிகள்
அன்று என்னை

இழக்கச் செய்தது வசம் !!
இன்றளவும் அதுவே நிசம் !!

இது தான் சுதாவின்
இமாலய பலம் !!

இதுகாறும் அவரை
இப்படித் தான் பார்க்கிறது
இனிய தமிழ் நிலம் !!

தன் வீட்டு பெண்
தனித் தன்மை கொண்டு
தரணியில் உயர்வது போல்

பாரம்பரிய சங்கீத உலகு
பார்க்கிறது சுதாவை
கச்சேரி விடாது !!

ஏனைய பாடகரை
ஏறெடுத்தும் அக்கூட்டம் தொடாது !!

சுதா கச்சேரியில்
சுமாராக பாடினாலும்
சுகமாக பாடினாலும்

கச்சேரி முடிந்ததும்
கண்டார் கேட்டாரது
கண்ணில் கண்ணீர் உறுதி !!

இப்படி சொதப்பாமல்
இன்னமும் பாடியிருக்கலாமே என
இங்கங்கே பலரும்....

இதற்கு மேல் எப்படி? என
இதர சிலரும்

வாடுவார் தாபத்தில் !!
வாதிடுவார் கோபத்தில் !!

இன்று வரை
இது தான் தொடர்கின்றது !!
இக்கவிதையில் செய்தியொன்று
இங்கு தான் படர்கின்றது !!

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home