Thursday, November 05, 2009

சிக்குன் குனியா. . . . - 5



2)

வெட்ட வெளியிலோ..
வெள்ளித் திரையிலோ..

ஊதித் தள்ளுதலின்
ஊடுருவலை தடுக்கவும்...

ஒரு மனதாகவோ
ஓரக்கண்ணாலோ

ஓரினச் சேர்க்கையை
ஓரளவேனும் அரசு
அங்கீகரிக்கவும்....

மருத்துவம் படித்தவர்
மருந்துக்கேனும்

புறநகரில் ஆறாம் வருடம்
புழங்கவும்..
புழங்கிய பிறகே
சான்றிதழ் அவர்க்கு வழங்கவும்...

போகும் வரை
போராடினார் அன்புமணி !!

பொறுமையாய்க் கேட்கிறேன்
ஆரோக்கியம் சுகாதாரமன்றோ
அவருக்கிட்ட முதற் பணி ?!

ஏதும் அத்துறையில் பிடுங்கினாரா?
இல்லை அவரும்
இந்நோய் வந்து நடுங்கினாரா ?

அடுத்து முயலாதே
அவர் இருந்துவிட்டார்
அமைச்சரவையில்
அரசியல் பகடை பாய்ச்சி !!

அவரால் யாது கண்டான்
அவதியோடு
அதிகாலை வேலைக்கு சென்று
அடுத்த வேளை சோற்றுக்கு
அல்லல் உறும்
அன்றாடங் காய்ச்சி ?

H1N1 என
உலக சுகாதார நிறுவனம்
உரக்க எச்சரித்த நாள் முதலாய்

அனைவர்க்கும் தடுப்பூசி தயாரிக்க
அமெரிக்கா எத்தனிக்கிறது !!
அனைத்து மருந்து தயாரிப்பாளரையும்
அந்தி பகலாய் நச்சரிக்கின்றது!!

Alcon
Alembic
Cipla
Dr. Reddy’s
Parke Davis
Ranbaxy

Astra Zeneca
Glaxo Smithkline
Merck
Pfizer
Roche
Sanofi Aventis

இவர்களுள் ஒருவரையேனும்
இராமதாஸ் அணுகினாரா

சிக்குன் குனியாவுக்கு
சீக்கிரம் மருந்து தயாரிக்கச்
சொல்லி ?

தெளிக்க ஆணையிட்டாரா
தென் மாநிலங்களில்
பூச்சிக் கொல்லி ?

இலட்சோப இலட்சம் அமெரிக்க
இராணுவத்தினரை முன்னிட்டு
இருபத்தொன்பது ஆண்டுகட்கு முன்பே
இவ் வியாதிக்கு

தடுப்பு மருந்தொன்று
தயாரிக்கப்பட்டதென்று
தகவான தகவல் அறிகிறேன் !!
நர்த்தனம் புரிகிறேன் !!

வியாதியை அவ் ஒளடதங்கள்
வருமுன் தடுக்குமா ?
வந்த பின்
வலி வராத
வாழ்க்கையை கொடுக்குமா ?

ஆயுளில் ஒருமுறையா ?
ஆண்டுக்கு ஒருமுறையா ?

என்னணம் அவற்றை
எடுத்துக் கொள்ள வேணும் ?
எங்ஙனம் அவை குறித்த
எண்ணற்ற தகவல்களை
எல்லோர் கண்ணும் காணும் ?

என்னை சோதித்தவர்கள்
எனக்கு அதனை
எதனால் அளிக்கவில்லை ?

ஆனந்தத்தை அடக்கும் இந்நோயின்
ஆதார காரணம் நுண்கிருமி !!
பிரயோசனமில்லை பொருமி !!

கணக்கில்லா நுண்கிருமிகள்
காலப் போக்கில் தனது
கையொப்பத்தை மாற்றும் !!

முந்தைய தடுப்பூசிகள்
முற்றும் பலனிழக்க

புதிய தடுப்பூசியே
புதிய கிருமியிடமிருந்து நம்மை
காப்பாற்றும் !!

அவ் வகைப்பட்டதா
“சிக்குன் குனியா”வின் கிருமி ?
என்ன செய்து கொண்டிருக்கிறது
AIIMS இருமி ?

எழுத்தாணி கொண்டு
எழுதியிருக்கிறான் எந்தை
எந்நாளும் உமக்கொரு வரி !!
பூசியிருக்கிறான் கரி !!

"கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு "

என்ன கண்டோம் யாம்
மத்தியில் உன்னை அமைத்து ?!

-- தொடரும். . .

Labels: , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home