Monday, November 02, 2009

சிக்குன் குனியா. . . . - 2

மணிக்கட்டில்
கால் மூட்டில்

பிடரில்
பிருட்டத்தில்

ஆறு மாதமோ
ஆண்டாண்டு காலமோ

வந்தாரது
வயதைப் பொறுத்து
வலி படுத்தும் !!

போது போய்விடும்
போர்த்துப் படுத்தும் !!

நாடி நரம்பெல்லாம்
நாளெல்லாம் நோகும் !!
நாளை சரியாகும் எனும்
நம்பிக்கை போகும் !!

இந்தியாவில் நான்
இவ்வருடத்திய விடுமுறையில்
இந்நோய் என்றறியாது
இரு தினம் படுத்தேன் !!

விடுமுறை முடிந்திட
”விடைகொடு எங்கள் நாடே” என
விடை கொடுத்தேன் !!

அமெரிக்கா வந்திறங்கிய
அந்த நாள் முதலாய்

வலியான
வலி ஒன்று
வதைத்தது !!

என்னமோ ஏதோவென்று
என் மனம்
எந்நாளும் பதைத்தது !!

இயல்பிழந்தேன்
இன்னதென்று சொல்லொணா
இம்சையில் இருந்து !!
இப்பிணி தரும் வலிக்கு
இல்லை இத்தேதியில் மருந்து !!

நடை குறைந்தது !!
நகை மறைந்தது !!

“கோள் என் செயும்
கொடுங் கூற்றென் செயும்”

என

சொல்லிப் பழகிய நான்
சொல்வதறியாது நின்றேன் !!

நமக்கு ஒருவேளை
நாளும் நேரமும்
நலமில்லையோ என்றேன் !!

சகுனம் பார்த்தேன் !!
சனியை நொந்தேன் !!

சோதிடம் இனித்தது !!
என் செய்கை நினைந்து
என் கண்ணே பனித்தது !!

-- தொடரும். . .

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home