Wednesday, September 09, 2009

மங்கையராய் பிறப்பதற்கே. . . .



அனாதரவாய்
அழுதது ஒரு குடும்பம்
அதி தினமும் வாடி !!
வேதனை தீர்க்க
வேண்டியது நீதிமன்றத்தை நாடி !!

இரண்டு தம்பி
ஈரிரண்டு தங்கையோடு

இசைபட வாழ்ந்த பெண்
இஷ்ராத் ஜஹான் !!
இருந்திருந்தால் அவளை
இரண்டாவது மும்தாஜாக
மணந்திருப்பான் ஷாஜஹான் !!

”லஷ்கர் தொய்பாவின்
லட்சியத்திற்கு நீ உள்கை!!
தெரியும் எமக்கு
தெள்ளத்தெளிவாக உனது
தீவிரவாதக் கொள்கை !!”

என..
எவ் ஊரிலோ
எவ் உத்தரவின் பேரிலோ

சிந்தியாது சுட்டது
சிரிக்கும் தரத்திற்கு
சீரழிந்துவிட்ட காவல் துறை !!

அதன் முகத்தில் இன்று
”அது படுகொலை” என
விட்டது நீதித்துறை அறை !!

எப்பக்கம் நீதியோ...
எவர் நிரபராதியோ....

என்னைச் சூழ்கிறது
எண்ணொணா விசனம் !!
விசனத்தின் மூலம்
” நள்ளிரவில்
நடுச்சாலையில்
நம் பெண் தனியாய் “ எனும்
மகாத்மாவின் வசனம் !!

பதி விரதையோ...
படும் கிராதகியோ...

பட்டப் பகலிலேயே
பாதுகாப்பில்லை
பாவையர்க்கு நம்
பாரத வீதியில் !!

தருமம் மரித்ததை
தட்டிக் கேட்க

நரேந்திர மோடிக்கு
நாதியில் !!



Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home